என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த டிராக்டர் திருட்டு
    X

    வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த டிராக்டர் திருட்டு

    • கேமரா காட்சிகள் ஆய்வு
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் புருஷோத்தம குப் பம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40), விவசாயி, இவர் இரவு வீட்டின் எதிரே அவருக்கு சொந்தமான தண்ணீர் எடுத்து செல்லும் டிராக்டரை நிறுத் தியிருந்தார்.

    நேற்று காலை எழுந்து பார்த்தபோது டிராக்டர் காணாமல்போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடன டியாக இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட் சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் டிராக்டரை திருடிசெல்வது பதிவாகி இருந்தது.

    இந்த காட்சியை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×