search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 காட்டு யானைகள் ஓசூர் வனப்பகுதியில் விடப்பட்டன
    X

    2 காட்டு யானைகள் ஓசூர் வனப்பகுதியில் விடப்பட்டன

    • மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது
    • 6 நாட்களாக அட்டகாசம் செய்து வந்தது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத் தில் 6 நாட்களாக சுற்றித் திரிந்து அட்டகாசம் செய்து வந்த 2 காட்டு யானைகள் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட் டது.

    கிருஷ்ணகிரி மாவட் டம் மற்றும் தமிழக- ஆந்திர எல்லை பகுதிகளில் 6 பேரை கொன்ற 2 காட்டுயானைகள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தகரகுப்பம் மலைப்பகுதியில் முகா மிட்டன.

    அதன் பின்னர் நாட்டறம்பள்ளி மற்றும் ஜோலார்பேட்டை, திருப்பத் தூர் சுற்றுவட்டார பகுதி களில் 6 நாட்களாக அட்டகாசம் செய்து வந்தன.

    இதனால் மாவட்ட நிர்வா கம் சார்பில் கும்கி யானை களை வரவழைக்க நடவ டிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேற்று காலை பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இருந்து சின்னத்தம்பி.

    முதுமலை பகுதியில் இருந்து உதயன் மற்றும் வில்சன் என மொத்தம் 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

    மயக்க ஊசி செலுத்தி...

    இந்த நிலையில் ஆனை மலை காப்பகத்தின் மருத்து வக்குழுவினர் ராஜேஷ் தலைமையில் வந்தனர். மயக்க ஊசி செலுத்தியானை களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    திப்பச முத்திரம் ஏரி பகுதியில் முகா மிட்டிருந்த யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட் டது.

    சிறிது நேரத்தில் அதே இடத்தில் ஒருயானைபிடிபட் டது. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மற்றொரு யானை பிடிபட்டது. பிடி பட்ட யானையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார்.

    2 யானைகளையும் லாரியில் ஏற்றினர். பின்னர் ஓசூர் அருகே உள்ள உரிகம் காட்டில் யானைகளை இறக்கி விட்டனர். 2 யானைகளும் காட்டுக்குள் சென்றன.

    Next Story
    ×