என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • 5 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை,

    ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமை யிலான போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சின்னமூக்கனூர் அருகே உள்ள சாமியார் கொட்டை பகுதியில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் மற்றும் கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்த பாக்கியராஜ் (வயது 35) என்பவரை பிடித்து 30 மது பாட்டில்களையும் 5 லிட்டர் கள்ள சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    அச்சமங்கலம் கீழ் தெரு பகுதியில் கள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த ரவி (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 40 மது பாட்டில்களையும் 5 லிட்டர் கள்ளசாரத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ள சாராயம், மது விற்ற இதே போன்று பழைய ஜோலார்பேட்டை, கடை தெரு பகுதியில் திலீப் குமார் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 58 லிட்டர் கள்ள சாராயத்தையும் 30 மது பாட்டில்கள் என மொத்தம் 100 மது பாட்டில்களையும் 68 லிட்டர் கள்ளசாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கன்டெய்னர் பறிமுதல்
    • நள்ளிரவு 12.30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் தாசில்தார் குமார் தலைமையில் வருவாய்த் துறையினர் நாட்டறம்பள்ளி போலீசார் பணி ஆண்ட பட்டுபள்ளி வாலூர் அருகே நள்ளிரவு 12.30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக கன்டெய்னர் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர்.

    ஆனால் போலீசாரை கண்டதும் கன்டெய்னரில் இருந்த டிரைவர் சாலை ஓரமாக நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். சந்தேகம் அடைந்த போலீசார் கன்டெய்னரை சோதனை செய்தனர்.

    அதில் மூட்டை மூட்டையாக 10 டன் ரேசன் அரிசி இருந்தது.

    அதனை வெளி மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. பின்னர் ரேசன் அரிசி மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    • யார் என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஆம்பூர், விண்ணமங்கலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

    உடல் முழுவதும் உருக்குலைந்து கிடப்பதால் இறந்தவர் யார் என்று அடையாளம் காண்பது போலீசாருக்கு சிக்கலாக உள்ளது. இறந்தவர் மாநிறம் உடையவர் வெள்ளை கலர் சர்ட், வெள்ளை கலர் வேட்டி அணிந்துள்ளார்.

    இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உஷா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதேபோல் லத்தேரி காவலூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 30 வயது தக்க வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்கும் போது அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் மாநிறம் உடையவர் நீல நிறத்தில் சிவப்பு கலர் கலந்த டி ஷர்ட், கருப்பு கலர் லோயர் அணிந்து உள்ளார் இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலிசார் விசாரணை செய்து வரு கின்றனர்.

    ஜோலார்பேட்டை ஆம்பூர் லத்தேரி ஆகிய இடங்களில் ஒரே நாளில் 2 பேர் இறந்து ள்ளனர் இறந்தவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது பால்னாங்குப்பம் பகுதியில் மது பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது பால்னாங்குப்பம் பெருமாள் கோவில் வட்டம் பகுதியைச் சேர்ந்த புகழேந்தி (வயது 52) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் புகழேந்தியை கையும் களமாக பிடித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவரிடமிருந்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • தற்கொலை செய்து கொண்டரா அல்லது வேறு ஏதாவது காரணமா?
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள 4வது பிளாட்பாரத்தில் சுமார் 40 வயது மதிக்கதக்க ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • எருது விடும் விழா நடந்தது
    • 180 காளைகள் பங்கேற்றன

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது.

    முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஆர். கிருபாகரன், மாவட்ட கவுன்சிலர் ஜெ. சிந்துஜா ஜெகன், முன்னாள் தலைவர் கண்ணதாசன், ஊராட்சி மன்ற தலைவர் மாதவன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய கவுன்சிலர் ஆ.கலா ஆஞ்சி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு எருது விடும் விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் 180 காளைகள் போட்டியில் பங்கேற்றன.

    போட்டியில் பிறகு குறைந்த நேரத்தில் இலக்கை நோக்கி வேகமாக ஓடிய காளைகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சமும், 2-வது பரிசாக 77 ஆயிரத்து 777, 3-வது பரிசாக 66 ஆயிரத்து 666 என மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது.

    விழாவில் மாடுகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    • நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் நடந்தது
    • பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த புள்ளாநேரியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 24). இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    புதுப்பேட்டை அக்ராகரத்தை சேர்ந்தவர் சுவேதா (20). இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது.

    இதனால் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 25-ந் தேதி சுவேதாவும், தட்சிணாமூர்த்தியும் வீட்டை விட்டு வெளியேறினர்.

