என் மலர்
நீங்கள் தேடியது "கஞ்சா வாலிபர்"
- போலீசாரின் அறிவுரையை ஏற்று நடவடிக்கை
- 4 பேர் கைது
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த தக்கோலம் பஜார் வீதியில் தூத்துக்குடி சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். அவருடைய கடையில் கஞ்சா கும்பல் வந்து தகராறு ஈடுபட்டதாகவும், இதுகுறித்து தக்கோலம் போலீசாரிடம் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த முத்துராமலிங்கம் கடையை மூடிவிட்டு "கஞ்சா போதையில் உலாவரும் ரவுடிகளால் இந்த கடை காலவரையின்றி மூடப்பட்டது" என்ற நோட்டீசை கடையின் ஷட்டரில் ஒட்டி விட்டு தன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்றார். இதனை தொடர்ந்து தக்கோலம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர். போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து முத்துராமலிங்கத்திற்கு முழு பாதுகாப்பு அளிப்பதாகவும் ஆகவே மீண்டும் கடையை திறக்க கோரி அவரிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற முத்துராமலிங்கம் இன்று காலை கடையைத் திறந்து வழக்கம் போல தன் பணியை மேற்கொண்டார்.
இது குறித்து முத்துராமலிங்கம் கூறியதாவது:-
வியாபாரிகள் சங்கத்தின் கோரிக்கை ஏற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கஞ்சா கும்பலை கைது செய்வது, பாதுகாப்பு அளிப்பதாக உறுதியின் பேரில் கடை திறந்ததாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அனைத்து வியாபாரி சங்க தலைவர் ஆரோக்கியசாமி தக்கோலத்தில் தற்போது கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் போலீசார் தனிக் கவனம் செலுத்தி இதை முற்றிலும் களைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தக்கோலம் போலீசாரிடம் கேட்டபோது:-
தற்போது பழைய கஞ்சா குற்றத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளோம். முத்துராமலிங்க கடையில் தகராறில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறோம் என்றார்.
- ரோந்து பணியில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆசிரியர் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மடக்கு பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையெடுத்து போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் தாரணி (வயது 22) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் 10 கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






