வாகனம் மோதி முதியவர் பலி

வட மாநிலத்தை சேர்ந்தவர் போலீசார் விசாரணை
வாகனம் மோதி முதியவர் பலி
Published on

ஜோலார்பேட்டை:

பீகார் மாநிலம் நபிகஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் காமேஷ்வர் (வயது 55). இவர் திருப்பத்தூர் வாணியம்பாடி பால்னங்குப்பம் கூட்டு ரோடு அருகே இன்று அதிகாலை சாலையோரம் நடந்து சென்றார்.

அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவம் இடத்திலேயே தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com