என் மலர்
திருப்பத்தூர்
- போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்
- திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த புதுப்பேட்டை ஆத்துமேடு பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மது போதையில் பொதுமக்களை அவதூறாக பேசியும் சாலையில் செல்லும் வாகனங்களை வழி மறித்தும் இடையூறு செய்து கொண்டிருந்தார்.
பின்னர் இது குறித்து பொதுமக்கள் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு செய்த அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 37) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- புதிய போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் பேட்டி
- பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பாலகிருஷ்ணன் சென்னை ஆவடிக்கு மாற்றப்பட்டார். திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஆல்பர்ட் ஜான் என்பவரை நியமித்து அரசு உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பே ற்றுக்கொண்டார்.
அப்போது போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு, போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் கூறியதாவது:- திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படும். இதற்காக 15 தனிப்படைகள் அமைத்து மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்படுகிறது. சட்டம், ஒழுங்கு மற்றும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் கடந்த 20 நாட்களாக நடத்தப்பட்ட சாராய வேட்டையில் பலர் கைது செய்யபட்டுள்ளனர்.
20 ஆயிரம் லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது. இச்சோதனை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும். திருப்பத்தூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்டம் அமைந்துள்ளது.
இதனால் சாலை விபத்துகள் அடிக்கடி நடக்கும். சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் தொடர்பான தகவல்களை 91599599919 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அவர்களின் ரகசியம் பாதுகாக்பப்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட போலீசாரிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
- குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
- கார் பறிமுதல்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே உள்ள பால்னாங்குப்பத்தை சேர்ந்தவர் இளவரசன் (வயது 32). தந்தை, மகன் இருவரும் கடந்த 1-ந் தேதி கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை கடத்தி வந்து தனது வீட்டின் அருகே காரில் மறைத்து வைத்து இருந்தனர்.
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று மது பாெகட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இளவரசன் மீது கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் கடத்தியது உள்ளிட்ட பல்வேறு சாராய வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் இளவரசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் உத்தரவிட்டார்.
- வேலை முடிந்து வீடு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 25) பெயிண்டர் இவருக்கு கடந்த வருடம் திருமணம் ஆகி மாலா என்ற மனைவி உள்ளனர்.
தற்போது 5 மாதம் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் அண்ணாமலை கடந்த
19-ந் தேதி ஆசிரியர் பகுதியில் வேலை முடித்துவிட்டு தனது மொபட்டில் வீடு திரும்பினார்.
அப்போது அச்சமங்கலம் அருகே சென்ற போது பின்னால் வந்த தனியார் பஸ் அண்ணாமலை மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அண்ணாமலை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
சேலம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
- கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்ப டுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உத விக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பத்துடன் தாங்கள் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம், மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் கல்விக் கட்டணங் கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவ ணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இத்தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
- கூட்டுறவுத்துறையின் கீழ் 551 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 551 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது.
இதில் 55 கடைகள் வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது.
இதனால் ஆய்வு, தணிக்கை, கண்காணிப்பு பணிகளை துரித , மாகமேற்கொள்ளவும், அரசின் நலதிட்டங்களான பொங்கல் பரிசு தொகுப்பு, நிவாரண பொருட்கள், இலவச வேட்டி, சேலை வினியோகம் ஆகிய பணிகளை சிறப்பாக மேற் கொள்ள ஏதுவாகவும், நிர்வாக வசதிக்காகவும், வேலூர் மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலையின் (கற்பகம்) நிர்வாக கட்டுப்பாட்டில் செயல்படும் 55 ரேஷன் கடைகள் திருப்பத்தூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் நேற்று முதல் செயல்படும். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித் துள்ளார்.
- அதிகாரிகள் யாரும் வரவில்லை
- சாலை மறியலில் ஈடுபட போவதாக எச்சரிக்கை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி ஊராட்சிக்கு உட்பட்ட8-வது வார்டு, குருமன்ஸ் வட்டம் பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பொது மக்களின் போக்குவரத்து வசதிக்காக சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஊராட்சி மன்ற நிர்வாகம் மூலம் பேவர் பிளாக் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாலையை சமன் செய்து ஜல்லி கற்கள் கொட்ட ப்பட்டது.
தற்போது சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப் பட்டுள்ளதால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தெரிவித்தும் சாலை பணியை மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் கூறினர்.
இந்தநிலையில் நேற்று திடீரென அப்பகுதி மக்கள் ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் சாலை மறியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
- பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் நிம்மதி
- பொதுமக்கள் பாராட்டு
ஜோலார்பேட்டை:
ஏலகிரி மலை நிலாவூர் பகுதியில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை மடவாளம் பகுதியை சேர்ந்த டிரைவர் அன்பு (வயது 45) ஓட்டி வந்தார்.
மங்களம் கூட் ரோடு அருகே வந்தபோது டிரைவ ருக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டது.
