என் மலர்
திருச்சிராப்பள்ளி
- ஒரு இடத்தை காட்டி இந்த இடத்தில் கடை கட்டி தருவதாக கூறினார்
- வெகு நாட்கள் ஆகியும் கடை கட்டி தரவில்லை
திருச்சி
திருச்சியை அடுத்த முத்தரசநல்லூர் ரெங்கா நகரில் உள்ள ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வருபவர் சாதிக் அகமது (வயது 57).
இவர் மலேசியாவில் வேலை பார்த்துவிட்டு கடந்த 2021-ம் ஆண்டு தாயகம் திரும்பினார்.
பின்னர் நண்பர் இஸ்மாயில் என்பவரை அணுகி தொழில் தொடங்க ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு அவர் திருச்சி மதுரை ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே ஒரு இடத்தை காட்டி இந்த இடத்தில் கடை கட்டி தருவதாகவும், அதில் தொழில் தொடங்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.
இதை நம்பிய சாதிக் அகமது கடந்த 2022-ம் வருடம் செப்டம்பர் மாதம் 4-ந் தேதி ரூ.5 லட்சமும், 14-ந் தேதி ரூ.10 லட்சமும், மீண்டும் 24-ந் தேதி ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.25 லட்ச ரூபாய் பணத்தை முருகானந்தம் மற்றும் நிஜாமுதீன் ஆகியோரிடம் கொடுத்தார்.
ஆனால் அவர்கள் வெகு நாட்கள் ஆகியும் கடை கட்டி தரவில்லை. கொடுத்த பணமும் திருப்பி தரவில்லை.
பின்னர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட சாதிக் பணத்தை பெற்றுக் கொண்ட முருகானந்தம், நிஜாமுதீன் ஆகியோரிடம் பணத்தை திரும்ப கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க மறுத்ததோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதை அடுத்து பாதிக்கப்பட்ட சாதிக் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மோசடி செய்த பணத்தை மீட்டு தருமாறு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் கடந்த மாதம் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் முருகானந்தம், நிஜாமுதீன் ஆகிய இருவர் மீதும் மோசடி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் திருச்சி மேலப்பஞ்சபூர் மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஜெயா.
இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த தேவி (39) என்பவர் ரூ. 1500க்கு பொருட்கள் கடன் வாங்கியுள்ளார்.
பின்னர் அந்த தொகையை திரும்ப செலுத்தவில்லை. இதை கேட்ட போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தேவி ஜெயாவை தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வந்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 21 ) கஞ்சா விற்றுக் கொண்டிரு ந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்து அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
இதே போன்று திருச்சி இ.பி. ரோடு சினிமா தியேட்டர் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த இ.பி. ரோடு பகுதியை சேர்ந்த ராஜா ( 28) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்
- ஆயுத பூஜையை முன்னிட்டு கடைக்காரர்கள் சாமி கும்பிட்டு விட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர்
- சிலர் நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்
திருச்சி
திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலம் பாலத்தின் அடிப் பகுதி கடைவிதியில் செல்போன், மளிகை, பேன்சி ஸ்டோர், டீக்கடை உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த கடைக்காரர்கள் சாமி கும்பிட்டு விட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் சிலர் நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மணிகண்டம் போலீசில் கடையின் உரிமையாளர்கள் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் இரண்டாவது நாளாக மீண்டும் நாகமங்கலம் அருகில் உள்ள பாத்திமா நகர் கடை வீதியில் உள்ள கடைகளில் திருட்டு சம்பவம் நடந்தது.
திருச்சி- புதுக்கோட்டை எல்லை பகுதியான பாத்திமா நகர் கடை விதியில் உள்ள சுமார் 9-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் முருகன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம ஆசாமிகள் பணம், பொருட்களை திருடி உள்ளனர்.
சுமார் ஒரு லட்சம் ரொக்கம், மற்றும் மளிகை, பேன்சி, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனதாக கடையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்,
இந்த இரண்டு கொள்ளை சம்பவங்களும் அடுத்தடுத்து நாட்களில் நடந்து உள்ளது . இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கொள்ளையர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில்
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத கடைகளை நோட்டமிட்டு, ஷட்டர் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொடர்ந்து அடுத்தடுத்து 2 நாட்கள் பகுதியில் கொள்ளை நடைபெற்ற சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தின்.
