என் மலர்
திருப்பத்தூர்
- தமிழ் நாட்டிலேயே முதன் முதலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலாண்டு தணிக்கை
- இ.எம்.எஸ். 2.0 செயலி மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டது
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் குடோனில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் பாஸ்கரபாண்டி யன் ஆய்வு செய்தார்.
முன்னதாக அனைத்து அங்கீகரிக்கப் பட்ட கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் அறை திறக்கப்பட்டு, ஏற்கனவே இருப்பில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந் திரங்களையும் கண்காணிப்பு கேமரா ஒளிப்பதிவுகளையும் கலெக்டர் பார்வையிட்டு தணிக்கை செய்தார்.
மேலும் தேர்தல் ஆணையத் தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இ.எம்.எஸ். 2.0 என்ற செயலி மூலமாக தமிழ் நாட்டிலேயே முதன் முதலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலாண்டு தணிக்கை மாவட்ட கிடங்கில் இருந்து நேரடியாக இ.எம்.எஸ். 2.0 செயலி மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டது.
இதில் க.தேவராஜி எம். எல்.ஏ, உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தனி தாசில்தார் பத்மநாபன் உள்பட பலர் கலந்துகொண்ட னர்.
- பூமி பூஜை நடந்தது
- கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
ஜோலார்பேட்டை,:
ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.71.46 லட்சம் மதிப்பீட்டில் 1.600 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணிக்கும், கூத்தாண்ட குப்பம் ஊராட்சியில் ரூ.14.89 லட்சம் மதிப்பீட்டில் 500 மீட்டர் தொலைவிற்கு ஜீவாநகர் சாலை அமைக்கும் பணிக்கும் பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை க.தேவராஜி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார் வரவேற்றார்.
மேலும் கலெக்டர், எம்எல்ஏ ஆகியோர் புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்து பணியை நேற்று தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கேத்தாண்டப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் ரூ.12.07 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடை கட்டிடம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சியின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எழில்கவிதா, உதவி செயற்பொறியாளர் பழனிச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் கவிதாதண்டபாணி, சிந்துஜா ஜெகன், ஒன்றிய கவுன்சிலர் உமாகன்ரங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, மணவாளன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயலட்சுமிசுரேஷ், திருப்பதி உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
- மேளம் அடிக்கும் தொழிலாளிகள் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- விபத்து குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் பெரியகரம், சந்திரபுரம், குருசிலாப்பட்டு அச்சமங்கலம் ஆகிய பகுதிகளில் மேளம் அடிக்கும் தொழிலாளிகள் உள்ளனர்.
இந்த பகுதியை சேர்ந்த 10 பேர் நேற்று இரவு 10.30 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் தபால்மேடு பகுதியில் மேளம் அடிக்க புறப்பட்டனர். 10 பேரும் மேள வாத்தியங்களுடன் ஒரே ஆட்டோவில் சென்றனர்.
கந்திலி சந்தைமேடு அருகே சென்ற போது ஓசூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த அரசு பஸ் ஆட்டோவில் நேருக்கு நேர் மோதியது.
இதில் திருப்பத்தூர் கசி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாரதி (வயது 20), சந்திரபுரத்தை சேர்ந்த கார்த்திக் (18), சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
7 பேர் படுகாயமடைந்தனர். கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டனர்.
இதில் ஈசன் (20) அரவிந்தன் (20) என்ற தொழிலாளர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர்கள் தர்மபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அரவிந்தன் இன்று காலை இறந்தார்.
மேலும் சந்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், குரிசிலா பட்டு அஜித், பெரியகரம் ஈஸ்வரன், அச்சமங்கலம் சஞ்சய், புத்தகரம் வேலு ஆகியோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேளம் அடிக்கும் தொழிலாளிகள் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- சிங்கப்பூரில் வசிக்கும் கணவருடன் செல்போனில் தகராரில் விபரீதம்
- வாணியம்பாடி ஆர்டிஓ விசாரணை
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வள்ளிப் பட்டு அடுத்த புல்லாக் குட்டை பகுதியை சேர்ந்த வர் தியாகராஜன். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்று, அங்குள்ள தனி யார் நிறுவனத்தில் எலக்ட் ரீசியன் வேலைக்கு சேர்ந் துள்ளார்.
