என் மலர்
தேனி
- அரிசி கொம்பன் யானை ஓர் இடத்தில் தொடர்ந்து நின்றால் மட்டுமே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும்.
- மருந்து செலுத்தியதும் அங்கும் இங்கும் 1 மணி நேரம் அரிசி கொம்பன் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதால் அந்த பாதையை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
உத்தமபாளையம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதியில் அட்டகாசம் செய்து 11 பேரை பழி வாங்கிய அரிசி கொம்பன் கடந்த ஏப்ரல் மாதம் கேரள வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
அதன் பிறகு தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்ட அரிசி கொம்பன் கடந்த 27-ந் தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்தது. சாலைகள் மற்றும் தெருக்களில் நடந்து சென்றவர்களை விரட்டியதுடன் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோவையும் சேதப்படுத்தியது.
சாலையில் நடந்து வந்த கம்பத்தைச் சேர்ந்த பால்ராஜ் (65) என்பவரை தாக்கியதில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நேற்று அவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண தொகையை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்.
இதனிடையே சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி பகுதிகளில் புகுந்த அரிசி கொம்பன் ராயப்பன்பட்டி சண்முகா நதி அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனை பிடிப்பதற்காக அழைத்து வரப்பட்ட 3 கும்கி யானைகள் கம்பம் வனப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
சண்முகநாதன் கோவிலில் புகுந்த அரிசி கொம்பன் அங்கே தங்கி இருந்து கோவிலில் பூஜை செய்து வரும் சரஸ்வதியம்மாள் (63) என்பவரது வீட்டை இடித்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து அவர் கோவிலுக்குள் சென்று கிரில் கேட்டை பூட்டிக் கொண்டார். அதன் பிறகு கோவிலுக்கு வந்த யானை அங்கிருந்த சமையலறை சுவற்றை சேதப்படுத்தி உள்ளே இருந்த பருப்பு, அரிசி, உப்பு ஆகியவற்றை தின்று விட்டு சென்றது. கடந்த 5 நாட்களாக கம்பம் சுற்று வட்டார பகுதிகளை பீதியில் ஆழ்த்தியுள்ள அரிசி கொம்பன் யானை சோர்வுடனும், தும்பிக்கையில் காயத்துடனும் சுற்றி வருகிறது.
அரிசி கொம்பன் யானை ஓர் இடத்தில் தொடர்ந்து நின்றால் மட்டுமே மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும். அதிலும் கடந்த முறை நடந்த ஆபரேசனின்போது 6 மயக்க ஊசி செலுத்தியும் அரிசி கொம்பன் பிடிபடவில்லை. எனவே மருந்தின் அளவை அதிகரித்து மயக்க ஊசி செலுத்தும் முனைப்பில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மருந்து செலுத்தியதும் அங்கும் இங்கும் 1 மணி நேரம் அரிசி கொம்பன் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதால் அந்த பாதையை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் யாரும் செல்லாமல் கண்காணித்து வருகின்றனர்.
கடந்த 5 நாட்களாக வனத்துறையினர், போலீசார் என 150-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து அரிசி கொம்பனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் தற்போது பாதிக்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப்பட்டனர். சிறு சிறு குழுக்களாக சுழற்சி முறையில் யானை இருக்கும் இடத்தை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.
தற்போது இருக்கும் இடம் மேகமலை அடிவார பகுதியாகும். இங்கிருந்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியிலேயே தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை உள்ளிட்ட யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் சமிக்ஞை மொழிகளை பேசி தைரியமாக நுழைபவர்கள் முதுமலை பழங்குடி இன மக்கள். இவர்கள் ஆக்ரோஷமாக சுற்றித்திரியும் யானைகளிடம் சங்கேத மொழிகளால் பேசி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திறமை பெற்றவர்கள்.
அக்குழுவைச் சேர்ந்த பொம்மன், சுரேஷ், சிவா, ஸ்ரீகாந்த் ஆகிய 4 பழங்குடியினர் கம்பம் வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் அரிசி கொம்பனை அதன் பாணியில் நடந்து வெளியே கொண்டு வர கும்கி யானைகளுடன் செல்ல உள்ளனர். எனவே அரிசி கொம்பன் யானை இன்று வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- டி.வாடிப்பட்டி ரேசன்கடைகளில் பெரியகுளம் வட்டார பொதுவினியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- பொருட்களின் இருப்பும் குறைவாக இருந்தது தொடர்ந்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
தேனி:
தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் ஆரோக்கியசுகுமார் வெளியிட்டுள்ள செய்தி யில் கூறியிருப்பதாவது, பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டி மற்றும் டி.வாடிப்பட்டி ரேசன்கடைகளில் பெரியகுளம் வட்டார பொதுவினியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் திடீர் ஆய்வு மேற்கொ ண்டார்.
