என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளியில் வனம் தொடக்க விழா
    X

    அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளியில் வனம் தொடக்க விழா நடந்த காட்சி.

    அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளியில் வனம் தொடக்க விழா

    • 13,200 மரக்கன்றுகள் நட திட்டம்
    • 20 வகையான மரங்கள் நடப்படுகிறது

    அரக்கோணம்:

    அரக்கோணம் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் 'நந்தவனம் என்ற சேவை மையத்தோடு' இணைந்து, அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி விமானதளத்தில் ராஜாளி மியாவாக்கி வனம் உருவாக்க திட்டமிட்டு அதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக 20 வகையான மரங்கள் நடும் விழா நடைபெற்றது.

    இதில் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தின் கமான்டர் ஆர் வினோத் குமார், கமாண்டிங் அதிகாரி மரங்களை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    இந்த வனத்தில் 14,000 சதுர மீட்டர் பரப்பளவில் 13,200 மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளது. வேம்பு, வேங்கை, பூவரசு, சோறு, மந்தாரை, நொச்சி உள்ளிட்ட பல்வேறு நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

    ராஜாளியில் மரம் நடவுக்கான இடத்தை தயார் செய்ய 2 மாதங்கள் ஆனது. நவீன முறையில் அமைக்கப்பட்ட இந்த வனத்தில், தானாக வெட்டப்பட்ட சொட்டு நீர் பாசன முறையை உருவாக்குதல், தானாக செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல், தண்ணீர் வழங்குவதற்கான பாதைகள் மற்றும் கால்வாய்களை உருவாக்குதல் மற்றும் மரக்கன்றுகளை நடுதல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்விழாவில் ஐஎன்எஸ் ராஜாளி தளத்தில் உயரதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×