என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • தண்ட வாளத்தை கடக்கும்போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை - திருப்பத்தூர் ரெயில் நிலையங்களுக்கிடையே சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று ஓடும் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    இவர் ரெயில் தண்ட வாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது ஓடும் ெரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடந்தி வருகின்றனர்.

    • அதிகாரிகள் விசாரணை
    • கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அருகே உள்ள பிஎம்வட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமுத்தன் ( வயது 60). பீடி சுற்றும் தொழிலாளி.

    இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அனுமுத்தன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று திடீரென உயிரிழந்தார்.

    இதனையடுத்து அவரது உடலை புதைப்பதற்காக, உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு குழி தோண்ட சென்றனர்.

    அப்போது சுடுகாடு அருகே உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர்கள், உடலை புதைக்க குழி தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் அனுமுத்தன் உறவினர்களுக்கும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, கிராம நிர்வாக அலுவலர் மத்தான் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சுடுகாட்டில் உடலை புதைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கினர். இதனை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • முதல் அமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற மருத்துவமனையை முதல் அமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

    இதனை அடுத்து ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் குத்துவிளக்கு ஏற்றி மருத்துவமனையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

    இதில் ஆம்பூர் நகர மன்ற தலைவர் பதேகான் ஏஜாஸ் அஹ்மத், ஆறுமுகம், ஆம்பூர் நகரச் துணைத் தலைவர் ஷபீர் அஹ்மத், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் மற்றும் நகரமன்ற உறுப்பினர் நஜீர் அகமத், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வாவூர் நசீர் அஹமத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிராம மக்கள் அச்சம்
    • ஆடு மேய்ப்பவர்களிடம் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த மலையில் மான், மயில், கரடி, ஆமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.

    இதில் கடந்த ஆண்டு ஏலகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பொன்னேரி கிராமத்தில் கரடி நடமாட்டம் காணப்பட்டது.

    அப்போது விறகு சேகரிக்கு சென்ற பெண் மற்றும் முதியவரை கரடி கடித்தது. காயமடைந்த வர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள மயில்பாறை கிராமத்தை சேர்ந்த சிலர் ஆடு மேய்ப்பதற்காக மலை அடிவாரத்திற்கு சென்றனர்.

    அப்போது முருகர் கோவில் அருகே திடீரென வந்த கரடி ஆடுகளை கடிக்க முயன்றது.

    இதனைப் பார்த்து அதிர்ச்சடைந்த ஆடு மேய்ப்பவர்கள், பதறி அடித்துக் கொண்டு ஊருக்குள் வந்து தகவலை தெரிவித்தனர்.

    இதனால் கிராம மக்கள் மிகவும் அச்ச மடைந்து ள்ளனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மத்தான் ஆடு மேய்ப்பவர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    • பெண் கைது
    • வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கருப்பனூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் இவரது மனைவி சென்னம்மாள் (வயது 36).

    இவர் வீட்டில் பொது விநியோக திட்ட ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வெளி மாநிலத்தி ற்கு கடத்தி வருவதாக வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா சப்- இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் மற்றும் போலீசார் சென்னம்மாள் வீட்டிற்கு சென்று சோதனை செய்து பார்த்த போது 50 கிலோ எடை கொண்ட 154 மூட்டைகள் என மொத்தம் 7,550 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    மேலும் சென்னம்மாளை கைது செய்து வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை திருப்பத்தூர் தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

    • உலக சுற்றுசூழல் தினம் முன்னிட்டு நடந்தது
    • உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலையில் உலக சுற்றுசூழல் தினம் முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் தலைமை தாங்கினார் ஏலகிரி மலை போலிஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    இதில் தனியார் கல்லூரி மாணவிகள் ஏலகிரி மலை இயற்கை பூங்கா உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டனர்.

    இவ்விழாவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் திருமால் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடந்தது
    • பசுமையான கிராமமாக செயல்பட அனைத்து மக்களும் செயல்படுவோம் என உறுதிமொழி

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன் தலைமையில், தென்னை மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

    இதில் மகளிர் குழுவினர் கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் தென்னை மரக்கன்றுகள் நட்டனர்.

    ஊராட்சிகளில் சுத்தமான மற்றும் பசுமையான கிராமமாக செயல்பட அனைத்து மக்களும் செயல்படுவோம் என சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்றனர்.

    • மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் பகுதியில் துணை மின் நிலையமும், அதன் அருகில் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகமும் செயல்படுகிறது.

