search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் வக்கீல் காரை சேதப்படுத்திய மர்ம ஆசாமி
    X

    திருச்சியில் வக்கீல் காரை சேதப்படுத்திய மர்ம ஆசாமி

    • மதுரை ரோடு பகுதியில் தனது காரை நிறுத்திவிட்டு பெரிய கடை வீதிக்கு சென்றார்
    • கார் கண்ணாடி சேதப்படுத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்

    திருச்சி

    திருச்சி அல்லித்துறை சிவன் கோவில் பகுதி சேர்ந்தவர் பொன்.முருகன். இவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் திருச்சி மதுரை ரோடு பகுதியில் தனது காரை நிறுத்திவிட்டு பெரிய கடை வீதிக்கு சென்றார். பிறகு சிறிது நேரம் கழித்து பொருட்களை வாங்கிக்கொண்டு காரை எடுக்க வந்த போது கார் கண்ணாடி சேதப்படுத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் 4 டயர்களும் பஞ்சர் செய்யப்பட்டிருந்தது.

    இது குறித்து பொன். முருகன் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை சேதப்படுத்திய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×