அப்போது ரேசன் கடை விற்பனையாளர் ஜெயக்குமார் முறை கேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் பொருட்களின் இருப்பும் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. இதனைதொடர்ந்து ஜெயக்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
மேலும் அவர்மீது உத்தமபாளையம் குற்றப்புலனாய்வுத்துறை குடிமைப்பொருள் வழங்கல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- நேற்று மாலை இப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கி தென்னைமரம் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது
- மின்னல் தாக்கியதில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் டி.வி, மோட்டார், பேன் உள்பட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடிமின்ன லுடன் மழை பெய்து வருகிறது. மேலும் அவ்வ ப்போது சூறைக்காற்றும் வீசி வருகிறது. சங்க ராபுரம் பகுதியில் அங்காளஈஸ்வரி கோவில் அருகே தென்னை மரங்கள்உ ள்ளது.
நேற்று மாலை இப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கியது. இதில் தென்னைமரம் தீப்பற்றி கொளு ந்துவிட்டு எரிய தொடங்கியது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் தீயை அணைக்க முயன்ற னர். ஆனால் முடியாததால் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் விரைந்து வந்து சுமார் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். மேலும் மின்னல் தாக்கியதில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் டி.வி, மோட்டார், பேன் உள்பட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தது.
- காலை 500 பேருக்கும், மதியம் 500 பேருக்கும், இரவு 500 பேருக்கும் என நாள் ஒன்றுக்கு 1,500 பேருக்கு தற்போது உணவு வழங்கப்பட்டு வருகிறது.
- வயதானவர்கள், கூலி தொழிலாளர்கள், குழந்தைகள் குடும்பம் குடும்பமாக வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு விசைத்தறி, மஞ்சள், ஜவுளி, தோல் தொழிற்சாலைகள் அதிகளவில் இயங்கி வருகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஈரோடு பிரப் சாலையில் புதிய உணவகம் தொடங்கப்பட்டு உள்ளது. ஆற்றல் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில் மலிவு விலையில் ரூ.10-க்கு உணவு கிடைக்கிறது. காலை 8 மணி முதல் 10 மணி வரை சுடச்சுட இட்லி, சாம்பார், சட்னியும், மதியம் 12 மணி முதல் 2 மணி வரை சாதம், சாம்பார், பொரியல், மோர் மற்றும் ஊறுகாயும், இரவு 7 மணி முதல் 9 மணி வரை இட்லி, சாம்பார், சட்னியும் சுடச்சுட வழங்கப்படுகிறது.
இங்கு ரூ.10 கட்டணத்தில் பசியாற விரும்புவோருக்கு ருசியான தரமான உணவை வாரம் 7 நாட்களும் காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் அளவில்லா உணவு வழங்கப்படுகிறது. இதற்காக சிறந்த சமையல் கலைஞர்கள், ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து உணவு சாப்பிடும் இடவசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த உணவகம் ஈரோட்டில் தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. காலை 6.30 மணி முதலே உணவகத்தில் மக்கள் சாப்பிடத் திரண்டு விடுகின்றனர். கூட்டம் அலைமோதுவதால் வரிசையில் பொதுமக்கள் நின்று சாப்பிட்டு செல்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இட்லி தீர்ந்து விடுகிறது.
இதேபோல் மதியம் 40 நிமிடங்களுக்குள்ளாகவே சாதம் தீர்ந்து விடுகிறது. இரவும் இதே நிலைமை தான் இருக்கிறது. சாதாரண கூலி தொழிலாளர்கள் ஏழைகள் மட்டுமின்றி வசதி படைத்தவர்களும் குடும்பமாக வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.
சாப்பிட வருபவர்களிடம் உணவை வீணடிக்க வேண்டாம் என்று கூறி தான் உணவு பரிமாறப்படுகிறது. சாப்பிட்டு முடித்ததும் அவர்களே தட்டுகளை கழுவி ஊழியரிடம் கொடுக்க வேண்டும். நல்ல காற்றோட்ட வசதியுடன் உணவு அருந்தும் வகையில் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. சாப்பிட வருபவர்களுக்கு ஆர்.ஓ. வாட்டர் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஆற்றல் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஆற்றல் அசோக்குமார் கூறியதாவது:-
ஆற்றல் அறக்கட்டளை சார்பில் ஏராளமான சமுதாய பணிகள் செய்து வருகிறோம். எங்கள் அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் அனைவருக்கும் சம உரிமை வழங்குவது தான்.
