search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ள சாராயம் விற்ற 4 பேருக்கு ஜெயில்
    X

    கள்ள சாராயம் விற்ற 4 பேருக்கு ஜெயில்

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • 85 லிட்டர் கள்ள சாராயத்தை அழித்தனர்

    ஜோலார்பேட்டை :

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெரு பகுதியில் கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்த ரஞ்சித் (வயது 32), திலிப்குமார் (33), சந்தைக்கோடியூரை சேர்ந்த முருகன் (50), லட்சுமி நகரை சேர்ந்த ஜெயராஜ் (38) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 85 லிட்டர் கள்ள சாராயத்தை அழித்தனர்.

    மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×