    நேற்று காலை அக்ராகரம் பகுதியில் உள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அதன் பிறகு காதல் கணவருடன் இளம்பெண்ணை போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் ஜோலார்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    • வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பள்ளிப்பட்டு சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் சாமுவேல் (வயது 38).

    இவர் கிரி சமுத்திரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.

    வழக்கம்போல் தொழிற்சாலைக்கு இன்று காலை வேலைக்கு சென்றார். தொழிற்சாலையில் ஏராளமான எலக்ட்ரிக் மெஷின்கள் உள்ளன. அதனை சுத்தம் செய்யும் பணியில் சாமுவேல் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

    இதில் சாமுவேல் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாமுவேல் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்த போது சிக்கியது
    • அபராதம் விதித்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி தலைமையில் சுகாதார ஆய்வாளர் குமார், உதவி பொறியாளர் கேசவன், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வந்து தெரிய வந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் 3 கடைகளில் 16 கிலோ பிளாஸ்டிக் கை பறிமுதல் செய்ததோடு ஒவ்வொரு கடைகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    • ரத்த புற்று நோய் இருந்ததால் குழந்தை இறந்தது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி குன்னத்தூரை சேர்ந்தவர் ராமன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    குழந்தை சாவு

    இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது 27). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. தம்பதியரின் மகள் ஜெஷ்விதா (வயது4) என்கிற அழகான பெண் குழந்தை உள்ளது. இந்த பெண் குழந்தைக்கு கடந்த 8 மாதமாக ரத்த புற்று நோய் இருந்து வந்தது.

    இதனால் இவர்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு தனியார் மருத்துவமனையில் ரூ.25 லட்சம் செலவு செய்து காப்பாற்ற போராடினர்.

    இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

    ஐஸ்வர்யா தனது குழந்தை இறந்த நாள் முதல் மிகவும் சோகத்தில் இருந்தார்.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த ஐஸ்வர்யா நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். அப்போது வீட்டில் சத்தம் கேட்டு கதவை உடைத்து ஐஸ்வர்யா வை காப்பாற்றினர்.

    ஆனாலும் ஐஸ்வர்யா தனது குழந்தை இறந்ததை மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஐஸ்வர்யா மீண்டும் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து கணவர் ராமன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இலக்கை அடைந்த காளைகளுக்கு பரிசு வழங்கினர்
    • மாடுகள் மூட்டியதில் 16 பேர் காயம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே குனிச்சி மோட்டூர் பகுதியில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200 காளைகள் பங்கேற்றன.

    எருது விடும் திருவிழாவையொட்டி உறுதிமொழி எடுக்கப்பட்டது. எருதுகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்புகட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன, திருவிழா தொடங்குவதற்கு முன்பு கால்நடைகளை டாக்டர்கள், பரிசோதனை செய்தனர். இதில் 2 காளைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

    காளை விடும் திருவிழாவிற்கு ஊர் கவுண்டர்கள் எஸ்.சங்கர், ஏ.வாசு ஏ.முருகேசன், எம்.சுப்பிரமணி, ஆகியோர் தலைமை வகித்தனர் .

    சி.ரவி. பெரியசாமி, அண்ணாமலை, திருப்பதி, முன்னிலைவகித்தனர்.

    எருது விடும் திருவிழாவை ஏ. நல்லதம்பி எம்எல்ஏ தொடங்கி வைத்தார், வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    போலீஸ் துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில், தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின.

    அப்போது இருபுறமும் நின்று இருந்த பொதுமக்கள் காளைகளை உற்சாகப்படுத்த காளைகள் மீது கைகளை வைத்து தட்டினர்.

    அப்போது எதிரே இருந்தவர்கள் மீது காளைகள் முட்டியது. இதில் 16 பேர் காயமடைந்தனர்.

    குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம் இரண்டாம் பரிசாக ரூ.80 ஆயிரம் வழங்கப்பட்டது மூன்றாம் பரிசாக ரூ.60 ஆயிரம் என 52, ரொக்கப் பரிசுகள் மேலும் சில்வர் குடம் 10 பேருக்கு வழங்கப்பட்டது. 

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • 85 லிட்டர் கள்ள சாராயத்தை அழித்தனர்

    ஜோலார்பேட்டை :

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெரு பகுதியில் கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்த ரஞ்சித் (வயது 32), திலிப்குமார் (33), சந்தைக்கோடியூரை சேர்ந்த முருகன் (50), லட்சுமி நகரை சேர்ந்த ஜெயராஜ் (38) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 85 லிட்டர் கள்ள சாராயத்தை அழித்தனர்.

    மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரும் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×