என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் கடத்தல்
    X

    கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் கடத்தல்

    • குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
    • கார் பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள பால்னாங்குப்பத்தை சேர்ந்தவர் இளவரசன் (வயது 32). தந்தை, மகன் இருவரும் கடந்த 1-ந் தேதி கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை கடத்தி வந்து தனது வீட்டின் அருகே காரில் மறைத்து வைத்து இருந்தனர்.

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று மது பாெகட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    இளவரசன் மீது கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் கடத்தியது உள்ளிட்ட பல்வேறு சாராய வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் இளவரசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் உத்தரவிட்டார்.

    Next Story
    ×