என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை தாக்கிய 3 பேருக்கு வலை
    X

    பெண்ணை தாக்கிய 3 பேருக்கு வலை

    • கை விரல்களை உடைத்தனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி, கல்லறை மேடு பகுதியை சேர்ந்தவர் முனிரத்தினம் மனைவி ஸ்ரீதேவி (வயது 50).

    இவர் கடந்த 25-ந் தேதி தனது வீட்டின் அருகே வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீமதி, ஸ்ரீதேவியிடம் வீன் தகராறு செய்துள்ளார்.

    இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஸ்ரீமதி, அவரது தாயார் ஜெயசுந்தரி மற்றும் மகன் உதயமணி ஆகியோர் சேர்ந்து, ஸ்ரீதேவியை தாக்கியதோடு அவரது கை விரல்களை உடைத்துள்ளார்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் ஸ்ரீமதி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×