என் மலர்
தேனி
- தேனி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அந்த டாஸ்மாக் கடையில் திடீர் சோதனை நடத்தினார்.
- கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
தேனி:
தேனி மாவட்டம் கண்டமனூர் டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயித்ததை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனைத் ெதாடர்ந்து தேனி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தனலட்சுமி அந்த டாஸ்மாக் கடையில் திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் விற்ப னையாளர் முத்தையாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையில் மட்டுேம மதுபானங்கள் விற்க வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
- ஆத்திரம் அடைந்த ஜெயப்பிரகாஷ் தனது நண்பனை கொலை செய்ய முடிவு செய்தார்.
- இறந்து கிடந்த கருப்பசாமியின் உடலை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது40). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.
ஜெயப்பிரகாஷ் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது நண்பர் தேவாரம் அருகில் உள்ள கிருஷ்ணம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (36). இவர் கார்பெண்டர் வேலை பார்த்து வருகிறார். இருவரும் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். கருப்பசாமி நெருங்கிய நண்பராக இருந்ததால் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
கருப்பசாமிக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் ஜெயப்பிரகாஷ் குடும்பத்துக்கு பண உதவிகள் செய்து வந்துள்ளார். ஆனால் அந்த பணத்தை ஜெயப்பிரகாஷ் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே கொடுத்த பணத்தை வாங்குவதற்காக ஜெயப்பிரகாஷ் வீட்டிற்கு அடிக்கடி வந்து அவரது மனைவியிடம் கருப்பசாமி பணம் கேட்டு வந்துள்ளார். இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து ஜெயப்பிரகாசிடம் கூறவே இனிமேல் தனது வீட்டிற்கு வரவேண்டாம் என கருப்பசாமியிடம் கூறி உள்ளார்.
அவரும் சம்மதம் தெரிவித்து விட்டு ஜெயப்பிரகாசுக்கு தெரியாமல் அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயப்பிரகாஷ் தனது நண்பனை கொலை செய்ய முடிவு செய்தார்.
வழக்கம்போல் மது அருந்த வருமாறு கருப்பசாமியை அழைத்துள்ளார். அதன்படி அவர்கள் 2 பேரும் சேர்ந்து பொட்டிப்புரம் செல்லும் சாலையில் ஒண்டிவீரன் கோவில் அருகே மது குடித்தனர். கருப்பசாமிக்கு போதை தலைக்கேறியபோது தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால் அவரை சரமாரியாக வெட்டி கொன்றார். அதன்பின் ரத்தக்கறையுடன் போடி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு வந்து தான் கொலை செய்துவிட்டதாக கூறினார்.
ஆனால் அவர் மீன் வியாபாரி என்பதால் அதனால் ரத்தக்கறை ஏற்பட்டிருக்கலாம் என நினைத்தும், போதையில் உளறுவதாக நினைத்தும் போலீசார் நம்ப மறுத்துவிட்டனர்.
ஆனால் தான் கொலை செய்து விட்டேன் என கூறி அழுதுகொண்டே இருந்ததால் டி.எஸ்.பி. பெரியசாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றனர். அங்கு இறந்து கிடந்த கருப்பசாமியின் உடலை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலை செய்ததை ஒத்துக்கொண்ட பிறகும் போலீசார் அலட்சியத்தால் இரவு முழுக்க போலீஸ் நிலையத்தில் இருந்து பின்னர் போலீசார் ஜெயப்பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்மன் கோவில்களில் ஆடி 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
- கவுமாரியம்மன் கோவிலில் மஞ்சள் பொடி தூவி, எலுமிச்சை மாலைகள் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.
கம்பம்:
கம்பம் கவுமாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக அதிகளவில் பெண்கள் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
கவுமாரியம்மன் கோவிலில் மஞ்சள் பொடி தூவி, எலுமிச்சை மாலைகள் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.
- 14 வயதுக்குட்பட்ட பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட பிரிவிலும் கம்பம் சக்திவிநாயகர் பன்னாட்டு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.
- வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் அச்சுதநாகசுந்தர் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.
கம்பம்:
மதுரை சகோதயா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் சார்பாக தேனி மேரிமாதா பப்ளிக் பள்ளியில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது.
