என் மலர்
திருச்சிராப்பள்ளி
- இன்று கோலாகலமாக நடைபெற்றது
- குணசீலம் பெருமாள் கோவில் தேரோட்டம்
,
திருச்சி,
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ உற்சவம் கடந்த 17-ந் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. முதல் நிகழ்வாக அன்று இரவு 7:15 மணிக்கு புண்யாக வசனம் மற்றும் அங்குரார் பணம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது. 2-வது நாள் நிகழ்வாக 18-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு புண்யாக வசனம், பேரீ தாடனம் நடைபெற்றது. மேலும் அன்று இரவு 7.30 மணிக்கு ஸ்வர்ண கம்ச வாகன சேவை மற்றும் கண்ணாடி அறை சேவை நடைபெற்றது. 19-ந் தேதி ஸ்வர்ண சிம்க வாகன சேவையும், 20-ந் தேதி அனுமந்த வாகன சேவையும், 21-ந் தேதி கருட சேவையும், 22-ந் தேதி சேஷ வாகன சேவையும், 23-ந் தேதி கஜ வாகன சேவையும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவ விழா 24-ந் தேதி நடைபெற்றது. 25-ந் தேதி அஸ்வ வாகன சேவை நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய நாளான இன்று (26-ந் தேதி) தேரோட்டம் நடைபெற்றது. இதை யடுத்து காலை 5 மணிக்கு திருவாராதன நிகழ்வும், காலை 5.30 மணிக்கு ஸ்ரீ பெருமாள் உபய நாச்சியாருடன் தேர்த ட்டில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் சரியாக காலை 8.30 மணிக்கு திருத்தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் தேர் வீதி உலா வந்தது. தேரோட்டத்தில் திருச்சி வடக்கு தி.மு.க. செயலாளர் காடு வெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், குணசீலம் ஊராட்சி தலைவர் குருநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து மாலை 4:30 மணிக்கு காவேரி தீரம் எழுந்தருளல், 5 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், 5.30 மணிக்கு தீர்த்தவாரி, மாலை 6.30 மணிக்கு ஏகாந்த மண்டப கும்ப தீபாராதனை, 6. 45 மணிக்கு பரம்பரை டிரஸ்டிகள் மரியாதை செய்யும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. நாளை (27 -ந் தேதி) இரவு 8:30 மணிக்கு உத்வாசன பிரபந்தம் சமர்ப்பித்தல் நிகழ்ச்சியும், 28-ந் தேதி இரவு 9:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு புறப்பாடு, இரவு 10மணிக்கு ஏகாந்த மண்டப கும்ப தீபாராதனை, இரவு 10.30 மணிக்கு கண்ணாடி அறை சேவை ஆகியவையுடன் விழா நிறைவு பெறுகிறது.
- லாட்டரி விற்ற 5 பேர் கைது
- திருச்சி திருவெறும்பூரில் லாட்டரி விற்ற 5 பேர் கைது
திருவெறும்பூர், திருச்சி மாவட்ட சிறப்பு தனிப்படையினர், திருவெறும்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த, வடக்கு காட்டூர் பாரதிதாசன் நகர் 4-வது தெருவை சேர்ந்த பிரான்சிஸ் (வயது 42), அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் முனீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (60), வடக்கு காட்டூர் பாப்பா குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவகுமார்(48), பாத்திமாபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த மாரியப்பன்( 52 ) பாரதிதாசன் நகர் 7வது தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ( 46 ) ஆகிய 5 பேரை கைது செய்ததோடு அவர்களிடமிருந்து ரூ.3 ஆயிரம்,ஒரு மொபட், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் ஐந்து பேரும், கைப்பற்றப்பட்ட பணம், பொருட்களுடன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில், சிறப்பு தனிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிந்த திருவெறும்பூர் போலீசார் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- 100 நாள் வேலையில் நிலுவை சம்பளம் வழங்கவில்லை
- பொதுமக்கள் சாலை மறியல்
துறையூர், திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொட்டையூர் ஊராட்சி சங்கம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 1 வார காலமாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வேலை வழங்கப்படாமலும், ஏற்கனவே செய்யப்பட்ட வேலைக்கு சம்பள பணம் பட்டுவாடா செய்யப்படாமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து சங்கம்பட்டி கிராம பொதுமக்கள் சங்கம்பட்டி - எரகுடி சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த துறையூர் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தற்சமயம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடம் மழையின் காரணமாக சேறாக இருப்பதால், புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்படும் எனவும், சம்பள பணம் இந்த வாரத்தில் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சங்கம்பட்டி- எரகுடி சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கட்டிட தொழிலாளி மர்ம மரணம்
- உறவினர்கள் சாலை மறியல்
