வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

உரிமையாளர் வேலைக்கு சென்ற நிலையில் துணிகரம் போலீசார் விசாரணை
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
Published on

நாட்டறம்பள்ளி:

நாட்டறம்பள்ளி அடுத்த கத் தாரி ஊராட்சி வ.உ.சி. நகர் பகு தியைச் சேர்ந்தவர் வினோத்குமார்.

இவரது மனைவி நிர்மலா (33). இவர், நாட்டறம்பள்ளி யில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை செய்து வருகிறார்.

வழக்கம் போல் சம்பவத்தன்று காலை 8 மணிக்கு வீட்டைப் பூட்டிவிட்டு, நிர்மலா வேலைக்குச் சென்றார்.

வேலைகள் முடிந்து இரவு மீண்டும் வீட்டுக்கு வந்தார்.அப்போது, வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் உள்ள பொருட்கள் சிதறிக்கிடந்திருந்தது. அதிலிருந்த நகை மற்றும் பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து நிர்மலா திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழை க்கப்பட்டு இறகுகளை பதிவு செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com