இவரது மனைவி மதிமாலா (30). தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை காரணமாக தக ராறு ஏற்பட்டு வந்ததாம். சிங்கப்பூருக்கு சென்ற பிறகும் செல்போன் மூலம்அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று முன்தி னம் மதியம், கணவருடன் செல்போனில் பேசும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மதிமாலா, 'தற்கொலை செய்து கொள் ளப் போகிறேன்' எனக்கூறி இணைப்பை துண்டித்தா ராம்.
அதிர்ச்சியடைந்த தியாகராஜன் உடனடியாக தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், உறவினர்கள் வந்து மதிமாலா வசிக்கும் வீட்டின் கதவை தட்டி யுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மதிமாலா தூக்குப் போட்ட நிலையில் இருந் தார். உடனடியாக அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மதிமாலா ஏற் கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த வாணியம் பாடி தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்த னர். மேலும், இறந்த மதி மாலாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் வாணியம்பாடி ஆர்டிஓ பிரேமலதா விசாரித்து வருகிறார்.
- ஒருவர் கைது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி ருக்மணி. நேற்று கண வன்- மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அதேப் பகுதியை சேர்ந்த ஜெய் சங்கர் சொத்து தகராறு காரண மாக தன்னை பற்றி தான் பேசிக் கொண்டு இருப்பதாக நினைத்து தகராறு செய் துள்ளார்.
தகராறு முற்றி இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டதில் உஷாராணி மற் றும் ஜெய்சங்கர் ஆகிய இருவ ரையும் தாக்கி கொலை மிரட் டல் விடுத்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த ருக்மணி சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து ருக்மணி கொடுத்த புகாரின் பேரில் உஷாராணி மற்றும் ஜெய்சங் கர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தனர்.
ருக்மணி மற் றும் கனகராஜ் இருவரும் தாக் கியதாகஉஷாராணி கொடுத்த புகாரின்பேரில் ருக்மணி மற்றும் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை
- கரும்பு ஜூஸ் வாங்குவது போல் நடித்தனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலியை அடுத்த பெரியகரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 60). இவர், திருப்பத்தூர்-ஆலங்காயம் ரோட்டில் கூடப்பட்டு பஸ் நிறுத்தத்தில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடைக்கு வந்த 2 வாலிபர்கள் கரும்பு ஜூஸ் பார்சல் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து மனோகரன் ஜூசை பார்சல் கட்டிக்ெகாண்டிருந்தார். அந்த சமயத்தில் 2 வாலிபர்கள் மனோகரன் கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்தனர். பின்னர் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து மனோகரன் குரிசிலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவம் நடைபெறுவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர்.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம் (போளூர்- ஜமுனாமரத்தூர் - ஆலங்காயம்- வாணியம்பாடி) சாலையில் பாப்பனேரி கூட்டுரோடில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடக்கவிழா நடைபெற்றது.
விழாவிற்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை க.தேவராஜி எம் எல் ஏ முன்னிலை வகித்தார்.
வாணியம்பாடி- ஆலங்காயம் சாலையில் முதல் கட்டமாக 400 மரச்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் அன்பு எழில், உள்ளாச்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மின்னூரை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 28). இவர் தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் ஆம்பூர்- பேரணாம்பட்டு சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக்கும், இவர் ஓட்டி சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அரவிந்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். அவ்வழியாகச் சென்றவர்கள் அரவிந்தனை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அரவிந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 30 பாக்கெட்டுகள் பறிமுதல்
- சிறையில் அடைத்தனர்
வாணியம்பாடி:
வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் வெளி மாநில மது பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் டவுன் போலீசார் அங்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது மது பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த உஷா (வயது 30), ராதிகா (வயது 35) மற்றும் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த பிரேமா (வயது38), வளர்மதி (வயது 45), ஆகியோரை போலீசார் கைது செய்த அவர்களிடமிருந்து 30 கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர். மேலும்
4 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சட்டம் 2006 பிரிவு (31) கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது
- பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் மாவட்ட கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்பு) செந்தில்குமார் அறிவுறுத்த லின்படி ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி ஜோலார்பேட்டையில் உள்ள புது ஓட்டல் தெரு பகுதியில் ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட், மளிகை கடைகள், டீக்கடை உள்ளிட்ட கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கடைகளில் லைெசன்ஸ் இல்லாமல் கடை நடத்தி வந்த கடை உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு சட்டம் 2006 பிரிவு (31) கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும் கடைகளில் அதிக வர்ணம் கலந்த சிக்கன் மற்றும் சிக்கன் 65 இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.
