search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    7 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    X

    7 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    • குடோனுக்கு சீல்
    • கலெக்டர் ஆய்வு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்து இருதார்.

    மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

    ஆனாலும் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வதும், பயன்படுத்துவதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட தண்டபாணி கோவில் தெரு, தர்மராஜா கோவில் தெரு, பஸ் நிலையம் ஆகிய தெருக்களில் அமைந்துள்ள பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுகிறதா என திடீரென ஆய்வு செய்தார்.

    அப்போது கடைகள், பூக்கடை கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளிலிருந்து 7 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டது. மேலும் தர்மராஜா கோவிலுக்கு அருகே பிளாஸ்டிக் பைகளை இருப்பு வைக்கப்பட்டுள்ள ஒரு குடோனிற்கு சீல் வைக்கப்பட்டது.

    பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க கலெக்டர் திடீரென கடைகளில் ஆய்வு நடத்தியதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து கடைகளில் வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பொருட்களை மறைத்து வைத்தனர்.

    சிலர் கடைகளை பூட்டி விட்டு சென்றனர். கலெக்டரின் அதிரடி நடவடிக்கையால் திருப்பத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது. ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, தாசில்தார் சிவப்பிரகாசம், வருவாய் துறை, நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×