search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "malpractice complaint"

    • ரெட்டியார்சத்திரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை மேற்கொண்டதில் பல்வேறு குறைபாடுகளும், அரசுக்கு நிதியிழப்பு ஏற்பட்டது கண்டறிய ப்பட்டது.
    • தருமத்துப்பட்டி ஊராட்சி தலைவர் மருதமுத்து, துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊராட்சி செயலாளர் மீது தக்க நடவடிக்ைக எடுக்குமாறு ரெட்டி யார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்திருந்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட தருமத்துப்பட்டி ஊராட்சி நிதியில் 1.4.2020 முதல் 30.10.2021 வரை கணக்குகளை ரெட்டியார்சத்திரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை மேற்கொண்டதில் பல்வேறு குறைபாடுகளும், அரசுக்கு நிதியிழப்பு ஏற்பட்டது கண்டறிய ப்பட்டது.

    இதுகுறித்து தருமத்துப்பட்டி ஊராட்சி தலைவர் மருதமுத்து, துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊராட்சி செயலாளர் மீது தக்க நடவடிக்ைக எடுக்குமாறு ரெட்டி யார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்திருந்தார்.

    ஆனால் இதற்கு உரிய விளக்கம் அளிக்காமல் தருமத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஊராட்சி நிதியில் கடும் குறைபாடுகள் மற்றும் நிதியிழப்புகள் கண்டறியப்பட்ட காரணத்தால் 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி மாவட்ட கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார த்தின்கீழ் தருமத்துப்பட்டி ஊராட்சியில் அனைத்து கணக்கும் பி.எப்.எம்.எஸ்.களில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரெட்டி யார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், 2-ம் நபர் கையெழுத்திடும் அதிகாரத்தை தருமத்து ப்பட்டி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவல ருக்கும் தற்காலிகமாக மாற்றம் செய்து ஆணையிட ப்பட்டது. இதற்கான உத்தரவை கலெக்டர் பூங்கொடி தெரிவித்து ள்ளார்.

    • எரணம்பட்டி ரேசன் கடையில் போடி பொது வினியோக திட்ட சார்பதிவாளர் மற்றும் சங்கத்தின் கள அலுவலர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • பொருட்களின் இருப்பு குறைவு உள்ளிட்ட முறைகேடுகள் கண்டறி யப்பட்டன.

    தேனி:

    தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை ப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது, உத்தமபாளையம் அருகே ராமகிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் இயங்கும் எரணம்பட்டி ரேசன் கடையில் போடி பொது வினியோக திட்ட சார்பதிவாளர் முனிராஜா மற்றும் சங்கத்தின் கள அலுவலர் பிரித்விராஜ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பொருட்களின் இருப்பு குறைவு உள்ளிட்ட முறைகேடுகள் கண்டறி யப்பட்டன. இதனை தொடர்ந்து ரேசன்கடை விற்பனையாளர் ஈஸ்வரன் சஸ்பெண்டு செய்யப்பட்டு அவர் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. மேலும் உத்தம பாளையம் குடிமை ப்பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் முறை கேடுகளில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×