என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழந்தை இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டு சாவு
- ரத்த புற்று நோய் இருந்ததால் குழந்தை இறந்தது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி ஊராட்சி குன்னத்தூரை சேர்ந்தவர் ராமன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
குழந்தை சாவு
இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது 27). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. தம்பதியரின் மகள் ஜெஷ்விதா (வயது4) என்கிற அழகான பெண் குழந்தை உள்ளது. இந்த பெண் குழந்தைக்கு கடந்த 8 மாதமாக ரத்த புற்று நோய் இருந்து வந்தது.
இதனால் இவர்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு தனியார் மருத்துவமனையில் ரூ.25 லட்சம் செலவு செய்து காப்பாற்ற போராடினர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
ஐஸ்வர்யா தனது குழந்தை இறந்த நாள் முதல் மிகவும் சோகத்தில் இருந்தார்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த ஐஸ்வர்யா நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். அப்போது வீட்டில் சத்தம் கேட்டு கதவை உடைத்து ஐஸ்வர்யா வை காப்பாற்றினர்.
ஆனாலும் ஐஸ்வர்யா தனது குழந்தை இறந்ததை மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஐஸ்வர்யா மீண்டும் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து கணவர் ராமன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