சமாளித்தவாறே ஒரு வழியாக ஏலகிரிமலை ஆரம்ப சுகாதார நிலையம் வந்ததும் பஸ்சை நிறுத்தி னார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரை தண்ணீர் தெளித்து கண்டக்டர் எழுப்பி ஆரம்ப சுகாதார நிலையத் துக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
டாக்டர் சுமிதா அவரை பரிசோதனை செய்ததில் ரத்த கொதிப்பு அதிகமாக இருந் தது. மேலும் சர்க்கரை வியாதி இருந்தது தெரியவந்தது. இத னால் தான் டிரைவருக்கு தலை சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது என தெரிவித்தார்.
இதனையடுத்து சிகிச்சை அளித்து ஓய்வு எடுக்க கூறி னார். இது சம்பந்தமாக திருப்பத் தூர் பகுதியில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
மாற்று டிரைவர் இல்லாத தால் சற்று நேரம் ஓய்வு எடுத்து விட்டு பின்னர் நீங் களே பஸ்சை ஓட்டி வாருங் கள் என டிரைவர் அன்புவி டம் கூறிவிட்டனர்.
சற்று நேர ஓய்வுக்கு பின் பஸ்சை டிரைவர் அங்கிருந்து பயணிகளுடன் திருப்பத்தூருக்கு ஒட்டி வந்தார். தாமதம் காரணமாக பயணிகள் அவதி அடைந்தனர் எனினும் சற்று தொலைவு கழித்து ஆபத்தான கொண்டை ஊசி விளைவு பகுதியில் வரும்போது மயக்கம் ஏற்பட்டு இருந்தால் விபரீதம் ஏற்பட்டிருக்கும் சாமார்த்தியமாக செயல்பட்டு பஸ்சை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நிறுத்தியதால் விபரீதம் தவிர்க்கப் பட்டது.
இதனால் பயணிகள் தாமதம் ஆனாலும் டிரைவரின் சாமார்த்தி யத்தை பாராட்டி நன்றி தெரிவித்து நிம்மதி அடைந்தனர்.
- உறவினர் வீடு என்று கூறியதால் பொதுமக்கள் அடித்து உதைத்தனர்
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
திருப்பத்தூர்:
நாட்டறம்பள்ளி அடுத்த கல்நார்சம்பட்டி கிராமம், கிழக்குமேடு பகுதி சேர்ந்தவர் தானம்மாள் (வயது 60), தொழிலாளி.
இவர் தனது மகன் ராமு (40), மருமகள் தர்ஷினி (33) ஆகியோருடன் வசித்து வருகிறார். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், தானம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருப்பார்.
அதன்படி நேற்று தானம்மாள் வீட்டை பூட்டி சாவியை ஜன்னல் ஓரம் வைத்துவிட்டு, வீட்டின் அருகில் உள்ள மர நிழலில் உட்கார்ந்திருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் பைக்கில் வேகமாக வந்து வீட்டின் சாவியை எடுத்து பூட்டை திறந்து உள்ளே சென்றார்.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி கொண்டிருந்தார்.
பின்னர் வீட்டிற்கு வந்த தானம்மாள், மருமகள் தர்ஷினி மர்ம நபரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தர்ஷினி மர்ம நபரிடம் நீங்கள் யார் என்று கேட்டார். அப்போது அந்த நபர் இது என்னுடைய பெரியம்மா வீடு தான். நான் அடிக்கடி இங்கு வருவேன் என கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த தர்ஷினி, மாமியார் தானம்மாவை அழைத்துள்ளார்.
சுதாரித்துக் கொண்ட நபர் திருடிய நகை மற்றும் பணத்துடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அப்போது அங்கு 100 நாள் வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள், அந்த நபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அந்த நபரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் வாணியம்பாடி அடுத்த சொக்கன்வட்டம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி (22) என்பதும், அவர் தானம்மாள் வீட்டில் திருடியதும் தெரியவந்தது.
மேலும் அவர் ஓட்டி வந்த பைக்கும் திருட்டு பைக் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து திருப்பதியை கைது செய்த போலீசார், நகை மற்றும் பணத்தை மீட்டு தானம்மாளிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் போலீசார் திருப்பதியை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் நடந்தது
- கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் பெரியவரிகம் ஊராட்சி பகுதியில் உள்ள ஆம்பூர் டெக் துத்திப்பட்டு சி.இ.டி.பி பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் பண்புகளை திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
இவர்களுடன் அரசு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உடலை வாளியில் அள்ளிச்சென்ற பரிதாபம்
- யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே மேல்பள்ளி கொயக்கமேடு என்ற பகுதியில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கதக்க வாலிபர் கிருஷ்ணகிரி வேலூர் நோக்கி செல்லும் மார்க்கத்தில் சாலை கடக்க முயன்றார்.
அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் வாலிபர் மீது மோதியது.இதில் அடிபட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அவ்வழியாக தொடர்ந்து சென்ற வாகனம் அந்த உடல் மீது ஏறி இறங்கியதில் உடல் சிதறி உருக்குலைந்து காணப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சிதறி கிடந்த உடலை சேகரித்து வாளியில் போட்டு பிரேத பரிசோ தனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் முகம் மற்றும் உடல் முழுவதும் சிதைந்த இருப்பதால் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.
மேலும் இது குறித்து போலீசார் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
- கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே கள்ள சாராயம் விற்பனை செய்த பெண்ணை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
புதுப்பேட்டை அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
சத்யா (வயது 60) என்பவர் தன் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது.
பின்னர் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.