எங்கள் அறக்கட்டளை மூலம் கிராமப்புற பள்ளிகளை மேம்படுத்துதல், சமுதாயக்கூடம் கட்டி கொடுத்தல், ஆட்டோ டிரைவர்கள், கூலித்தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர்களை பாராட்டி கவுரவித்தல் உள்பட ஏராளமான சேவைகளை ஆற்றி வருகிறோம்.
தற்போது புதிய முயற்சியாக பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு மலிவான விலையில் தரமான உணவு வழங்க முடிவு செய்யப்பட்டு முதல் முறையாக ஆற்றல் அறக்கட்டளை சார்பாக மலிவு விலை உணவகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
முதலில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் உணவின் மதிப்பு தெரியாமல் போய்விடும் என்பதால் 10 ரூபாய் கட்டணத்தில் காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் தலா ரூ.10-க்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
காலை 500 பேருக்கும், மதியம் 500 பேருக்கும், இரவு 500 பேருக்கும் என நாள் ஒன்றுக்கு 1,500 பேருக்கு தற்போது உணவு வழங்கப்பட்டு வருகிறது. பார்சல் வசதி கிடையாது. பொதுமக்கள் நேரடியாக உணவகத்திற்கு வந்து சாப்பிட்டு செல்லலாம்.
இதன் முக்கிய நோக்கம் அனைத்து தரப்பு மக்களும் வயிறார தரமான உணவை சாப்பிட்டு செல்ல வேண்டும் என்பதுதான். உணவகம் தொடங்கி சில நாட்களே ஆகிறது. ஆனால் பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
வயதானவர்கள், கூலி தொழிலாளர்கள், குழந்தைகள் குடும்பம் குடும்பமாக வந்து சாப்பிட்டு செல்கின்றனர். சாப்பிட வருபவர்களிடம் உணவை வீணாக்க வேண்டாம் என அன்பு கட்டளை இடுகிறோம். ஏனென்றால் கொரோனா காலகட்டத்தில் தான் உணவு அருமை நமக்கு தெரிய வந்தது. உணவுக்காக பலர் கஷ்டப்பட்டனர்.
கொரோனா காலகட்டத்தில் ஆற்றல் அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளை நிர்வாகிகள் பொதுமக்களை நேரடியாக சென்று சந்தித்து உணவு பொட்டலங்களை வழங்கினார்கள். இதன் அடிப்படையிலேயே தற்போது மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்களை காக்க வைக்காமல் இருப்பதற்காக நவீன எந்திரங்கள் மூலம் ஒரே நேரத்தில் 100 இட்லி வரை தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த உணவகத்திற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளதால் ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கும் ஆற்றல் உணவகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தற்போது சண்முகா நதி அணை பகுதியில் அரிசி கொம்பன் யானை சுற்றித் திரிகிறது.
- மருத்துவ குழுவினர் தெரிவிக்கையில், யானையை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்திய பிறகே கும்கிகளை வரவழைக்க முடியும்.
கம்பம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் காட்டு யானையை கடந்த மாதம் 27-ந் தேதி கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர்.
அதன் பிறகு மெல்ல மெல்ல தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது. கடந்த 27-ந் தேதி லோயர் கேம்ப் தனியார் திருமண மண்டபம், சுருளியாறு மின் நிலையம், நாட்டுக்கல், நந்தகோபாலன் கோவில் தெருக்களில் சுற்றித் திரிந்தது.
அன்று கம்பத்தில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்த காவலாளியான மேற்கு ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 65) என்பவரை தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரை அமைச்சர்கள் இ.பெரியசாமி, மதிவேந்தன் ஆகியோர் பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன் நிவாரண உதவியும் வழங்கினர்.
