என் மலர்
திருப்பத்தூர்
- மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மின்னூரை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 28). இவர் தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் ஆம்பூர்- பேரணாம்பட்டு சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக்கும், இவர் ஓட்டி சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அரவிந்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். அவ்வழியாகச் சென்றவர்கள் அரவிந்தனை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அரவிந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 30 பாக்கெட்டுகள் பறிமுதல்
- சிறையில் அடைத்தனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் வெளி மாநில மது பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் டவுன் போலீசார் அங்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது மது பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த உஷா (வயது 30), ராதிகா (வயது 35) மற்றும் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த பிரேமா (வயது38), வளர்மதி (வயது 45), ஆகியோரை போலீசார் கைது செய்த அவர்களிடமிருந்து 30 கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். மேலும்
4 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சட்டம் 2006 பிரிவு (31) கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது
- பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் மாவட்ட கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு) செந்தில்குமார் அறிவுறுத்த லின்படி ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி ஜோலார்பேட்டையில் உள்ள புது ஓட்டல் தெரு பகுதியில் ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட், மளிகை கடைகள், டீக்கடை உள்ளிட்ட கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கடைகளில் லைெசன்ஸ் இல்லாமல் கடை நடத்தி வந்த கடை உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு சட்டம் 2006 பிரிவு (31) கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் கடைகளில் அதிக வர்ணம் கலந்த சிக்கன் மற்றும் சிக்கன் 65 இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.
மேலும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
மளிகை கடைகளில் காலாவதியான பொரு ட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். வணிக கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வை யாளர் பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சாலையோரங்களில் போண்டா, பஜ்ஜி விற்கும் கடைகளில் உணவுப் பொருட்களை கண்ணாடி பாக்ஸில் வைத்து விற்பனை செய்யவும், உணவுப் பொருட்களை சில்வர் கப், இலை போன்றவற்றில் விற்பனை செய்யவும், பேப்பர் மூலம் சூடான உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் கடை உரிமையாளர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி உரிமம் பெற வேண்டும் என்றும் உரிமம் பெற்றவர்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
ஜோலார்பேட்டை பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் மற்ற கடை உரிமையா ளர்களிடத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.
- முறை கேடாக பயன்படுத்தி வாகங்கள் பறிமுதல்
- அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை
திருப்பத்தூர்:
மத்திய அரசால் மானிய விலையில் வழங்கப்படும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை ஓட்டல்கள், டீக்கடைகளில் முறைகேடாக பயன்ப டுத்தப்பட்டு வருவதை அதிகாரிகள் அவ்வப்போது கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆட்டோ கியாஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக சமையல் கியாஸ் சிலிண்டர்களை முறை கேடாக பயன்படுத்தி வாகங்களை இயக்குவதாக புகார்கள் வந்தன.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரிலும், வேலூர் துணை போக்குவரத்து ஆணை யர் எம் எஸ் இளங்கோவன், வட்டார போக்குவரத்து அலுவ லர்கள் எம்.பி. காளியப்பன், ராமகி ருஷ்ணன், திருப்பத்தூர், வாணியம்பாடி, மற்றும் செயலாக்கம் (என்போர்ஸ்மேன்ட்) வட்டாரப்போக்குவரத்து அலுவலர் பிரதீபா தலைமையில் கூட்டுத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன், விஜயகுமார், சிவராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு ஆய்வு செய்ததில் அனுமதிக்கு புறம்பாக சமையல் கியாஸ் சிலிண்டர் பொருத்தி இயக்கிய 12 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறு கையில், வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை பயன்ப டுத்தி ஆட்டோ ஓட்டக்கூ டாது.
இது போன்ற ஆட்டோக்கள் கண்டறி யப்பட்டால் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
- ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என அடையாளம் தெரியவில்லை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அல்லிமுத்து மகன் அருண்குமார் ( வயது 25). இவர் ஏ.சி. மெக்கானிக்கல் படித்து விட்டு, தற்போது சென்ட்ரிங் கூலி வேலை செய்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி அபிராமி (21) என்ற மனைவியும், அதிதீ (1½) மகளும் உள்ளனர். இதில் அருண்குமார் நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுசென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் பதறிப்போன அவரது உறவினர்கள் அக்கம், பக்கம் வீடுகளில் தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் வின்னமங்கலம் - ஆம்பூர் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு அருண்குமார் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன், விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி ரெயில் தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைப் பற்றி பிரத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என விவரம் தெரியவில்லை. ெரயில் முன் பாய்ந்த தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி இறந்தாரா என தெரியவில்லை.
இது குறித்து ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் எச்சரிக்கை
- சீட் பெல்ட், ஹெல்மெட் அணிதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், அதிவேகம், ஒரே பைக்கில் 3 பேர் அமர்ந்து செல்லுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களை கடைபிடிக்காமல் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை கண்காணித்து 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் அவர்களுக்கு தல ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் வாகன ஓட்டிகளிடம் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிதல், பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் அணிதல் போன்ற விழிப்பு ணர்வுகளை போலீசார் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தினர்.
மீண்டும் இது போன்ற போக்குவரத்து விதிமீறல் செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அனுப்பினர்.
- நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
- 88 பேர் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையில் முன்னறிவிப்பு இன்றி துப்புரவு பணியாளர்கள் 34 பேர் பணி நீக்கம் செய்ததை கண்டித்து தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஒப்பந்த முறையில் துப்புரவு பணியாளர்கள் 88 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தினதோறும் நகராட்சி வார்டுகளில் உள்ள வீதிகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுவதோடு, தூய்மை பணியையும் மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நகராட்சி கமிஷனர் பழனி, 34 பணியாளர்களை ஆள்குறைப்பு செய்துள்ளார். 34 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான நோட்டீஸ் அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை துப்புரவு பணியாளர்கள் 88 பேர் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை கண்டு தொழிலாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த துப்புரவு பணியாளர்கள் அனைவரும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு, கமிஷனர் பழனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கமிஷனர் பழனி 'இது உயர் அதிகாரிகள் உத்தரவு. என்னால் எதுவும் செய்ய முடியாது' எனக்கூறி அங்கிருந்து சென்று விட்டார்.