இதில் 15 அணிகள் கலந்து கொண்டன. 14 வயதுக்குட்பட்ட பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட பிரிவிலும் கம்பம் சக்திவிநாயகர் பன்னாட்டு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் அச்சுதநாகசுந்தர் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலப்பூ பூத்தது. இரவில் ஒருநாள் மட்டும் பூக்கும் இந்த அதிசய பூ தாமரை மலரைவிட பெரியஅளவில் உள்ளது.
- இந்த அதிசய மலரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.
கம்பம்:
கம்பம் மணிநகரத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி. ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர் தனது வீட்டில் ஏராளமான பூச்செடிகள் வளர்த்து வருகிறார்.
இதில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலப்பூ பூத்தது. இரவில் ஒருநாள் மட்டும் பூக்கும் இந்த அதிசய பூ தாமரை மலரைவிட பெரியஅளவில் உள்ளது. இரவில் பூத்து பகலில் வாடியது. இந்த அதிசய மலரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். சிலர் சூடம் ஏற்றி வழிபட்டனர்.
- புலிகள் சரணாலய பகுதியில் அமைந்துள்ளதால் பள்ளி கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வனத்துறை அதிகாரிகள் அனுமதி தரவில்லை.
- மேற்கூரை பகுதி இடிந்து விழுந்த போது அதிர்ஷ்டவசமாக வகுப்பறைக்குள் எந்த குழந்தையும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகே மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசரடி மலைக்கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் படித்து வருகின்றனர்.
அரசரடி கிராமம் அமைந்துள்ள வனப்பகுதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றப்பட்டு தற்போது புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசரடி கிராமத்தில் செயல்பட்டு வரும் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பகுதி சேதமடைய தொடங்கி யது. ஆனால் புலிகள் சரணாலய பகுதியில் அமைந்துள்ளதால் பள்ளி கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வனத்துறை அதிகாரிகள் அனுமதி தரவில்லை. இதனால் பள்ளி கட்டிடம் நாளுக்கு நாள் அதிக அள வில் சேதமடைந்து வந்தது.
மழை பெய்யும் நேரங்களில் மேற்கூரை வழியாக நீர்க்கசிவு ஏற்பட்டதால் குழந்தைகளின் கல்வி பாதிப்படைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மதிய உணவு இடைவேளை யின் போது குழந்தைகள் அனைவரும் பள்ளி வளாகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த னர்.
அப்போது வகுப்பறை கட்டிடத்தின் குறிப்பிட்ட அளவிலான மேற்கூரை பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக வகுப்பறைக்குள் எந்த குழந்தையும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் மற்றும் கல்வி அதிகாரிகள் நேரில் சென்று பார்வை யிட்டனர்.
இருப்பினும் வனத்துறை யினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வருவதால் பள்ளி கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை இதனால் கடந்த 2 நாட்களாக குழந்தைகள் மரத்தடியில் அமர வைக்கப்பட்டு ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தி வருகின்றனர்.
தற்ேபாது அரசரடி கிராமத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. எனவே மழை பெய்யும் நேரங்களில் மரத்தடியில் அமரவும் முடியாமல் வகுப்பறைக்குள் செல்லவும் முடியாமல் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் பள்ளி குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளிக்க உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
- கூலித்தொழிலாளி, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர் உள்பட 6 பேர் மாயமாகினர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பூதிப்புர த்தை சேர்ந்தவர் ராம்தாஸ் (வயது63). கூலித்தொழி லாளி. சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார்.
இது குறித்து பழனிசெட்டி பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து முதியவரை தேடி வருகின்ற னர்.
பழனிசெட்டிபட்டி அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி புவனேஸ்வரி (34). மகள்கள் பவித்ரா (13), கிருபா (12), சம்பவத்தன்று ரவிக்குமார் வேலைக்கு சென்று விட்டார். மாலை வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த மனைவி மற்றும் மகள்கள் மாயமாகி இருந்தனர். செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்ப ட்டிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தும் கிடைக்காததால் பழனி செட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே கும்பக்கரை பிரிவு பகுதியை சேர்ந்தவர் அழகுபாண்டி மனைவி கோகிலா (21). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட னர்.