    அதிக மின்கட்டனம்

    இந்த மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சந்திரபுரம், மல்லபள்ள, வெலக்கல்நத்தம், பஞ்சாயத்து உள்ளிட்ட பகுதி களில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் மின்கட்ட ணம் வழக்கத்தை விட அதிக மாக இந்த முறை வந்துள்ள தாக கூறப்படுகிறது. இதுகு றித்து பலமுறை மின்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 பஞ்சா யத்தை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வெலக்கல்நத்தம் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகை யிட்டு உதவி செயற்பொறியாளர் பிரபுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சாலை மறியல்

    பின்னர் அவர்கள் திடீ ரென ஜெயபுரம் வழியாக வெலக்கல்நத்தம் செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறிய லில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது மின்துறை அதி காரிகளிடம் பேசி உடனடி யாக நடவடிக்கை எடுக்கட் படும் என்று கூறியதன் பேரில் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • புழுதி கிளம்புவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது
    • குடிநீர் தட்டுப்பாட்டால் அவதி

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தின் வழியாக விண்ணமங்கலம் மலைப்பகுதியில் செயல்படும் கல்குவாரிக்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது.

    வாகனங்கள் போக்குவரத்து காரணமாக அந்தப் பகுதியில் புழுதி கிளம்புவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. எனவே இந்த கிராமத்தின் வழியாக வாகனங்கள் சென்றுவர அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அந்தப் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி மீது கல்குவாரியில் இருந்து வந்த லாரி மோதியது. இதனால் குடிநீர் தொட்டி பழுதடைந்ததால், அந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள், அந்த வழியாக வந்த லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
    • மழை காலங்களில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம்,பாணாவரம் அடுத்த போளிப்பாக்கம் ஊராட்சியில் பிள்ளையார்குப்பம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் மயானம் பல ஆண்டுகளாக இல்லாததால் இறந்தவர் உடலை ஓடைக்கால்வாயில் அடக்கம் செய்து வருவதில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    குறிப்பாக தொடர் மழை காலங்களில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதிலும், இறுதி காரியங்கள் செய்வதிலும் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    இதனால் கிராம மக்கள் மயானத்திற்கு இடம் ஒதுக்கி தரக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மயானத்திற்கு இடம் தரக்கோரி அப்பகுதி மக்கள் கையில் மண்டை ஓட்டுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மளமளவென பற்றி அனைத்து பொருட்கள் மீதும் பரவியது
    • வெடிக்கும் முன்பே தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி சந்தை ஜின்னா பாலம் அருகே தனியார் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது.

    இங்கு நேற்று வழக்கம் போல் மதிய உணவு தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கியாஸ் சிலிண்டர் திடீரென தீ பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. மளமளவென பற்றிய தீ அருகே இருந்த அனைத்து பொருட்கள் மீதும் பரவியுள்ளது.

    இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த, பொதுமக்கள் மற்றும் அருகே இருந்த மற்ற கடைக்காரர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    உடனடியாக இந்த தீ விபத்து குறித்து வாணியம்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,

    தீயணைப்பு வீரர்கள் மற்றும் டவுன் போலீசார் அங்கு சென்று தீ பிடித்து எரிந்த சிலிண்டர் வெடிக்கும் முன்பே தீயை அணைத்தனர்.

    இதனால், அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாலிபர் சிக்னலை உடைத்ததை கவனிக்காமல் இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
    • நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து நடந்த நேரத்தில் வாலிபர் சிக்னலை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் இன்று காலை ரெயிலுக்காக பயணிகள் ஏராளமானோர் காத்திருந்தனர்.

    அப்போது மது போதையில் தள்ளாடியபடி வாலிபர் ஒருவர் பிளாட்பாரத்தில் நடந்து சென்றார்.

    ரெயில் நிலையத்தில் ஓரத்தில் உள்ள சிக்னல் கம்பம் அருகே சென்று கம்பத்தை மேலும் கீழுமாக பார்த்தார்.

    அங்கிருந்த கற்களை எடுத்து சிக்னல் கம்பத்தில் உள்ள சிவப்பு மற்றும் பச்சை நிற விளக்குகள் மீது எறிந்தார்.

    இதில் விளக்குகள் சேதம் அடைந்தன. மேலும் மின்கம்பத்திலும் கற்கள் பட்டு சத்தம் கேட்டது.

    இதனை கண்ட போலீசார் விரைந்து ஓடி சென்று வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் திருப்பத்தூர் பிரான் லைனை சேர்ந்த கோகுல் (வயது 30) என்பது தெரியவந்தது. அப்போது கோகுல்ராஜ் கூறுகையில்:-

    திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வருகிறேன். காதலி என்னிடம் பேசவில்லை. எனக்கு காதல் தோல்வி ஏற்பட்டு விட்டது.

    ஆத்திரமடைந்த நான் ரெயில் சிக்னல் கம்பத்தின் மீது கற்கள் வீசினேன் என்றார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலிபர் சிக்னலை உடைத்ததை கவனிக்காமல் இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

    நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து நடந்த நேரத்தில் வாலிபர் சிக்னலை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×