இதனால் மேலும் ஆவேசமடைந்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் சுந்தரேசன், ஏ. ஐ. டி .யூ.சி. மாவட்ட தலைவர் மணி, மாவட்ட அமைப்பாளர் வேணுகோபால், தூய்மை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ரஞ்சித் குமார் ஆகியோரும் இவர்களுடன் இணைந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதனால் ஜோலார்பேட்டை நகராட்சி முழுவதும் தூய்மை பணி பாதிக்கப்பட்டது.
- கேமரா காட்சிகள் ஆய்வு
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் புருஷோத்தம குப் பம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40), விவசாயி, இவர் இரவு வீட்டின் எதிரே அவருக்கு சொந்தமான தண்ணீர் எடுத்து செல்லும் டிராக்டரை நிறுத் தியிருந்தார்.
நேற்று காலை எழுந்து பார்த்தபோது டிராக்டர் காணாமல்போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடன டியாக இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட் சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் டிராக்டரை திருடிசெல்வது பதிவாகி இருந்தது.
இந்த காட்சியை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- உரிமையாளர் வேலைக்கு சென்ற நிலையில் துணிகரம்
- போலீசார் விசாரணை
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி அடுத்த கத் தாரி ஊராட்சி வ.உ.சி. நகர் பகு தியைச் சேர்ந்தவர் வினோத்குமார்.
இவரது மனைவி நிர்மலா (33). இவர், நாட்டறம்பள்ளி யில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை செய்து வருகிறார்.
வழக்கம் போல் சம்பவத்தன்று காலை 8 மணிக்கு வீட்டைப் பூட்டிவிட்டு, நிர்மலா வேலைக்குச் சென்றார்.
வேலைகள் முடிந்து இரவு மீண்டும் வீட்டுக்கு வந்தார்.அப்போது, வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் உள்ள பொருட்கள் சிதறிக்கிடந்திருந்தது. அதிலிருந்த நகை மற்றும் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து நிர்மலா திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழை க்கப்பட்டு இறகுகளை பதிவு செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
- வட மாநில வாலிபர் கைது
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
ஒடிசாவில் இருந்து திருப்பத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக மத்திய குற்ற புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு குழுவினர் இணைந்து ஆம்பூர் தற்காலிக பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் நபர் ஒருவர் பையுடன் சுற்றித்திரிந்தார்.
அவரைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரசாத்மாஜி (வயது 37) என்பதும், அம்மாநிலத்தில் இருந்து ஈரோடு மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது.
அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்
- அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையில் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்ணை புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் மாதய்யன் (வயது 50).
இவரது மகள் தெய்வானை (23). இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்த தாலபள்ளி அடுத்த பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (26) என்பவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு கவுசிக் (4), இளவரசன் (இரண்டரை வயது) ஆகிய மகன்கள் உள்ளனர்.
மணிகண்டன் கூலி வேலை செய்து வந்தார். மணிகண்டன் வேலைக்கு சென்ற பிறகு, தெய்வானை நாள் முழுவதையும் தனது செல்போனில் பொழுதை கழித்துள்ளார்.
அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் கிருஷ்ணகிரியை சேர்ந்த 2 வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தெய்வானை நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட போது, அவர் இன்ஸ்டாகிராமில் வாலிபர்களுடன் பழகி வருவது மணிகண்டனுக்கு தெரிந்தது.
இது தொடர்பாக மணிகண்டன் பலமுறை அவரைக் கண்டித்துள்ளார். இருப்பினும் தெய்வானை வாலிபர்களுடன் இன்ஸ்டாகிராமில் பழகுவதை நிறுத்தவில்லை. இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.
தனது பேச்சை கேட்காத கோபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன், ஜோலார்பேட்டையில் உள்ள தனது மாமியார் லட்சுமி (43)யை, வரவழைத்து அவருடன் மனைவி மற்றும் பிள்ளைகளை அனுப்பி வைத்தார்.
இதனை தொடர்ந்து தெய்வானை தனது அம்மா லட்சுமி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி தெய்வானை, தனது பிள்ளைகளை அம்மாவிடம் விட்டுவிட்டு, வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தெய்வானையின் அம்மா லட்சுமி ஜோலார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப் -இன்ஸ்பெ க்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து, தெய்வானை கண்டு பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்.புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் போலீசார், தெய்வானை ஓசூரில் உள்ள தனது நண்பர் வீட்டில் இருப்பதை கண்டு பிடித்தனர். அவரை அழைத்து வந்து, அறிவுரைகள் வழங்கி தாய் லட்சுமி உடன் அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- வாணியம்பாடி பஸ் நிலையத்தில் நடந்தது
- பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி நகராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் மஞ்சள் பை திட்டம் தொடங்கப்பட்டு முதலாம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
நகர கூட்டுறவு வங்கி தலைவரும், நகர மன்ற உறுப்பினருமான வி.எஸ்.சாரதி குமார் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் சங்கர் முன்னிலை வகித்தார்.
நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.
மஞ்சள் உபயோகத்தின் மூலம் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பது குறித்து விளக்கி கூறப்பட்டது.
பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. அங்கு பயன்படுத்தக்கூடாத பொருட்கள் எவை எனவும், பயன்படுத்தப்படுத்தி மக்கும் பொருட்கள் எவை எனவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இதில் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






