என் மலர்
நீங்கள் தேடியது "Often a family problem"
- சிங்கப்பூரில் வசிக்கும் கணவருடன் செல்போனில் தகராரில் விபரீதம்
- வாணியம்பாடி ஆர்டிஓ விசாரணை
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வள்ளிப் பட்டு அடுத்த புல்லாக் குட்டை பகுதியை சேர்ந்த வர் தியாகராஜன். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்று, அங்குள்ள தனி யார் நிறுவனத்தில் எலக்ட் ரீசியன் வேலைக்கு சேர்ந் துள்ளார்.
இவரது மனைவி மதிமாலா (30). தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை காரணமாக தக ராறு ஏற்பட்டு வந்ததாம். சிங்கப்பூருக்கு சென்ற பிறகும் செல்போன் மூலம்அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று முன்தி னம் மதியம், கணவருடன் செல்போனில் பேசும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மதிமாலா, 'தற்கொலை செய்து கொள் ளப் போகிறேன்' எனக்கூறி இணைப்பை துண்டித்தா ராம்.
அதிர்ச்சியடைந்த தியாகராஜன் உடனடியாக தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், உறவினர்கள் வந்து மதிமாலா வசிக்கும் வீட்டின் கதவை தட்டி யுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மதிமாலா தூக்குப் போட்ட நிலையில் இருந் தார். உடனடியாக அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மதிமாலா ஏற் கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த வாணியம் பாடி தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்த னர். மேலும், இறந்த மதி மாலாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் வாணியம்பாடி ஆர்டிஓ பிரேமலதா விசாரித்து வருகிறார்.