இந்தக் கொள்ளை சம்பவத்தில் திருச்சியில் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இரண்டு மாவட்ட காவல் துறையும் ஒன்றிணைந்து கொள்ளையர்களை விரைவில் பிடிக்க வேண்டும் பொதுமக்கள், வியபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- மதுரை ரோடு பகுதியில் தனது காரை நிறுத்திவிட்டு பெரிய கடை வீதிக்கு சென்றார்
- கார் கண்ணாடி சேதப்படுத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்
திருச்சி
திருச்சி அல்லித்துறை சிவன் கோவில் பகுதி சேர்ந்தவர் பொன்.முருகன். இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் திருச்சி மதுரை ரோடு பகுதியில் தனது காரை நிறுத்திவிட்டு பெரிய கடை வீதிக்கு சென்றார். பிறகு சிறிது நேரம் கழித்து பொருட்களை வாங்கிக்கொண்டு காரை எடுக்க வந்த போது கார் கண்ணாடி சேதப்படுத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் 4 டயர்களும் பஞ்சர் செய்யப்பட்டிருந்தது.
இது குறித்து பொன். முருகன் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை சேதப்படுத்திய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
- பேரன் பெயர் சூட்டும் நிகழ்ச்சிக்காக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்
- திடீரென படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்த செல்வராஜ் பலத்த காயமடைந்தார்
திருச்சி
திருச்சி இ.பி. ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
சம்பவத்தன்று இவர் தையல்காரர் தெருவில் உள்ள உறவினர் வீட்டில் பேரன் பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பஸ்சில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்த செல்வராஜ் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்தார்
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்
திருச்சி,அக்.24-
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள வாளாடி கிராமப் பகுதியை சேர்ந்தவர் தோனி (வயது 34). இவர் திருச்சி அரியமங்கலம் ரெயில்வே கேட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை தஞ்சை மாவட்டம் நாஞ்சி கோட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் ( 43) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.350 பணத்தை பறித்துக் கொண்டு ஒடியதாக தெரிகிறது. இது குறித்து அரியமங்கலம் போலீசில் தோனி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மார்ட்டினை கைது செய்தனர்.
இவர் ஏற்கனவே ரவுடி பட்டியலில் இருப்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து ஒரு கார், 1 செல்போன், அரிவாள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் திருச்சி மேல கல்கண்டார் கோட்டை பகுதி சேர்ந்தவர் ஜமீல் (42) இவர் வயர்லெஸ் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திருச்சி ஏர்போர்ட் பசுமை நகரை சேர்ந்த ஜெயக்குமார் (29)என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ. 500 பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனர்.
- இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.
- மர்ம நபர் ஒருவர் வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்
திருச்சி
திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆசாரி தெரு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 28). இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் குட்செட் பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை மர்ம நபர் ஒருவர் வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதில் அவரது உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரவிக்குமார் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் வக்கீலை கத்தியால் குத்தியவர் திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் (25)என்பது தெரியவந்தது பின்னர் அவரை போலீசார் கைது செய்து கைது ஜெயிலில் அடைத்தனர்.
- சுதந்திர போராட்ட வீரர்கள் தேசத்துக்காக மிக அதிகமாகவே உழைத்தவர்கள்.
- நம் நாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் உயிரை கொடுத்து ரத்தம் சிந்தியவர்களை மறக்க முடியாது.
சென்னை:
கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சி என்ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் நேற்று நடைபெற்ற மருது சகோதரர்கள் நினைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
நமது தேச விடுதலைக்காக அசாத்தியமான தியாகங்களை செய்த தமிழ்நாட்டின் மாபெரும் வீரமிக்க சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள்.
தமிழ்நாட்டுக்கு நான் கவர்னராக வந்தபோது, மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி அறிய விரும்பினேன். அந்த பட்டியலில் வெகு சிலரே இருந்தனர். சகோதரர்கள் போன்ற சிறந்த தேசிய சுதந்திர போராளிகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
"எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் இருந்த வீரம் நிறைந்த பூமியில் வெகு சில சுதந்திர போராளிகள் மட்டுமே இருந்தது எனக்கு ஏமாற்றம் அளித்தது.
