என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • வாக்கு வாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்
    • சிறையில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 31) ஷூ கம்பெனி தொழிலாளி.

    அதே பகுதியில் முதியவர் ஒருவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது.

    அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல் (21) என்பவரும் இறுதி ஊர்வலத்தில் சென்றார். அப்போது சிவகுமாருக்கும், சாமுவேலுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    ஆத்திரமடைந்த சாமுவேல் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் சிவகுமாரை சரமாரியாக குத்தினார். இதில் சிவகுமார் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சிவகுமார் அளித்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சாமுவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 28 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே திருநெல்வேலி ரெயில்வே போலீசார் ரெயில் பெட்டிகளில் இன்று காலை சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியின் கழிவறை அருகே கேட்பாரற்று 2 பைகள் இருந்தது. அந்தப் பைகளை சோதனை செய்தபோது அதில் 28 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. பயணிகளிடம் விசாரணை நடத்திய போது அந்தப் பை யாருடையது என்பது தெரியவில்லை. ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது.

    திருநெல்வேலி போலீசார் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் இரண்டு பைகளில் இருந்த கஞ்சாவை ஒப்படைத்தனர். பின்னர் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் கஞ்சாவை கடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரே நேரத்தில் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது
    • வாகன ஓட்டிகள் அவதி

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

    விடுமுறை நாட்களில் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இங்கு பத்துக்கும் மேற்பட்ட தனியார் விளையாட்டுக் கூடங்கள் அமைந்துள்ளன.

    மேலும் அரசு சுற்றுலாத் தலங்களான படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, உள்ளன. கடந்த 2 நாட்களாக அனைத்து சுற்றுலா தளங்களும் அதிக கூட்டம் நெரிசலோடு காணப்பட்டன.

    நேற்று இங்கு உணவு விடுதிகளும், தங்கும் விடுதிகளும் கூட்டத்தால் அலைமோதின. நேற்று மாலை ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்று வீடு திரும்பும் போது ஒரே நேரத்தில் வாகனத்தில் திரும்பியதால் நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

    • குளிக்கச் சென்றபோது பரிதாபம்
    • டாக்டர் இல்லாததே இறப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுடைய மகன் திவாகர் (வயது 12).

    முருகன் கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் குடும்பத்துடன் சென்று அங்கு வேலை செய்து வந்த தாக கூறப்படுகிறது.

    திவாகர் திருப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் தங்களது சொந்த ஊரான புத்துக்கோ வில் பகுதியில் நடைபெறும் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தனர்.

    திருவிழா முடிந்து நேற்று முருகன், திவாகர் மற்றும் உற வினர்களுடன் தமிழக ஆந்திர எல்லை பகுதியில் உள்ள புல்லூர் தடுப்பணையில் குளிக்கச் சென்றனர்.

    அப்போது திவாகர் தண்ணீரில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதனை கண்ட தந்தை மற்றும் உறவினர்கள் அவனை மீட்டு ராமநாயக் கன்பேட்டை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே திவாகர் பரிதாபமாக இறந்தார்.

    இதனை அறிந்து அவரது தாய் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுத காட்சி பார்ப்போரை நெஞ்சை உருக்கியது.

    இச்சம்பவம் குறித்து குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 5 ஆண்டுகளாக கோடை விழா நடைபெறவில்லை
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலையில் பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலை வரை செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது.

    ஒவ்வொரு வளைவுகளுக்கு தமிழ் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. பயணிகள் கொண்டை ஊசி வளைவுகளில் செல்லும் போது இயற்கை காட்சிகளையும் ரசித்து செல்கின்றனர்.

    ஏலகிரி மலையில் கோடை விழா மே மாதத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று மற்றும் கோடை விழா அரங்கம் பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 5 ஆண்டுகளாக கோடை விழா நடைபெறவில்லை.

    கோடை விழா இந்த ஆண்டு நடத்துவதற்காக பணிகள் குறித்து கடந்த வாரம் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதனையடுத்து நேற்று மாலை ஏலகிரி மலை பகுதியில் கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது ஏலகிரி மலையில் உள்ள இயற்கை பூங்கா, கோடை விழா அரங்கம் மற்றும் படகு இல்லங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி இயக்குனர் ஊராட்சிகள் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, மணவாளன், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்தியாசதிஷ்குமார், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ் கே சதிஷ்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமால் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்
    • விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை, மூலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.4,.6 லட்சம் அரசு மான்யத்தில் ரூ.1,70 ஆயிரம் மதிப்புள்ள பவர் டில்லர்கள் இரண்டு விவசாய் பயனாளிகளுக்கு திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கி பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் குறித்து பேசினார்.

    வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ரா.ஆனந்தன் வரவேற்றார் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர். வளர்மதி, மாவட்ட, வேளாண்மை துணை இயக்குநர்.பச்சையப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை).ராமச்சந்திரன் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் விசாரணை
    • தீயணைப்பு துறையினர் மீட்டனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த வடச்சேரி பகுதியில் உள்ள ஒரு கிணற் றில் ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உமராபாத் போலீ சார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து உடலை மீட்டு விசாரித்தனர்.

    இதில் பிணமாக கிடந்தவர் வாணியம்பாடியை அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் சத்யராஜ் (வயது 35) என்பது தெரியவந்தது.

    இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள னர். பின்னர் சத்யராஜ் உடலை பிரேத பரிசோத னைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யராஜ் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா?, தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    கந்திலி தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் வெங்களாபுரம் பகுதியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ்.கே. மோகன்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது கூட்டத்தில் புகுந்து வாலிபர் ஒருவர் நல்லதம்பி எம்.எல்.ஏ. வை பார்த்து வெங்களாபுரம் பகுதியில் இருந்து பொன்னேரி செல்லும் சாலை ஏன் சீரமைக்கப்பட வில்லை என தகாத வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து நல்ல தம்பி எம்.எல்.ஏ. திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் திறந்து வைத்தார்
    • ரேசன் அட்டை தாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நாட்றம்பள்ளி முழு நேர ரேசன் கடையை பிரித்து பி.பந்தாரப்பள்ளி கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் கத்தாரி முழு நேர ரேசன் கடையை பிரித்து பள்ளத்தூர் கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை ஆகிய 2 ரேசன் கடையை மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. தேவராஜ் முன்னிலை வகித்தார் அதன் பிறகு மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் இணைந்து அத்தியாவசிய பொருட்களை ரேசன் அட்டை தாரர்களுக்கு வழங்கினர்.

    இவ்விழாக்களில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், நாட்றம்பள்ளி பேரூராட்சி தலைவர் சசிகலா, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனுசாமி, வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர், கூட்டுறவு சார் பதிவாளர் பூவண்ணன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் குனிச்சூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவருக்கு திருமணமாகி மயில் என்கின்ற மனைவியும் ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.

    இவர் அதே பகுதியில் பழம் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் இவர்  வேலை சம்பந்தமாக சுண்ணாம்புகுட்டை பகுதியில் இருந்து வாணியம்பாடி கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் தனது மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது பின்னால் வந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த மொபட் மீது மோதியது. இதில் வியாபாரி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 6 மாதமாக தண்ணீர் பிரச்சினை இருப்பதாக புகார்
    • போக்குவரத்து பாதிப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் திருப்பத்தூர் மெயின் ரோடு பகுதியில் பல வருடங்களாக கால்வாய் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    கடந்த 6 மாதமாக குடி தண்ணீர் பிரச்சினை இருந்து வந்தது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    சாலை மறியல்

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் நேற்று காலி குடங்களுடன் திடீரென திருப்பத்தூர் வாணியம்பாடி செல்லும் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் மற்றும் திமுக நகர செயலாளர் அன்பழகன், நகர மன்ற உறுப்பினர் கே.எஸ்.ஏழுமலை ஆகியோர் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 2 நாட்களுக்குள் குடிநீர் வழங்குவதாகவும் மேலும் கால்வாய் வசதி ஏற்படுத்திக் தருவதாகவும் கூறியதன் பேரில் அங்கிருந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • வாணியம்பாடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்
    • 100 லிட்டர் பறிமுதல்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி திருமாஞ்சோலை பகுதியில் சாராயம் விற்ற (வயது 42), பிரபுதேவா (30), நியூடவுன் பகுதியில் ஜெயசீலன் சாராயம் விற்ற சரவணன் (29), ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 52 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராயம் மற்றும் மது பானங் களை விற்ற பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன், தசரதன், சி.வி.பட்டறை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, புருஷோத்தமகுப்பம் பகுதியை சேர்ந்த முனியம்மா, மேட் டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் கைது . செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 25 மதுபாட்டில்கள், 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    திம்மாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராயம் விற்பனை செய்த அனுமுத்துராணி, பெருமாள், உஷா ஆகியோர் கைது அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். ஆலங்காயம் பகுதியில் சாராயம் விற்ற பெத்தூர் பகுதியை சேர்ந்த பார்த் திபன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு வாணியம்பாடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×