என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் கட்டமாக 400 மரச்கன்றுகளை நட்டு வைத்தனர்"

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம் (போளூர்- ஜமுனாமரத்தூர் - ஆலங்காயம்- வாணியம்பாடி) சாலையில் பாப்பனேரி கூட்டுரோடில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடக்கவிழா நடைபெற்றது.

    விழாவிற்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை க.தேவராஜி எம் எல் ஏ முன்னிலை வகித்தார்.

    வாணியம்பாடி- ஆலங்காயம் சாலையில் முதல் கட்டமாக 400 மரச்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் அன்பு எழில், உள்ளாச்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×