என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் பெயிண்டர் பிணம் மீட்பு
    X

    கிணற்றில் பெயிண்டர் பிணம் மீட்பு

    • போலீசார் விசாரணை
    • தீயணைப்பு துறையினர் மீட்டனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த வடச்சேரி பகுதியில் உள்ள ஒரு கிணற் றில் ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உமராபாத் போலீ சார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து உடலை மீட்டு விசாரித்தனர்.

    இதில் பிணமாக கிடந்தவர் வாணியம்பாடியை அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் சத்யராஜ் (வயது 35) என்பது தெரியவந்தது.

    இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள னர். பின்னர் சத்யராஜ் உடலை பிரேத பரிசோத னைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யராஜ் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா?, தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×