என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் வாலிபர் மர்ம சாவு
- தற்கொலை செய்து கொண்டரா அல்லது வேறு ஏதாவது காரணமா?
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள 4வது பிளாட்பாரத்தில் சுமார் 40 வயது மதிக்கதக்க ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






