என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
- தண்ட வாளத்தை கடக்கும்போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை - திருப்பத்தூர் ரெயில் நிலையங்களுக்கிடையே சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று ஓடும் ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.
இவர் ரெயில் தண்ட வாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது ஓடும் ெரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடந்தி வருகின்றனர்.
Next Story