இந்நிலையில் இன்று அதிகாலை பால்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கம்பம் 28-வது மேற்கு ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். 1 மகளுக்கும், மகனுக்கும் திருமணம் ஆகி விட்டது. விஷ்ணுபிரியா என்ற 2-வது மகளுக்கு திருமணம் ஆகவில்லை. அவருக்கு வரன் பார்த்து வந்த நிலையில் பால்ராஜ் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அவரது மனைவி பிச்சையம்மாள் கூறுகையில், ஏழ்மையான எங்கள் குடும்பத்தில் ஒரே ஆதரவாக எனது கணவர் மட்டுமே இருந்தார். ஒரு மகனையும், ஒரு மகளையும் திருமணம் செய்து வைத்த நிலையில் 2-வது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு முன்பாகவே இறந்து விட்டார். இனி எங்கள் குடும்பத்துக்கு யார் ஆதரவு என்பது தெரியவில்லை. எனவே அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.
இதனிடையே அரிசி கொம்பன் யானையை பிடிக்க தொடர் வேட்டை நடந்து வருகிறது. அதனை பிடிக்க வந்த 3 கும்கி யானைகள், கம்பம் வனத்துறை அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சண்முகா நதி அணை பகுதியில் அரிசி கொம்பன் யானை சுற்றித் திரிகிறது.
இதனையடுத்து வனத்துறையினர் மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி, துணை இயக்குனர் ஆனந்த் தலைமையில் முகாமிட்டுள்ளனர். மருத்துவக்குழுவினர், மயக்க ஊசி செலுத்த தயாராகினர். ஆனால் சுதாரித்துக்கொண்ட அரிசி கொம்பன் டாக்டர்களை கண்டதும் அங்கிருந்து வெளியேறியது. அது செல்லும்போது மயக்க ஊசி செலுத்த முடியாது என்பதால் 'ட்ரேக்கிங் டீம்' ஊட்டி யானைகள் முகாமில் இருந்து வந்த சிறப்பு குழுவினர் பின் தொடர்ந்து சென்றனர். அதனையடுத்து சண்முகநாதன் கோவில் வழியாக பத்துக்கூடு பகுதிக்கு சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அரிசி கொம்பன் யானையை பிடிக்க ஏற்கனவே இருந்த டாக்டர்கள் விடுவிக்கப்பட்டு பிற மாவட்டங்களில் இருந்து வன உயிரின சிறப்பு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவ குழுவினர் தெரிவிக்கையில், யானையை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்திய பிறகே கும்கிகளை வரவழைக்க முடியும். அதற்கு முன்பாக கும்கிகள் இங்கு வந்தால் அது வேறு இடத்துக்கு சென்று விடும். வனப்பகுதியில் உள்ள பாதைகளை ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு சமப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அது விரும்பும் உணவு கிடைக்காததால் மிகவும் சோர்வோடு காணப்படுகிறது. மேலும் 3 நாட்களில் ஒருமுறை மட்டுமே சாணமிட்டுள்ளது. எனவே காலி வயிற்றுடன் நடமாடுவதால் மலை ஏற முடியாமல் சுற்றி வருகிறது என்று தெரிவித்தனர்.
இதனிடையே அரிசி கொம்பன் யானையை பிடிக்க அங்குள்ள கூத்தநாச்சி கோவிலில் தலைமை வனப்பாதுகாவலர் பத்மாவதி ஆலோசனைப்படி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கம்பம், சுருளிப்பட்டி, காமையகவுண்டன்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு தொடர்கிறது. ராயப்பன்பட்டி அருகே விவசாய தோட்டங்களில் வேலை செய்து வந்த கூலித் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சுருளி அருவிக்கு குளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
அரிசி கொம்பன் யானையை பிடிக்கும் பணியில் 150 போலீசார் மற்றும் வனத்துறையினர், மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இருந்தபோதும் அவர்களுக்கு பிடி கொடுக்காமல் யானை தொடர்ந்து போக்கு காட்டி வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
- பொதுமக்கள் அச்சமடையாமல் யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
- ட்ரோன் மூலம் படம் பிடிக்க முயன்ற ஹரிஹரனை வனத்துறையினர் கைது செய்து ட்ரோனையும் பறிமுதல் செய்தனர்.
உத்தமபாளையம்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை வனப்பகுதியில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி வனப்பகுதியில் கடந்த மாதம் 29-ந் தேதி விட்டனர்.
அங்கிருந்து படிப்படியாக முன்னேறிய அரிசி கொம்பன் தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் நுழைந்தது. ஏகலூத்து ரோடு ஆசாரி மார் வீதிகளில் வலம் வந்த அரிசி கொம்பன் சுருளிப்பட்டி மின் நிலையம் அருகே உள்ள புளியந்தோப்பில் தஞ்சமடைந்தது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்து நந்தகோபாலசாமி நகரை ஒட்டியுள்ள வாழைத்தோப்புக்குள் புகுந்தது.
