search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plastic confiscation"

    • நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்த போது சிக்கியது
    • அபராதம் விதித்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி தலைமையில் சுகாதார ஆய்வாளர் குமார், உதவி பொறியாளர் கேசவன், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது 3 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வந்து தெரிய வந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் 3 கடைகளில் 16 கிலோ பிளாஸ்டிக் கை பறிமுதல் செய்ததோடு ஒவ்வொரு கடைகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    • 5 கடைகளில் 30 கிலோ பறிமுதல்
    • ரூ.2500 அபராதம்

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலையில் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் கேசவன் தலைமையில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சுமார் 5 கடைகளில் 30 கிலோ அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்க ப்பட்டது.

    மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் கூறியதாவது:-

    ஏலகிரி மலை மிக சிறந்த சுற்றுலா தலமாக இருப்பதால் அரசு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க திடீர் சோதனை மேற்கொ ள்ளப்பட்டது. இதில் பிளாஸ்டிக் பொருட்களை விற்ற 5 கடைகளுக்கு ரூ.2500 அபராதம் விதிக்க ப்பட்டது.

    மேலும் சில கடைகளுக்கு பிளாஸ்டிக்களை விற்கக் கூடாது என எச்சரித்துள்ளார்.

    மீண்டும் சோதனையின் போது பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இந்த ஆய்வின்போது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் துணை தலைவர் திருமால் ஊராட்சி செயலாளர் பாண்டியன், மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • குடோனுக்கு சீல்
    • கலெக்டர் ஆய்வு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்து இருதார்.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

    ஆனாலும் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட தண்டபாணி கோவில் தெரு, தர்மராஜா கோவில் தெரு, பஸ் நிலையம் ஆகிய தெருக்களில் அமைந்துள்ள பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுகிறதா என திடீரென ஆய்வு செய்தார்.

    அப்போது கடைகள், பூக்கடை கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளிலிருந்து 7 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டது. மேலும் தர்மராஜா கோவிலுக்கு அருகே பிளாஸ்டிக் பைகளை இருப்பு வைக்கப்பட்டுள்ள ஒரு குடோனிற்கு சீல் வைக்கப்பட்டது.

    பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க கலெக்டர் திடீரென கடைகளில் ஆய்வு நடத்தியதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து கடைகளில் வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பொருட்களை மறைத்து வைத்தனர்.

    சிலர் கடைகளை பூட்டி விட்டு சென்றனர். கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் திருப்பத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது. ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, தாசில்தார் சிவப்பிரகாசம், வருவாய் துறை, நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    ×