என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட வேட்டப்பட்டு ஊராட்சி எல்லப்பள்ளியில் உள்ள அமிர்த சரோவர் ஏரிக்கரையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

    அதன் பிறகு அப்பகுதியில் 1000 மரக்கன்றுகள் தொடங்கியது.

    விழாவில் ஊராட்சிகள் இயக்குனர் விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, மணவாளன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
    • நகரா ட்சி அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகராட்சியில் ரூ.1.35 கோடியில் சாலை பணிகளை கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தனர்.

    ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பல வருடங்களுக்கு போடப்பட்ட சாலையானது சிதலமடைந்து வருகிறது.

    இதனால் நகராட்சி க்குட்பட்ட 10 இடங்களில் தார் சாலை, 12 இடங்களில் சிமெண்டு சாலை என மொத்தம் 22 சாலைகள் அமைக்க ரூ.1 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மேலும் நகராட்சிக்குட்பட்ட காவல் நிலைய சாலை பகுதியில் சாலை அமைக்கும் பணிக்கு 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    இந்த சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன், க.தேவராஜி எம்.எல்.ஏ.ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. உள்ளிட்ட அதிகாரிகள் துய்மை பணியை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க.முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ம.முத்தமிழ்ச்செல்வி, ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், நகராட்சி ஆணையர் பழனி, நகர மன்ற தலைவர் காவியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக 7-வது வார்டில் தூய்மை பணியை துவக்கி வைத்தனர். இதனை யொட்டி நகரா ட்சி அலுவலக த்தில் நகரத் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    நகராட்சி அலுவலகம் எதிரே தூய்மை பணியை மேற்கொ ள்ளும் போது விளையாட்டு மைதானத்தில் விளையாடி கொண்டு இருந்த இளைஞர்களுடன் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் சிறிது நேரம் கிரிக்கெட் விளை யாடினார்.

    • போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    • மாற்று வழியில் சென்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து புதுப்பேட்டை வழியாக நாட்டறம்பள்ளி வரை அரசு பஸ் தினசரி இயக்கப்படுகிறது.

    அதன்படி நேற்று வழக்கும் போல் பயணிகளை ஏற்றிக் கொண்டு நாட்டறம்பள்ளி நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    அப்போது புதுப்பேட்டை கடந்து வேட்டப்பட்டு கூட்ரோடு அருகே உள்ள ரெயில்வே தரைப்பாலத்தில் நுழைய முயன்ற போது பாலத்தில் சிக்கி கொண்டது.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கிழே இறங்கினர். இதனையடுத்து பஸ் டிரைவர் வேறுவழியின்றி மெதுவாக பின்னோக்கி சென்று திரும்பி பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மாற்று வழியில் நாட்டறம்பள்ளி நோக்கி சென்றார்.

    இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 12, 13-ந் தேதிகளில் நடக்கிறது
    • கல்லூரி முதல்வர் தகவல்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய தாக தொடங்கப்ப ட்டுள்ளது.

    இந்நிலையில் கல்வியாண்டிற்கான இளங்கலை (தமிழ், வணிகவியல்) இளமறிவியல் (புவியியல், தாவரவியல், கணினி அறிவியல்) ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற 12-ந்தேதி பி.எஸ்.சி., தாவரவியல், பி.எஸ்.சி. கணினி அறிவியல், பி.எஸ்.சி. புவியியல் ஆகிய பாடபிரிவுகளுக்கும் மறுநாள் 13 -ந் தேதியும் பி.ஏ. தமிழ், பி.காம் வணிகவியல், ஆகிய பாடபிரிவுகளுககு கலந்தாய்வுக்கு மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.

    மேலும் கலந்தாய்வு வின் போது மாணவர்கள் கீழ்காணும் சான்றிதழ்களின் அசல் மற்றும் 3 நகல்களை எடுத்து வரவேண்டும்.

    இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்ப படிவம், மாற்றுச்சான்றிதழ் மற்றும் 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்ட 4, வங்கி பாஸ்புக் நகல் முதல் பக்கம், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ், சேர்க்கை கட்டணம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டு மென நாட்டறம்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வெலக்கல்நத்தம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் வெலக்கல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் நந்தியப்பன் (வயது 30) என தெரியவந்தது.

    இவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மறைத்து வைத்து விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இதனையடுத்து போலீசார் நந்தியப்பனை கைது செய்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 பேர் பலத்த காயம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிந்து மாதவ பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவில் திருவிழா நேற்று நடந்தது.

    இதனையொட்டி இன்று அதிகாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு, சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேருக்கு தீவிர சிகிச்சை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே காளி நாயனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் வினோத் குமார் (வயது 19).

    அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் வேடி (வயது 25). சாதனா (வயது 32) மற்றும் அன்பு (வயது 25) ஆகிய 3 பேரையும் தனது மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு வாணியம்பாடி பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    நாட்டறம்பள்ளி அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் முன்னாள் சென்று கொண்டிருந்த கார் டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.

    அப்போது பின்னால் வந்த பைக் கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பயணம் செய்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

    அந்த வழியாக சென்ற பொது மக்கள் படுகாயம் அடைந்த வேடி, சந்தோஷ்குமார், சாதனா ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் அன்பு லேசான காயமின்றி உயிர் தப்பினார். மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேடி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் வேடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டரம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்றம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது புதுப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த வாலிபரை மடக்கிப்பிடித்து விசாரணைசெய்தனர்.

    அதில் அவர் திருப்பத்தூரை அடுத்த லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன்(வயது 42)லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 55 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • கடன் சுமையால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே கடன் வாங்கி வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றவர் வீடு திரும்பி கடன் சுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டியை சேர்ந்தவர். மாயகிருஷ்ணன் இவரது மகன் பசுபதி (வயது 47) இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முயற்சி செய்து வந்தார்.

    இதற்காக ஜோலார்பேட்டை பகுதியில் உள்ளவர்களிடம் அதிகம் கடன் வாங்கினார்.

    இதனையடுத்து பசுபதி 2 வருடங்களுக்கு முன்பு சவூதியில் வேலைக்கு சென்றார்.

    இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சொந்த ஊரான ஜோலார்பேட்டை பகுதிக்கு வந்தார். இங்கும் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கடன் சுமை அதிகமானது. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்து மது போதைக்கு அடிமையானர்.

    கடன் சுமையால் மனமுடைந்த பசுபதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாட்டுவண்டிகள் பறிமுதல்
    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றில், ஆம்பூர் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி வந்த 3 பேரை மடக்கினர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் வண்டிகளை அங்கேயே விட்டு விட்டு, தப்பி ஓடி விட்டனர்.

    மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்த போலீசார், மணல் திருட்டு ஈடுபட்ட மாதனூரை சேர்ந்த பார்த்திபன் (வயது 31), பசுபதி (22) மற்றும் முத்தரசன் (32) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்
    • பெற்றோருக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஏலாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சென்றாயன். இவ ரது மகன் விக்ரம் (வயது 22), அந்தப்பகுதியில் உள்ள ஊது பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவரும், மல்லபள்ளி பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரது மகள் சினேகாவும் (20) கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுடைய காதலுக்கு சினேகா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சினேகா மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி நாட்டறம்பள்ளி அருகே உள்ள அக்ராகரம் பகுதியில் சாமுண்டீஸ்வரி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். சப்- இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் இருவரின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் பெண் வீட்டார் வரவில்லை. அதைத்தொடர்ந்து விக்ரம் பெற்றோருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத் தனர்.

    • பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெற்றது
    • பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடச்சேரி கிராமத்தில் சென்னகேசவ பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. இதில் 8-ம் நாள் திருவிழாவை யொட்டி நேற்று குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×