என் மலர்
திருப்பத்தூர்
- அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்
- அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
தமிழ்நாடு அரசின் 2 ஆண்டு சாதனைகள் தொடர்பான பல்வேறு துறைகளில் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஜோலார்பேட்டை அருகே உள்ள பால்னாங்குப்பம் கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி வரவேற்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ.வுமான க.தேவராஜி, திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம் கே ஆர் சூரி யகுமார், ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ் சத்யா சதீஷ்குமார், துணைத் தலைவர் ஸ்ரீதேவி காந்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கவிதா தண்டபாணி, சிந்துஜா ஜெகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துகொண்டு 3152 பயனாளிகளுக்கு ரூ.8.70 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதிஷ் குமார், ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் அன்பழகன், நகர மன்ற துணை தலைவர் சி.எஸ்.பெரியார்தாசன், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாரிகள் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு நன்றி கூறினார்.
- 45 வயது மதிக்கதக்கவர்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சி ஆம்பூர் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி 45 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார்.
ஆம்பூர் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்கு அனுப்பினர். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடிகர் கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு
- பொதுமக்கள் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்,
நடிகர் கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் உதவும் உள்ளங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் உதவுங்கள் தலைவர் தலைவர் ரமேஷ் வரவேற்றார் மாவட்ட பொறுப்பாளர் சூர்யா தலைமை வகித்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
மாவட்ட நிர்வாகிகள் வரதன் விக்கி நகர தலைவர் சீனு நகரச் செயலாளர் அருள் நகர பொருளாளர் கோவிந்தராஜ் சாரதி ஜெயமோகன் பொறுப்பாளர் மற்றும் ரசிகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ரோந்து பணியில் விசாரணை
- மருத்துவமனையில் சிகிச்சை
ஆம்பூர், மே.26-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோலூர் தேசிய நெடுஞ்சாலையில் கனரக லாரி ஒன்று பழுதாகி நின்றுக்கொண்டிருந்தது.
அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸ்காரர் சங்கர் ஆகியோர் ரோந்து வாகனத்தை நிறுத்திவிட்டு விசாரணை செய்ய நடந்து சென்றனர். அப்போது பின்னால் வந்த கனரக லாரி போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது மோதியதுடன் நடந்து சென்ற போலீசார் மீதும் மோதியது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸ்காரர் சங்கர் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இருவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறிந்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும்
- போலீசார் விழிப்புணர்வு
ஜோலார்பேட்டை,
ஏலகிரி மலையில் மலையேறும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏலகிரி மலை போலீஸ் நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சப்-இன்ஸ்பெக்டர் மயில்வாகனன் தலைமையில் சோதனை சாவடி மையத்தில் மலையேறும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் காரில் வருபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் பைக் ஓட்டும் நபர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் நமது குடும்பத்தை பாதுகாக்க நாம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
இதனால் வெளியில் வாகனம் ஓட்டி செல்லும் போது வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு சரியான நிலையில் உள்ளதை உறுதிப்படுத்திக் கொள் வேண்டும் என அறிவுறுத்தினர்.
- உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் காக்கங்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே புதுப்பேட்டை ரோடு ரெயில்வே மேம்பாலம் பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நள்ளிரவு தண்டவாளத்தை கடக்க முயன்றார். அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உஷா வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் நீல நிற பனியன் அணிந்திருந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீயணைப்பு துறை வீரர்கள் 6 பேர் வாகனத்தை பழுது பார்க்க தள்ளிக் கொண்டு சென்றனர்.
- தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது வாகனத்தை பழுது பார்க்க தள்ளி சென்றதாக தெரிவித்தனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி கலைஞர் நகர் பகுதியில் தீயணைப்பு நிலையம் உள்ளது. அந்த தீயணைப்புத்துறையினரின் வாகனம் பழுது ஏற்பட்டது.
தீயணைப்பு துறை வீரர்கள் 6 பேர் வாகனத்தை பழுது பார்க்க தள்ளிக் கொண்டு சென்றனர்.
அதனை அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.
மேலும் தீயணைப்பு துறையினர் வாகனத்தை தள்ளி செல்லும் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா பாணியில் வடிவேலு காமெடி போன்ற ஆ... தள்ளு... தள்ளு... போன்று சினிமா காமெடி வசனத்துடன் எடிட் செய்த வீடியோ வெளியிட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது வாகனத்தை பழுது பார்க்க தள்ளி சென்றதாக தெரிவித்தனர்.
- போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்
- திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த புதுப்பேட்டை ஆத்துமேடு பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மது போதையில் பொதுமக்களை அவதூறாக பேசியும் சாலையில் செல்லும் வாகனங்களை வழி மறித்தும் இடையூறு செய்து கொண்டிருந்தார்.
பின்னர் இது குறித்து பொதுமக்கள் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு செய்த அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 37) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- புதிய போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் பேட்டி
- பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பாலகிருஷ்ணன் சென்னை ஆவடிக்கு மாற்றப்பட்டார். திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக ஆல்பர்ட் ஜான் என்பவரை நியமித்து அரசு உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பே ற்றுக்கொண்டார்.
அப்போது போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு, போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் கூறியதாவது:- திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படும். இதற்காக 15 தனிப்படைகள் அமைத்து மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்படுகிறது. சட்டம், ஒழுங்கு மற்றும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் கடந்த 20 நாட்களாக நடத்தப்பட்ட சாராய வேட்டையில் பலர் கைது செய்யபட்டுள்ளனர்.
20 ஆயிரம் லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது. இச்சோதனை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும். திருப்பத்தூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்டம் அமைந்துள்ளது.
இதனால் சாலை விபத்துகள் அடிக்கடி நடக்கும். சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் தொடர்பான தகவல்களை 91599599919 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அவர்களின் ரகசியம் பாதுகாக்பப்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட போலீசாரிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
- குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
- கார் பறிமுதல்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே உள்ள பால்னாங்குப்பத்தை சேர்ந்தவர் இளவரசன் (வயது 32). தந்தை, மகன் இருவரும் கடந்த 1-ந் தேதி கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை கடத்தி வந்து தனது வீட்டின் அருகே காரில் மறைத்து வைத்து இருந்தனர்.
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று மது பாெகட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இளவரசன் மீது கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் கடத்தியது உள்ளிட்ட பல்வேறு சாராய வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் இளவரசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் உத்தரவிட்டார்.
- வேலை முடிந்து வீடு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 25) பெயிண்டர் இவருக்கு கடந்த வருடம் திருமணம் ஆகி மாலா என்ற மனைவி உள்ளனர்.
தற்போது 5 மாதம் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் அண்ணாமலை கடந்த
19-ந் தேதி ஆசிரியர் பகுதியில் வேலை முடித்துவிட்டு தனது மொபட்டில் வீடு திரும்பினார்.
அப்போது அச்சமங்கலம் அருகே சென்ற போது பின்னால் வந்த தனியார் பஸ் அண்ணாமலை மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அண்ணாமலை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
சேலம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
- கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
- கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் செயல்ப டுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உத விக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பத்துடன் தாங்கள் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம், மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் கல்விக் கட்டணங் கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவ ணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
இத்தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.