சுதந்திர போராட்ட வீரர்கள் தேசத்துக்காக மிக அதிகமாகவே உழைத்தவர்கள். அவர்களைப் பற்றிய எனது ஆய்வைத் தொடர்ந்தபோது, பாரதத்தின் விடுதலைக்காக உயிரைக் கொடுத்த பல ஆயிரம் சுதந்திர போராட்ட வீரர்கள் இருப்பதை அறிந்தேன். ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியின் மையமாக விளங்கிய சிவகங்கை மாவட்டத்தில், 2012-ம் ஆண்டில் நடந்த சட்டம்-ஒழுங்கு சீர்குலைவை காரணம் காட்டி, அக்டோபர் 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை கூட்டம் நடத்தக்கூடாது என சமீபத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனால் மாவீரர்களையும் அவர்களின் தியாக தினங்களையும் கொண்டாடுவது தடைபடுகிறது. இத்தகைய நிகழ்வுகளைக் கொண்டாடினால் அவற்றால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிடக் கூடும் என்பதை அறிந்து நான் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தேன்.
மாவட்ட நிர்வாகமும் அரசாங்கமும் பதற்றத்தைத் தீர்த்து கருத்து வேறுபாடு கொண்டவர்களை ஒன்றிணைத்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை கொண்டாட வேண்டும். அதற்குப் பதிலாக, 11 ஆண்டுகளுக்குப் பின்பும் ஏதேனும் மோதல்கள் ஏற்படும் என எதிர்பார்த்து, மாவீரர்களை கொண்டாடுவதும், அவர்களின் தியாகங்கள் கொண்டாடப்படுவதும் தடை செய்யப்பட்டு உள்ளது.
கடந்த காலங்களில் அரசியல் கட்சிகளோ அவற்றின் தலைவர்களோ தங்களின் ஆண்டு நிகழ்வுகளை கொண்டாடியபோது சட்டம்-ஒழுங்கு சம்பவம் நடந்திருந்தால், அடுத்தடுத்த ஆண்டுகளில் அக்கொண்டாட்டங்களை தடை செய்திருப்பார்களா? தேசிய சுதந்திர போராட்ட வீரர்கள் என்று வரும்போது மட்டும் மருது சகோதரர்கள் என்றும், தேச விடுதலைக்காகப் போராடிய நேதாஜியுடன் இணைந்து பணியாற்றியவருமான முத்துராமலிங்க தேவர் ஆகியோரின் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது.
நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்களாகவும், ஜாதிகளுக்கு இடையே பாகுபாடு காட்டாதவர்களாகவும் இருந்த தலைவர்கள் ஜாதிய தலைவர்களாக மாறியிருப்பது வேதனை அளிக்கிறது.
இந்த தேச சுதந்திர தியாகிகளை, அரசாங்கம் கொண்டாடியிருக்குமானால், மக்கள் அதில் பங்கெடுத்திருப்பார்கள். அந்த நிகழ்வுகளை மக்களின் நினைவிலிருந்து அழிக்க அரசு முயற்சிப்பதால், பள்ளி பாட புத்தகங்களில் இருந்து அவர்களைப் பற்றிய தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.
அவர்களின் அடையாளமும் பங்களிப்புகளும் எப்போதாவது நடக்கும் ஆண்டு விழாக்களின் வடிவில் மட்டுமே கொண்டாடப்படுகின்றன. வெளிப்படையாக சொல்வதென்றால் அவை வாக்கு வங்கிக்காக நடக்கின்றன.
ஆனால், அரசாங்கத்தாலும் அதிகாரத்தில் இருப்பவர்களாலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் அந்த தலைவர்களை மக்கள் மறக்கத் தொடங்கினாலும் வழி, வழியாக வந்த அவர்களின் சமூகத்தினரால் அவர்கள் மறக்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, ஜாதிய அடிப்படையில் இங்கே பிளவுபட்ட ஒரு சமூகம் மோசமான நிலையில் இருக்கிறது.
"இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மாணவர்கள் ஜாதி அடையாளத்தைக் குறிக்கும் கயிறு அணிந்து பள்ளிக்குச் செல்வதை நான் கண்டதில்லை. ஜாதிகளின் அடிப்படையில் சமூகம் துண்டாடப்பட்டு, தேச சுதந்திர வீரர்கள், ஆட்சியில் இருப்பவர்களால் மறக்கப்பட்டபோது, அவர்கள் சார்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் அந்த தலைவர்களை தங்களுக்கு மட்டுமே உரியவர்களாக சொந்தம் கொண்டாடிக் கொள்கின்றனர். இன்று நமது தேசிய தலைவர்கள் ஜாதி தலைவர்களாக சிறுமைப்படுத்தப்பட்டு விட்டதால், ஆங்காங்கே பதற்றம் ஏற்படுகிறது. அந்த தலைவர்களின் நினைவுகள் ஏன் அழிக்கப்பட்டன? ஏனென்றால், இங்கு தேசிய சுதந்திர போராட்டத்தைப் பற்றிப் பேசும்போது பயமாக இருக்கிறது.
ஆட்சியில் இருப்பவர்கள் தேசிய சுதந்திர இயக்கம் மற்றும் தேசிய சுதந்திர வீரர்கள் பற்றி பேச வெட்கப்படுகிறார்கள். அவர்களைப் பற்றி பேசும் தருணத்தில், அவர்கள் (ஆட்சியில் உள்ளவர்கள்) தேசிய சுதந்திர இயக்கத்திற்கு எதிராக அக்காலத்தில் செயல்பட்டவர்கள் என்பதால் அவர்கள் அம்பலப்படுத்தப்படுகிறார்கள்.
இதனாலேயே தேசிய இயக்கத்தை தோற்கடிக்க அவர்கள் ஆங்கிலேயர்களுடன் ஒத்துழைப்பாக இருந்தனர். இவை அனைத்தும் ஆவணத்தில் பதிவு செய்யப்பட்ட விஷயங்கள்.
கடந்த ஆண்டு, கடந்த 2-ந்தேதி, மகாத்மா காந்தியின் பிறந்தநாளில், ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது: நான் மற்ற தலைவர்களுடன் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தச் சென்றேன். பக்கத்தில், மகாத்மா காந்தி மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் பெரிய புகைப்பட கண்காட்சி இருந்தது. முழு கண்காட்சியிலும், திராவிட கருத்தியலை அடையாளப்படுத்தும் ஒரு புகைப்படம் ஒன்று கூட இருக்கவில்லை. அது அவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, அந்த நிகழ்வில் புகைப்பட கண்காட்சி தர்மசங்கடத்தைத் தரும் என்பதால் அது இல்லாமல் ஆக்கப்பட்டது.
மருது சகோதரர்கள் ஜாதி தலைவர்களாக சிறுமைப்படுத்தப்படுவதைப் பார்க்கும் போது, மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் படேல், பகத் சிங் போன்றவர்களும் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் கூட அவர்களும் ஒரு ஜாதி தலைவர்களாகவே சுருங்க வைக்கப்பட்டிருப்பார்கள்.
நம் நாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் உயிரை கொடுத்து ரத்தம் சிந்தியவர்களை மறக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- மர்மநபர்கள் நள்ளிரவில் எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தினர்.
- சிலையின் வலது கையை உடைத்து, இடுப்பு பகுதியை நொறுக்கி இருந்தனர்.
திருச்சி:
திருச்சி லால்குடி அருகே ரெட்டி மாங்குடியில் அ.தி.மு.க. சார்பில் 2003-ம் ஆண்டு 5 அடி உயரம் கொண்ட எம்.ஜி.ஆர்.சிலை நிறுவப்பட்டது.
இந்த சிலைக்கு அவரது பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளின் போது நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் அந்த எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தினர். சிலையின் வலது கையை உடைத்து, இடுப்பு பகுதியை நொறுக்கி இருந்தனர்.
இதை அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து அப்பகுதியில் குவிந்தனர்.
