என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உத்தமபாளையம் அருகே முறைகேடு புகாரில் ரேசன் கடை ஊழியர் சஸ்பெண்டு
    X

    கோப்பு படம்.

    உத்தமபாளையம் அருகே முறைகேடு புகாரில் ரேசன் கடை ஊழியர் சஸ்பெண்டு

    • எரணம்பட்டி ரேசன் கடையில் போடி பொது வினியோக திட்ட சார்பதிவாளர் மற்றும் சங்கத்தின் கள அலுவலர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பொருட்களின் இருப்பு குறைவு உள்ளிட்ட முறைகேடுகள் கண்டறி யப்பட்டன.

    தேனி:

    தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை ப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது, உத்தமபாளையம் அருகே ராமகிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் இயங்கும் எரணம்பட்டி ரேசன் கடையில் போடி பொது வினியோக திட்ட சார்பதிவாளர் முனிராஜா மற்றும் சங்கத்தின் கள அலுவலர் பிரித்விராஜ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பொருட்களின் இருப்பு குறைவு உள்ளிட்ட முறைகேடுகள் கண்டறி யப்பட்டன. இதனை தொடர்ந்து ரேசன்கடை விற்பனையாளர் ஈஸ்வரன் சஸ்பெண்டு செய்யப்பட்டு அவர் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. மேலும் உத்தம பாளையம் குடிமை ப்பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் முறை கேடுகளில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×