அங்கு அரிசி கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் திடீரென அங்கிருந்து கிளம்பிய யானை சாமாண்டிபுரம் வழியாக சுருளிப்பட்டி மற்றும் கூத்தநாச்சியம்மன் கோவில் பகுதிக்குள் புகுந்தது.
இன்று காலை வரை அதே இடத்தில் அரிசி கொம்பன் யானை முகாமிட்டுள்ளது. யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் சிக்னலை வைத்து வனத்துறையினர் அதன் இருப்பிடத்தை அறிந்து வந்தனர். ஆனால் வனப்பகுதிக்குள் சிக்னல் கிடைக்காததால் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இந்த யானையை பிடிக்க பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து சுயம்பு, அரிசி ராஜா, உதயன் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. இவை வெவ்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு அரிசி கொம்பனை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் கும்கிகள் முன்பு பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு அதன் முன்பு செல்பி எடுக்க தொடங்கியதால் அதன் இருப்பிடத்தை மாற்றினர்.
தற்போது சுருளிப்பட்டி வனப்பகுதியில் 3 கும்கி யானைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. டாக்டர் பிரகாஷ் தலைமையில் டாக்டர்கள் செல்வம், சந்திரசேகரன், கலைவாணன் ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உள்ளனர்.
மருத்துவ குழுவினர் தெரிவிக்கையில், அரிசி கொம்பன் யானை தற்போது யானை கஜம் பகுதியில் உள்ளது. மயக்க ஊசி செலுத்திய உடன் யானைக்கு கிறுகிறுப்பு ஏற்பட்டு சுமார் 1 மணி நேரம் அங்கும் இங்கும் அலைந்து அதன் பிறகுதான் கீழே விழும். எனவே சமதளத்தில் யானை இருந்தால் தான் மயக்க ஊசி செலுத்த முடியும். மலைப்பாங்கான பகுதியில் மயக்க ஊசி செலுத்தும்போது திடீரென பள்ளத்தில் விழுந்து விடும் அபாயமும் உள்ளது.
அதற்காகத்தான் மயக்க ஊசி செலுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. ஒவ்வொரு டோசும் 5 முதல் 7 மில்லி அளவில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும்.
மயக்க ஊசியின் அளவு குறித்து ஏற்கனவே இதனை பிடித்த கேரள வனத்துறையினரிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டுள்ளது என்றனர்.
கம்பம், சுருளிப்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளில் எந்த நேரமும் அரிசி கொம்பன் யானை மீண்டும் வந்து விடும் என்ற அச்சத்தில் அப்பகுதியில் இன்று 3-வது நாளாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் திராட்சை தோட்டங்கள், ஏலத் தோட்டங்கள், தினசரி கூலி வேலைகளுக்கு செல்லும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனிடையே யானை நடமாட்டம் உள்ள பகுதியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் தெரிவிக்கையில், 35 வயது மதிக்கத்தக்க அரிசி கொம்பன் ஆண் யானை 12 அடி உயரம் கொண்டது. இதன் பிரம்மாண்ட தோற்றம் மற்றும் சத்தம் காரணமாக அருகில் பொதுமக்கள் செல்ல இயலாது. தற்போது அதனை பிடிக்க சிறப்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். மயக்க ஊசி செலுத்தி பிடித்த உடன் பரம்பிக்குளம் பகுதியில் விட திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களாக யானை நகருக்குள் சுற்றி வந்ததால் 3 கிலோ எடை குறைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
பொதுமக்கள் அச்சமடையாமல் யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சவாலான பணி என்ற போதிலும் இதனை சிறப்பு குழுக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றார்.
அரிசி கொம்பன் யானை கம்பம் நகருக்குள் வந்த முதல் நாளே அதனை ட்ரோன் மூலம் படம் பிடிக்க யூடியூப்பர் முயன்றதால் அதன் திசை மாறியது. மின் வாரிய அலுவலகம் அருகே புளியந்தோப்பில் யானை முகாமிட்டு இருந்தபோது சின்னமனூரைச் சேர்ந்த ஹரிஹரன் (23) என்பவர் ட்ரோன் மூலம் படம் பிடித்தார். இதனால் மிரண்டு போன அரிசி கொம்பன் வெவ்வேறு இடங்களுக்கு ஓடத்தொடங்கியது. இதனையடுத்து ட்ரோன் மூலம் படம் பிடிக்க முயன்ற ஹரிஹரனை வனத்துறையினர் கைது செய்து ட்ரோனையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் அரிசி கொம்பன் யானை இருப்பிடம் குறித்து பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெவ்வேறு செய்திகள் பரப்பப்பட்டு வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து பொய்யான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் இரவு நேர காவல் வேலைக்கு சென்று வந்தார்.
