தேனி அருகே விபத்தில் வாலிபர் பலி

வாகனத்துக்கு பதிவெண் வாங்குவதற்காக மோட்டார் ைசக்கிளில் திண்டுக்கல் - குமுளி பைபாஸ் சாலையில் சென்றார். பொம்மைய கவுண்டன்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேனி:

உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்ராஜா (வயது 24). இவர் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்தார். புதிய பைக் வாங்கி டி.வாடிப்பட்டியில் வைத்திருந்தார்.

இந்த வாகனத்துக்கு பதிவெண் வாங்குவதற்காக மோட்டார் ைசக்கிளில் திண்டுக்கல் - குமுளி பைபாஸ் சாலையில் சென்றார். பொம்மைய கவுண்டன்பட்டி பிரிவு பகுதியில் வந்தபோது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அழகர்ராஜா தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com