search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blocking vehicles"

    • போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்
    • திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த புதுப்பேட்டை ஆத்துமேடு பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மது போதையில் பொதுமக்களை அவதூறாக பேசியும் சாலையில் செல்லும் வாகனங்களை வழி மறித்தும் இடையூறு செய்து கொண்டிருந்தார்.

    பின்னர் இது குறித்து பொதுமக்கள் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு செய்த அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 37) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • வேகத்தடை மீது சுண்ணாம்பு அடிக்காமலும் இருந்ததாக கூறப்படுகிறது.
    • வாகனங்களை முற்றுகையிட்டு நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

     சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி, தாளவாடி வழியாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகா மாநிலத்துக்கும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பாக திம்பம் மலைப்பகுதியில் இருந்து சத்தியமங்கலம் வரை தார் சாலை சீர் செய்யப்பட்டு வருகிறது.

    இதை தொடர்ந்து ரோட்டின் பல்வேறு பகுதிகளில் வேகத்தடைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இதே போல் நேற்று மாலை பண்ணாரி அருகே உள்ள குய்யனூர் பிரிவு என்னும் இடத்தில் பணியாளர்கள் வேகத்தடை அமைத்தனர்.

    ஆனால் வேகத்தடை அமைத்ததற்கு எந்த ஒரு முன் அறிவிப்பு பலகைகள், வேகத்தடை மீது சுண்ணாம்பு அடிக்காமலும் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை கணவன்- மனைவி 2 பேர் மோட்டார் சைக்கிளில் பண்ணாரி கோவிலுக்கு வந்தனர். அப்போது அந்த பகுதியில் வேகத்தடை இருந்தது.

    இதையடுத்து வேகத்தடையை கண்டதும் திடீரென பிரேக் போட்டார். இதில் அவர்கள் 2 பேரும் கீழே விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

    இதை கண்ட அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த வேகத்தடை உடனே அங்கிருந்து அகற்ற வேண்டும்.

    இல்லையென்றால் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என வலியுறுத்தி சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென வாகனங்களை முற்றுகையிட்டு நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து இந்த இடத்தில் உடனடியாக எச்சரிக்கை பலகை வைக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • யானைகள் வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்
    • பந்தலூரில் யானைகள் அட்டகாசம் தொடர்கிறது

    நீலகிரி

    பந்தலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சேரம்பாடியில் இருந்து கூடலூர் சென்ற வாகனங்களை காட்டு யானைகள் வழிமறித்தன.

    இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு அய்யன்கொல்லி அருகே கோட்டப்பாடி வழியாக கருத்தாடு பகுதிக் குள்காட்டுயானை நுழைந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

    தகவல் அறிந்த பிதிர்காடு வனகாப்பாளர் ராஜேஸ்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.2 தேயிலை தோட்ட பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன.

    அங்கு குடியிருப்புகளை ஒட்டி உலா வருவதால், சேரம்பாடி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×