என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கார் மீது பைக் மோதி தொழிலாளி சாவு
ஜோலார்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே காளி நாயனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் வினோத் குமார் (வயது 19).
அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் வேடி (வயது 25). சாதனா (வயது 32) மற்றும் அன்பு (வயது 25) ஆகிய 3 பேரையும் தனது மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு வாணியம்பாடி பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
நாட்டறம்பள்ளி அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் முன்னாள் சென்று கொண்டிருந்த கார் டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.
அப்போது பின்னால் வந்த பைக் கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பயணம் செய்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
அந்த வழியாக சென்ற பொது மக்கள் படுகாயம் அடைந்த வேடி, சந்தோஷ்குமார், சாதனா ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் அன்பு லேசான காயமின்றி உயிர் தப்பினார். மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேடி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் வேடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்