search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி திருவெறும்பூரில்லாட்டரி விற்ற 5 பேர் கைது
    X

    திருச்சி திருவெறும்பூரில்லாட்டரி விற்ற 5 பேர் கைது

    • லாட்டரி விற்ற 5 பேர் கைது
    • திருச்சி திருவெறும்பூரில் லாட்டரி விற்ற 5 பேர் கைது


    திருவெறும்பூர், திருச்சி மாவட்ட சிறப்பு தனிப்படையினர், திருவெறும்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த, வடக்கு காட்டூர் பாரதிதாசன் நகர் 4-வது தெருவை சேர்ந்த பிரான்சிஸ் (வயது 42), அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் முனீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (60), வடக்கு காட்டூர் பாப்பா குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவகுமார்(48), பாத்திமாபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த மாரியப்பன்( 52 ) பாரதிதாசன் நகர் 7வது தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ( 46 ) ஆகிய 5 பேரை கைது செய்ததோடு அவர்களிடமிருந்து ரூ.3 ஆயிரம்,ஒரு மொபட், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் ஐந்து பேரும், கைப்பற்றப்பட்ட பணம், பொருட்களுடன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில், சிறப்பு தனிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிந்த திருவெறும்பூர் போலீசார் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.




    Next Story
    ×