என் மலர்
நீங்கள் தேடியது "Conch-blowing protest"
- ஆம்பூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடந்தது
- சாலை அமைக்கும் பணி மந்தமாக நடைபெறுவதாக புகார்
ஆம்பூர்:
ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட ஏ.கஸ்பா மெயின் ரோடு அரசு உயர்நிலைப்பள்ளி முதல் காந்தி சிலை வரை ரூ.1.36 கோடியில் தார் சாலை அமைப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டன.
ஏற்கனவே இருந்த சாலை தோண்டி எடுக்கப்பட்டு புதிய சாலை அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் அச்சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள் ளாகி வருகின்றனர். சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட் டுள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பழுதாகின் றன. மேலும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடை கின்றனர்.
சாலை அமைக்கும் பணி தரமில்லாமல் நடைபெறுவதால் சாலை அமைக்கப்பட்ட பிறகு வெகுவிரைவிலேயே சாலை சேதமடையும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறி முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சுரேஷ்பாபு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விரைவில் சாலையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென நகராட்சி அலுவலகத்தில் சங்கு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இச்சம்பவத்தால் நகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






