என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
    X

    வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

    • தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    • வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பள்ளிப்பட்டு சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் சாமுவேல் (வயது 38).

    இவர் கிரி சமுத்திரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.

    வழக்கம்போல் தொழிற்சாலைக்கு இன்று காலை வேலைக்கு சென்றார். தொழிற்சாலையில் ஏராளமான எலக்ட்ரிக் மெஷின்கள் உள்ளன. அதனை சுத்தம் செய்யும் பணியில் சாமுவேல் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

    இதில் சாமுவேல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாமுவேல் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×