இந்த நிலையில் கோகிலா திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கா ததால் பெரியகுளம்
தேவதானப்பட்டியை சேர்ந்தவர் வீராச்சாமி (55). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பள்ளியில் விசாரித்தபோது விடுமுறை என்று கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி லட்சுமி பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதான ப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீராச்சாமியை தேடி வருகின்றனர்.
- இருட்டில் மறைந்திருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த வாலிபர் திடீரென தான் கையில் வைத்திருந்த கயிறால் அவரை கழுத்தை இறுக்கினார்.
- கொள்ளையடிக்கும் நோக்கில் தனது வீட்டில் புகுந்த கொள்ளையன் தான் சுதாரித்துவிட்டதால் தன்னை தாக்கியதாகவும், அவரை பிடித்து கைது செய்யும்படியும் புகாரில் தெரிவித்திருந்தார்.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள முருக்கோடை கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(60). அ.தி.மு.க பிரமுகரான இவர் க.மயிலாடும்பாறை முன்னாள் யூனியன் சேர்மனாவார். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் நாய்குரைக்கும் சத்தம் கேட்கவே எழுந்து வந்தார்.
அப்போது வீட்டின் கதவு திறந்துகிடந்தது. இதனால் அதிர்ச்சிஅடைந்து அங்கே சென்று பார்த்தார். அப்போது இருட்டில் மறைந்திருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க முகமூடி அணிந்த வாலிபர் திடீரென தான் கையில் வைத்திருந்த கயிறால் அவரை கழுத்தை இறுக்கினார்.
இதில் ராமர் விடுபட்டு கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். இதனையடுத்து அந்த வாலிபர் தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிஓடிவிட்டார். இதுகுறித்து வருசநாடு போலீசில் ராமர் புகார் அளித்தார்.
கொள்ளையடிக்கும் நோக்கில் தனது வீட்டில் புகுந்த கொள்ளையன் தான் சுதாரித்துவிட்டதால் தன்னை தாக்கியதாகவும், அவரை பிடித்து கைது செய்யும்படியும் புகாரில் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முகமூடி கொள்ளையனை தேடி வருகின்றனர்.
- பன்னாட்டு நிறுவனத்துடன் சிறந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்புக்களுடன் கூடிய பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறது.
- பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 81 மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் நிர்வாகிகள் வழங்கினார்கள்.
தேனி:
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். கல்லூரி செயலாளர் மகேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் பேசுகையில், மாணவர்களிடையே வேலைவாய்ப்பு பெறுவது, கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் பன்னாட்டு நிறுவனத்துடன் சிறந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்புக்களுடன் கூடிய பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக இன்டொன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்பு பெற ஆக்கபூர்வமான முறையில் கல்லூரியில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை பேராசிரியர்கள் அனைத்து துறை மாணவர்களும் வேலைவாய்ப்பு பெறுவதற்கு திறனறியும் தேர்வு, குரூப் டிஸ்கசன், எழுத்து தேர்வு, நேர்முக தேர்வை தயக்கமின்றி அணுகுவதற்கும், ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சிகள் போன்றவற்றை மாணவர்களுக்கு சிறந்த முறையில் அளிக்கப்பட்டு ஆண்டு தோறும் 80 சதவீதம் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்று பேசினார்.
விழாவின் போது கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் வேலைவாய்ப்பு துறையின் அறிக்கையினை சமர்பித்தார். மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னனி நிறுவனங்களான ஜோஹோ, டேட்டா பேட்டன்ஸ், டி.சி.எஸ், நியாமோ, வெப்ரக்ஸ், ஜோபின்-ஜிஸ்மி. ப்ளிப்ஸ். எஸ்.எம்.ஐ. பின்னக்கல், டீம் கம்யூட்டர்ஸ், டைமண்ட்க்ளாஸ். சுயர்சாப்ட் சொலியூசன்ஸ். ஸ்பைகா டெக், மெலன் வென்சர்ஸ், அப்போலா, டி.என்.டி. ஐ.ஜே.எல், இமெர்ஜ் டெக். க்யூப்-ஸ்கொயர், மேஜிக் ரிச். எட்ரிக்கல் இன்ஜினியரிங், எம்ப்ளையன் எலக்ட்ரா இ.வி. கோ-ஸ்கில், டெஸோமெட்ரிக். நார்டில். எம்.எஸ் சாப்ட்வேர் சொலியூசன்ஸ், கம்யூட்ரா போன்ற நிறுவனங்களில் 81 மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பை பெற்றனர். கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின்
பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 81 மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் நிர்வாகிகள் வழங்கினார்கள்.
விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், கல்லூரி துணை முதல்வர் மாதவன். வேலைவாய்ப்பு பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி, பேராசிரியர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், கல்வி நிறுவனங்களின் கமிட்டி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி இணைச்செயலாளர் நவீன்ராம் நன்றி கூறினார்.
- படுகாயம் அடைந்தவரை பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
பெரியகுளம்:
பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் ஆசிக்அகமது (வயது26). இவருடைய மனைவி ஆப்ரின் (25). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மாமனார் வீட்டில் தங்கி கேட்டரிங் சர்வீசில் சமையல் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டு மாடியில் பாத்திரங்களை வைக்க சென்றபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த ஆசிக்அகமதுவை பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தமிழகத்தைச் சார்ந்த 3093 மாணவ - மாணவியர்க ளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு ள்ளது.
- 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்க ப்படும்.
தேனி:
மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடு விற்குள் விண்ணப்பித்து எழுத்துத் தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்து ள்ளார்.
2023-24 ஆம் ஆண்டின் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர், பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவி த்தொகை திட்டம் அறிவிக்க ப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சார்ந்த 3093 மாணவ - மாணவியர்க ளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு ள்ளது.
இத்திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ண ப்பதாரர்களின் (மாணவ/ மாணவியர்கள்) பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்க ப்படும். மாணவர்கள் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்விற்கு 10.08.2023 க்குள் இணைய தள முகவரியில் விண்ண ப்பிக்க வேண்டும். விண்ண ப்பத்தி ல் திருத்தம் மேற்கொள்ள 12.08.2023 முதல் 16.08.2023 வரை கால அவகாசம் வழங்கப்ப டும்.
எழுத்துத் தேர்வு 29.09.2023 அன்று நடை பெறும். விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்க ப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்க ளுக்கு இணையதள முகவரி யை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா, தெரிவித்துள்ளார்.
- உத்தமபாளையம் ஏ.எஸ்.பி மதுகுமாரி இரவு நேர ரோந்து பணிக்காக அபுகனி டிரைவராக சென்றார்.
- கூடலூர் தெற்கு போலீசில் பணிபுரிந்த கிட்டுராஜன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியின் போதே உயிரிழந்தார்.
கூடலூர்:
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் அபுகனி(40). இவரது மனைவி ஷகிலாபேகம். இவர்களுக்கு ஒரு மகள், 3 மகன்கள் உள்ளனர். ஷகிலாபேகம் குமுளிபகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
அபுகனி கூடலூர் தெற்கு போலீசில் ஏட்டாக வேலைபார்த்து வந்தார். இதனால் அவர்கள் குடும்பத்துடன் குமுளி அருகே உள்ள தாமரைக்கண்டம் பகுதியில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் உத்தமபாளையம் ஏ.எஸ்.பி மதுகுமாரி இரவு நேர ரோந்து பணிக்காக அபுகனி டிரைவராக சென்றார். நள்ளிரவு 12 மணியளவில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற போலீசார் அவரை மீட்டு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கூடலூர் தெற்கு போலீசில் பணிபுரிந்த கிட்டுராஜன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியின் போதே உயிரிழந்தார். இதேபோல் பிரபு என்ற போலீஸ்காரர் 2 மாதத்திற்கு முன்பு உயிரிழந்தார். தொடர்ந்து 3 மரணங்கள் ஏற்பட்டுள்ளதால் போலீசார் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், பொதுவாகவே போலீசாருக்கு பணிச்சுமை அதிகம். சில இடங்களில் பணியிடங்கள் காலியாக உள்ளது நிரப்பபடவில்லை. போலீசார் பற்றாக்குறையால் அவர்களுக்கு மேலும் பணிச்சுமை ஏற்படுகிறது. இதன்காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். பெரும்பாலும் விடுமுறை எடுக்க முடியாததால் குடும்பத்திலும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீர் மரணங்கள் நிகழ்கிறது. எனவே போலீசாருக்கு மனநல ஆலோசனை மற்றும் போதிய அளவு ஓய்வு வழங்கவேண்டும் என்றனர்.