- தோட்ட உரிமையாளர் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக மின் வேலி அமைத்திருந்தார். அதில் சிக்கி பலியானது தெரிய வந்தது.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது39). இவர் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் இரவு நேர காவல் வேலைக்கு சென்று வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் போடி மரிமூர் கண்மாய் அருகே உள்ள வாய்க்காலில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது அப்பகுதியில் உள்ள தோட்ட உரிமையாளர் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக மின் வேலி அமைத்திருந்தார். அதில் சிக்கி பாலாஜி பலியானது தெரிய வந்தது.
சம்பவம் குறித்து அறிந்ததும் குரங்கணி போலீசார் விரைந்து வந்து பாலாஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தோட்ட உரிமையாளர் சடையன் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.
- நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
- நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே பாலாஜி நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது52). கூலித்தொழிலாளி. நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே ஆண்டி பட்டி ராஜேந்திரா நகரை சேர்ந்தவர் ராஜதுரை (வயது26). இவர் மயிலாடுதுறையில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். ஊர் திரும்பிய ராஜதுரை கடமலைக்குண்டு பகுதிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் சங்கர மூர்த்திபட்டியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (50). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தன்று மாத்திரை வாங்க சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்புலட்சு மியை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி அசந்தா (33). இவர்களுக்கு சத்திய வர்ஷினி என்ற மகளும் கிஷோர்பாலா, கிரிதர்பாலா ஆகிய 2 மகன்களும் உள்ள னர். சம்பவத்தன்று பால முருகன் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது கிரிதர் பாலா மட்டும் வீட்டில் இருந்து ள்ளார். அசந்தா மற்றும் 2 குழந்தைகள் மாயமாகி இருந்தனர். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
- மிரண்டு ஓடி வந்த அரிசி கொம்பன் யானை ஒரு பகுதியில் சிறிது நேரம் நின்றது.
- மூதாட்டி ஒருவர் சாலை ஓரத்தில் நின்றிருந்தார்.
அரிசி கொம்பன் யானை கம்பம் நகரில் புகுந்ததைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இது குறித்த காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மிரண்டு ஓடி வந்த அரிசி கொம்பன் யானை ஒரு பகுதியில் சிறிது நேரம் நின்றது. பின்னர் மீண்டும் வந்த வழியே திரும்பி ஓடியது. அப்போது அங்கு மூதாட்டி ஒருவர் சாலை ஓரத்தில் நின்றிருந்தார். அரிசி கொம்பன் யானை அவரை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து சென்ற காட்சி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
- டிரோன் சத்தத்தால் மிரண்ட அரிசி கொம்பன் யானை அங்கிருந்து வெளியேறி சாலையில் ஓடியது.
- கம்பம் போலீசார் ஹரீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கம்பம் மின் வாரிய அலுவலகம் அருகே புளியந்தோப்பில் அரிசி கொம்பன் யானை முகாமிட்டு இருந்தது. அப்போது சின்னமனூரைச் சேர்ந்த ஹரீஷ் என்பவர் டிரோன் கேமராவை பறக்க விட்டு யானையை படம் எடுக்க முயன்றார்.
டிரோன் சத்தத்தால் மிரண்ட அரிசி கொம்பன் யானை அங்கிருந்து வெளியேறி சாலையில் ஓடியது. இதனால் அப்பகுதி பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து தெரித்து ஓடினர். எனவே இதுகுறித்து கம்பம் போலீசார் ஹரீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- தொடர்ந்து மேகமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
- மேகமலை வனத்துறையினர் அருவியல் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருசநாடு:
கோம்பைத்தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. மேகமலை வனப்பகுதியில் போதிய அளவில் மழை இல்லாத காரணத்தால் அருவியில் நீர்வரத்து மிக குறைந்து காணப்பட்டது.
ஆனால் விடுமுறை நாட்கள் என்பதால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேகமலை வனப்பகுதியில் மழை பெய்தது.
அதன் காரணமாக மாலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மேகமலை வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் மேகமலை வனத்துறையினர் அருவியல் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே வறண்டு விடும் நிலையில் காண ப்பட்ட அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடை ந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு குறைந்த பின்பு சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






