search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலி
    X

    அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலி

    • சாப்பிடுவதற்காக ஓட்டலுக்கு சாலையை கடந்து சென்றார்
    • திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது

    ராம்ஜிநகர்

    திருச்சி முசிறி அருகே உள்ள ஏழூர்பட்டி வாளவாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவர் திருச்சி திண்டுக்கல் சாலை இனாம் குளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் கியாஸ் நிறுவனத்தில் ஒப்பந்த லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் வழக்கம்போல் பணிக்கு வந்தவர் சாப்பிடுவதற்காக இரவு 10 மணி அளவில் இந்தியன் ஆயில் கியாஸ் நிறுவனத்துக்கு எதிர்ப்புறம் உள்ள ஓட்டலுக்கு சாலையை கடந்து சென்றார். அப்போது மணப்பாறையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இதனை அறிந்து அங்கு வந்த இனாம்குளத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அரசு பஸ் டிரைவர் திருச்சி கள்ளிக்குடியைச் சேர்ந்த மாணிக்கம் (56) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×