துறையூர், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சி தெற்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 34). இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி அபிராமி (28) என்கிற மனைவியும், ஜஸ்வந்த் (5), சாகித்யா (2) என்கிற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஆனந்த் இரவு வேலை காரணமாக துறையூருக்கு சென்று வருவதாக, மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வேலையை முடித்துவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் மீண்டும் சொந்த கிராமத்திற்கு செல்லும் பொழுது, அம்மாபட்டி பிரிவு சாலை அருகே, நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்த வர்கள் ஆனந்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஆனந்தின் தந்தை துரைசாமி துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்கிற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இறந்த ஆனந்தின் உறவினர்கள் சம்பவ நேரத்தில் அங்கு இருந்த அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்த நபர்கள் தான் ஆனந்தை கொலை செய்ததாகவும்,போலீசார் உடனடியாக கொலை வழக்கு பதிவு செய்து, 3 நபர்களையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி துறையூர் போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த முசிறி போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிட செய்தனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
- பெயிண்டர் தற்கொலை
- திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பெயிண்டர் தற்கொலை
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ராமர் . இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 35). பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (29) என்ற பெண்ணுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் இருவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளனர். இந்நிலையில் பாலகிருஷ்ணன், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்படிபுதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடந்தி வருகிறார்கள்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
- மூன்று பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் கொடியாலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னன். இவரது மகன் கோகுல் (வயது 19). இவர் திருச்சி திருவெறும்பூரில் உள்ள அரசு ஐடிஐயில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவர் பின்னர் வீடு திரும்பினார். அதன் பின்னர் இரவு கோகுல் மற்றும் அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கினர்.
நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது.
இதனால் வீட்டில் புழுக்கமாக இருந்த காரணத்தால் கதவுகளை திறந்து வைத்து அண்ணன், தம்பி இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது தக்க தருணம் பார்த்து வீட்டுக்குள் புகுந்த கொலையாளிகள் தூங்கிக் கொண்டிருந்த கோகுலின் கழுத்தை கொடூரமாக அறுத்தனர்.
இதில் துடிதுடித்த அவர் வேதனை தாங்க முடியாமல் வீட்டிலிருந்து வெளியே ஓடி வாசலில் விழுந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
கோகுலின் அலறல் சத்தம் கேட்டு சகோதரர் திடுக்கிட்டு எழுந்து வெளியே ஓடி வந்துள்ளார். ஆனால் சற்று நேரத்திலேயே அவரது மூச்சு அடங்கிவிட்டது.
இது குறித்து ஜீயபுரம் போலீசுக்கு அவர் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட கோகுல் மீது அடிதடி வழக்குகள் உள்ளது. இந்த முன் விரோதத்தில் கொலை நடந்ததா அல்லது கோவில் விழாவில் ஏற்பட்ட மோதலில் கொலை நடந்ததா என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும் மூன்று பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஐடிஐ மாணவனை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- திருச்சி விமான நிலையத்தில் ரூ.38.70 லட்சம் மதிப்பிலான 646 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
- இரண்டு பயணிகளிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
கே.கே.நகர்,
திருச்சி விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர்.அப்போது ஒரு பயணி கொண்டு வந்த டிராவல் பேக் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தது.இதனை தொடர்ந்து வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பேக்கை சோதனை செய்தனர். அதில் கம்பி வடிவில் தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது தெரிய வந்தது.இதேபோன்று மலேசியாவில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி வந்தது. இதில் வந்த பெண் பயணி ஒருவரை சோதனை செய்தபோது அவர் தனது உள்ளாடையில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது.இந்த இரண்டு பயணிகளிடமிருந்து ரூ.38.70 லட்சம் மதிப்பிலான 646 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு பயணிகளிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
- கலெக்டர் பிரதீப் குமார் மூதாட்டி இடம் இருந்து மனுவை பெற்றுக் கொண்டு அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்
திருச்சி,
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை சேர்ந்தவர் முத்தாத்தாள்(வயது 71). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான வீட்டை 16 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி உள்ளார்.
