என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் ஓட்டம்
    X

    2 குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் ஓட்டம்

    • 24 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்
    • அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்ணை புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் மாதய்யன் (வயது 50).

    இவரது மகள் தெய்வானை (23). இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்த தாலபள்ளி அடுத்த பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (26) என்பவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு கவுசிக் (4), இளவரசன் (இரண்டரை வயது) ஆகிய மகன்கள் உள்ளனர்.

    மணிகண்டன் கூலி வேலை செய்து வந்தார். மணிகண்டன் வேலைக்கு சென்ற பிறகு, தெய்வானை நாள் முழுவதையும் தனது செல்போனில் பொழுதை கழித்துள்ளார்.

    அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் கிருஷ்ணகிரியை சேர்ந்த 2 வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தெய்வானை நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட போது, அவர் இன்ஸ்டாகிராமில் வாலிபர்களுடன் பழகி வருவது மணிகண்டனுக்கு தெரிந்தது.

    இது தொடர்பாக மணிகண்டன் பலமுறை அவரைக் கண்டித்துள்ளார். இருப்பினும் தெய்வானை வாலிபர்களுடன் இன்ஸ்டாகிராமில் பழகுவதை நிறுத்தவில்லை. இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    தனது பேச்சை கேட்காத கோபத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன், ஜோலார்பேட்டையில் உள்ள தனது மாமியார் லட்சுமி (43)யை, வரவழைத்து அவருடன் மனைவி மற்றும் பிள்ளைகளை அனுப்பி வைத்தார்.

    இதனை தொடர்ந்து தெய்வானை தனது அம்மா லட்சுமி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி தெய்வானை, தனது பிள்ளைகளை அம்மாவிடம் விட்டுவிட்டு, வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து தெய்வானையின் அம்மா லட்சுமி ஜோலார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப் -இன்ஸ்பெ க்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து, தெய்வானை கண்டு பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்.புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் போலீசார், தெய்வானை ஓசூரில் உள்ள தனது நண்பர் வீட்டில் இருப்பதை கண்டு பிடித்தனர். அவரை அழைத்து வந்து, அறிவுரைகள் வழங்கி தாய் லட்சுமி உடன் அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×