என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In the first phase"

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம் (போளூர்- ஜமுனாமரத்தூர் - ஆலங்காயம்- வாணியம்பாடி) சாலையில் பாப்பனேரி கூட்டுரோடில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடக்கவிழா நடைபெற்றது.

    விழாவிற்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை க.தேவராஜி எம் எல் ஏ முன்னிலை வகித்தார்.

    வாணியம்பாடி- ஆலங்காயம் சாலையில் முதல் கட்டமாக 400 மரச்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் அன்பு எழில், உள்ளாச்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 13,200 மரக்கன்றுகள் நட திட்டம்
    • 20 வகையான மரங்கள் நடப்படுகிறது

    அரக்கோணம்:

    அரக்கோணம் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் 'நந்தவனம் என்ற சேவை மையத்தோடு' இணைந்து, அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி விமானதளத்தில் ராஜாளி மியாவாக்கி வனம் உருவாக்க திட்டமிட்டு அதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக 20 வகையான மரங்கள் நடும் விழா நடைபெற்றது.

    இதில் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தின் கமான்டர் ஆர் வினோத் குமார், கமாண்டிங் அதிகாரி மரங்களை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    இந்த வனத்தில் 14,000 சதுர மீட்டர் பரப்பளவில் 13,200 மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளது. வேம்பு, வேங்கை, பூவரசு, சோறு, மந்தாரை, நொச்சி உள்ளிட்ட பல்வேறு நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

    ராஜாளியில் மரம் நடவுக்கான இடத்தை தயார் செய்ய 2 மாதங்கள் ஆனது. நவீன முறையில் அமைக்கப்பட்ட இந்த வனத்தில், தானாக வெட்டப்பட்ட சொட்டு நீர் பாசன முறையை உருவாக்குதல், தானாக செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல், தண்ணீர் வழங்குவதற்கான பாதைகள் மற்றும் கால்வாய்களை உருவாக்குதல் மற்றும் மரக்கன்றுகளை நடுதல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்விழாவில் ஐஎன்எஸ் ராஜாளி தளத்தில் உயரதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    ×