

கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை கிராமத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன் தலைமையில், தென்னை மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
இதில் மகளிர் குழுவினர் கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் தென்னை மரக்கன்றுகள் நட்டனர்.
ஊராட்சிகளில் சுத்தமான மற்றும் பசுமையான கிராமமாக செயல்பட அனைத்து மக்களும் செயல்படுவோம் என சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்றனர்.