முன்பணமாக ரூ 6 லட்சமும் அதனைத் தொடர்ந்து ரூ 2 லட்சமும் என மொத்தம் 8 லட்சம் கொடுத்துள்ளார். மீதமுள்ள 8 லட்சம் ரூபாயை பத்திரப்பதிவு அலுவலகத்தில் செலுத்தி அந்த வீட்டை பதிவு செய்வதற்காக சென்றபோது ஏற்கனவே அந்த வீட்டின் மீது வங்கியில் கடன் பெற்றுள்ளது தெரியவந்தது.எனவே முத்தாத்தாள் தனக்கு வீடு வேண்டாம் என்று கூறி பெற்றுக் கொண்ட அட்வான்ஸ் தொகையை திருப்பி தருமாறு முருகானந்தத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து காலம் தாழ்த்தி சுமார் ஆறு வருட காலமாக பணத்தை திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார்.இது தொடர்பாக அவர்கள் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் புகார் மட்டும் பெற்றுக் கொள்ளப்பட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த முத்தாத்தாள் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். பின்னர் கலெக்டர் பிரதீப் குமார் மூதாட்டி இடம் இருந்து மனுவை பெற்றுக் கொண்டு அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
- திருச்சி மேலப்புதூர் அருகே அடுத்தடுத்து 3 பஸ்கள் மோதல்
- திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பஸ்களையும் பறிமுதல் செய்து விசாரணை
திருச்சி,
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை சுமார் 7.25 மணி அளவில் தனியார் பஸ்கள் சத்திரம் பஸ் நிலையம் நோக்கி புறப்பட்டு சென்றது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். திருச்சி மேலப்புதூர்அருகில் உள்ள ஜோசப் கண் மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் ஒரு தனியார் பஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த தனியார் டவுன் பஸ் அந்த பஸ்சின் மீது மோதியது. அந்த சமயத்தில் அதற்கு பின்னால் வந்த மற்றொரு தனியார் பஸ் இரண்டாவதாக உள்ள பஸ் மீது மோதியது .இதில் அடுத்தடுத்து பஸ்கள் மோதியதில் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர் .இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பஸ்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பழைய காவேரி பாலம் பகுதியில் குளிப்பதற்காக சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி
- ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி- மதுரை ரோடு குப்பான்குளத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37). இவரது மனைவி கௌசல்யா ( 23). இவர்கள் இருவரும் ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை அருகே உள்ள பழைய காவேரி பாலம் பகுதியில் குளிப்பதற்காக சென்றனர். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் போது ரமேஷ் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதனால் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கினார்.இதில் ரமேஷ் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கௌசல்யா கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சி பொன்மலைபட்டியில் நடன மாணவி மாயம்
- போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்
திருச்சி,
திருச்சி பொன்மலைப்பட்டி திரு.வி.க தெரு சி.வி.டி.ஸ்டோர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் ஹரிணி. இவர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கல்லூரியில் கிளாசிக்கல் டான்ஸ் பயிற்சி பெற்று வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் உமா மகேஸ்வரி பொன்மலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.
- தென்மாவட்ட ரவுடிகளுக்கு நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்து வந்தது தெரியவந்தது.
- மறைத்து வைத்திருந்த 2 அரிவாள், 4 நாட்டு வெடிகுண்டுகள், 30 கிராம் வெடி மருந்து ஆகியவற்றை கைப்பற்றி 2 பேரையும் கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே தாயனூர் பகுதியில் ரவுடிகளுக்கு நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயிற்சி அளிப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.
அப்போது அதவத்தூர் சந்தை புதிய கட்டளை வாய்க்கால் அருகாமையில் சந்தேகம்படும்படியாக 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை விடாமல் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் தென்மாவட்ட ரவுடிகளுக்கு நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்து வந்தது தெரியவந்தது.
பின்னர் அங்கு மறைத்து வைத்திருந்த 2 அரிவாள், 4 நாட்டு வெடிகுண்டுகள், 30 கிராம் வெடி மருந்து ஆகியவற்றை கைப்பற்றி 2 பேரையும் கைது செய்தனர்.
கைதானவர்கள் சோமரசன்பேட்டை தாயனூர் கீழக்காடு கீழபுறம் பகுதியை சேர்ந்த சிவசக்தி (வயது 21), தாயனூர் வடக்கு தெருவை சேர்ந்த கர்ணன் (23) என்பது தெரியவந்தது.
மேலும் பிடிப்பட்ட 2 வாலிபர்கள், நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து ரவடிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு சப்ளை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
யார் யாருக்கு அவர்கள் வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் சப்ளை செய்தார்கள் என்று புலன் விசாரணை நடந்து வருகிறது. கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரவுடிகளுக்கு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி அளித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