மேலும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
மளிகை கடைகளில் காலாவதியான பொரு ட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். வணிக கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வை யாளர் பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சாலையோரங்களில் போண்டா, பஜ்ஜி விற்கும் கடைகளில் உணவுப் பொருட்களை கண்ணாடி பாக்ஸில் வைத்து விற்பனை செய்யவும், உணவுப் பொருட்களை சில்வர் கப், இலை போன்றவற்றில் விற்பனை செய்யவும், பேப்பர் மூலம் சூடான உணவுப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் கடை உரிமையாளர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி உரிமம் பெற வேண்டும் என்றும் உரிமம் பெற்றவர்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
ஜோலார்பேட்டை பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் மற்ற கடை உரிமையா ளர்களிடத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.
- முறை கேடாக பயன்படுத்தி வாகங்கள் பறிமுதல்
- அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை
திருப்பத்தூர்:
மத்திய அரசால் மானிய விலையில் வழங்கப்படும் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை ஓட்டல்கள், டீக்கடைகளில் முறைகேடாக பயன்ப டுத்தப்பட்டு வருவதை அதிகாரிகள் அவ்வப்போது கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆட்டோ கியாஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக சமையல் கியாஸ் சிலிண்டர்களை முறை கேடாக பயன்படுத்தி வாகங்களை இயக்குவதாக புகார்கள் வந்தன.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரிலும், வேலூர் துணை போக்குவரத்து ஆணை யர் எம் எஸ் இளங்கோவன், வட்டார போக்குவரத்து அலுவ லர்கள் எம்.பி. காளியப்பன், ராமகி ருஷ்ணன், திருப்பத்தூர், வாணியம்பாடி, மற்றும் செயலாக்கம் (என்போர்ஸ்மேன்ட்) வட்டாரப்போக்குவரத்து அலுவலர் பிரதீபா தலைமையில் கூட்டுத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன், விஜயகுமார், சிவராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு ஆய்வு செய்ததில் அனுமதிக்கு புறம்பாக சமையல் கியாஸ் சிலிண்டர் பொருத்தி இயக்கிய 12 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறு கையில், வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை பயன்ப டுத்தி ஆட்டோ ஓட்டக்கூ டாது.
இது போன்ற ஆட்டோக்கள் கண்டறி யப்பட்டால் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
- ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என அடையாளம் தெரியவில்லை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அல்லிமுத்து மகன் அருண்குமார் ( வயது 25). இவர் ஏ.சி. மெக்கானிக்கல் படித்து விட்டு, தற்போது சென்ட்ரிங் கூலி வேலை செய்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி அபிராமி (21) என்ற மனைவியும், அதிதீ (1½) மகளும் உள்ளனர். இதில் அருண்குமார் நேற்று காலை வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுசென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் பதறிப்போன அவரது உறவினர்கள் அக்கம், பக்கம் வீடுகளில் தேடிவந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் வின்னமங்கலம் - ஆம்பூர் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு அருண்குமார் சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன், விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி ரெயில் தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைப் பற்றி பிரத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என விவரம் தெரியவில்லை. ெரயில் முன் பாய்ந்த தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி இறந்தாரா என தெரியவில்லை.
இது குறித்து ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






