search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி; டிரைவர் கைது
    X

    வாணியம்பாடியில் வாலிபரின் உறவினர்கள் சாலை மறியல் செய்த காட்சி.

    பைக் மீது டிராக்டர் மோதி வாலிபர் பலி; டிரைவர் கைது

    • சாலை மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் பேச்சுவார்த்தையடுத்து கலைந்து சென்றனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த வர் அயாஸ் அஹமத். இவரு டைய மகன் அப்ரார் அஹ மத் (வயது 19). தனியார் தொழிற்சாலையில் பணி யாற்றி வந்தார்.

    நேற்று காலை வழக்கம் போல மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்று கொண் டிருந்தார். மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் மோட்டார் சைக் கிள் மீது அந்த வழியாக வந்த டிராக்டர் மோதி விபத்துக் குள்ளானது. இதில் அப்ரார் அஹமதுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர்.

    அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பிறகு நீங்கள் மற்றும் பகுதி மக்கள் உடலை எடுக்க விடாமல் விபத்து ஏற்படுத்திய டாக்டர் டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    அதைத்தொடர்ந்து வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    அதன்பிறகு உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

    மறியல் போராட்டம் கார ணமாக சுமார் 2 மணி நேரத் துக்கும் மேலாக வாணியம்பா டியில் இருந்து ஆந்திரா செல் லும் சாலையில் போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்து தொடர்பாக வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்துவிபத்தை ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்த துடன், டிரைவர் அஜீத் (26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×