என் மலர்
உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து விதி மீறிய 50 பேர் மீது வழக்கு
- போலீசார் எச்சரிக்கை
- சீட் பெல்ட், ஹெல்மெட் அணிதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், அதிவேகம், ஒரே பைக்கில் 3 பேர் அமர்ந்து செல்லுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களை கடைபிடிக்காமல் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை கண்காணித்து 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் அவர்களுக்கு தல ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் வாகன ஓட்டிகளிடம் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிதல், பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் அணிதல் போன்ற விழிப்பு ணர்வுகளை போலீசார் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தினர்.
மீண்டும் இது போன்ற போக்குவரத்து விதிமீறல் செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அனுப்பினர்.