பின்னர் அவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த லால்குடி துணை போலீஸ் சூப்பிரெண்டு அஜய் தங்கம் மற்றும் காணக்கிளியநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே சிலை உடைக்கப்பட்ட தகவல் அறிந்து தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப. குமார் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறும் போது, சமூக விரோத செயல்களுக்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன் இந்த இழிசெயலுக்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கிடையே பிரச்சனைகளை மேலும் தவிர்ப்பதற்காக அங்கே போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
- 20-க்கும் மேற்பட்ட நபர்கள் சரமாரியாக உருட்டு கட்டைகளால் தாக்கினர்
- 5 பேரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்
கே.கே.நகர்
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில் ஏ.சி.எல். என்ற சாப்ட்வேர் நிறுவனத்தை பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த 2012-ம் ஆண்டு கனரா வங்கியில் ரூ.22 கோடி கடன் வாங்கிவிட்டு 2019-ம் ஆண்டு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகினர்.
இதனையடுத்து வங்கியில் பெற்ற கடனுக்காக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவின்படி காஜாமலை பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான ரூ.44 லட்சம் மதிப்புள்ள வீட்டை மண்டல துணைதாசில்தார் பிரேம்குமார், கனரா வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்ய சென்றனர். அப்போது, அடையாளம் தெரியாத 20-க்கும் மேற்பட்ட நபர்கள் சரமாரியாக உருட்டு கட்டைகளால் தாக்கினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த துணை தாசில்தார் பிரேம்குமார், வங்கி ஊழியர்கள் படுகாயத்துடன் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை அடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருச்சி காஜாமலை பகுதியைச் சேர்ந்த அசேன் (வயது 42), சையது ஜாகிர் உசேன் (29), ஷேக் மொய்தீன் (40), திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி(30), மாடசாமி(24)ஆகிய 5 பேரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
கைதான 5 பேரையும் குற்றவியல் நீதிமன்றம் நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- சாப்பிடுவதற்காக ஓட்டலுக்கு சாலையை கடந்து சென்றார்
- திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது
ராம்ஜிநகர்
திருச்சி முசிறி அருகே உள்ள ஏழூர்பட்டி வாளவாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவர் திருச்சி திண்டுக்கல் சாலை இனாம் குளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் கியாஸ் நிறுவனத்தில் ஒப்பந்த லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் வழக்கம்போல் பணிக்கு வந்தவர் சாப்பிடுவதற்காக இரவு 10 மணி அளவில் இந்தியன் ஆயில் கியாஸ் நிறுவனத்துக்கு எதிர்ப்புறம் உள்ள ஓட்டலுக்கு சாலையை கடந்து சென்றார். அப்போது மணப்பாறையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதனை அறிந்து அங்கு வந்த இனாம்குளத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அரசு பஸ் டிரைவர் திருச்சி கள்ளிக்குடியைச் சேர்ந்த மாணிக்கம் (56) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கரூர் ரோடு பகுதியில் தினேஷ் மயங்கி கிடந்தார்
- டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருச்சி,
சென்னை செங்கல்பட்டு மதுராந்தகம் பெரும்பாக்கம் ரெட்டியார் தெரு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 44). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் .
இந்த நிலையில் கோட்டை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கரூர் ரோடு பகுதியில் தினேஷ் மயங்கி கிடந்தார்.அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது சகோதரர் கிஷோர் கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்போனை சட்டை பாக்கெட்டில் இருந்து எடுத்துக்கொண்டு ஓட முயற்சி செய்தார்
- பின்னர் சக பயணிகள் உதவியுடன் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்
திருச்சி,
காரைக்கால் சின்ன கோவில் தோப்பு தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 22). நடன கலைஞரான இவர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சி வந்தார்.
பின்னர் ஊர் திரும்ப டவுன் பஸ்ஸில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு சென்றார். பின்னர் ரெயில் நிலையத்தில் அவர் இறங்கிய போது மர்ம நபர் ஒருவர் அவரது செல்போனை சட்டை பாக்கெட்டில் இருந்து எடுத்துக்கொண்டு ஓட முயற்சி செய்தார். அப்போது ஆகாஷ் அந்த வாலிபரை பலமாக பிடித்துக் கொண்டார். பின்னர் சக பயணிகள் உதவியுடன் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
கைதான வாலிபர் பாலக்கரை காஜா பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சம்பத் (30)என்பது தெரியவந்தது.






