என் மலர்
நீங்கள் தேடியது "உடல் சிதறி பலி"
- உடலை வாளியில் அள்ளிச்சென்ற பரிதாபம்
- யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அருகே மேல்பள்ளி கொயக்கமேடு என்ற பகுதியில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கதக்க வாலிபர் கிருஷ்ணகிரி வேலூர் நோக்கி செல்லும் மார்க்கத்தில் சாலை கடக்க முயன்றார்.
அப்போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் வாலிபர் மீது மோதியது.இதில் அடிபட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அவ்வழியாக தொடர்ந்து சென்ற வாகனம் அந்த உடல் மீது ஏறி இறங்கியதில் உடல் சிதறி உருக்குலைந்து காணப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சிதறி கிடந்த உடலை சேகரித்து வாளியில் போட்டு பிரேத பரிசோ தனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் முகம் மற்றும் உடல் முழுவதும் சிதைந்த இருப்பதால் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.
மேலும் இது குறித்து போலீசார் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






