என் மலர்tooltip icon

    சிவகங்கை

    இளையான்குடி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள சங்கையாபுரம் கிராமத்தை சேர்ந்த ராமநாதன் மகன் சங்கர் (வயது26).பி.ஏ. பட்டதாரியான இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். சிறுவயது முதலே வயிற்று வலி இருந்துள்ளது. பெற்றோர்கள் தீவிர மருத்துவ சிகிச்சைக்குபின் சரி செய்து விடலாம் என ஆறுதல் கூறி உள்ளனர். இந்தநிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 84 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 926 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 136 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
    வெளிநாட்டு பறவைகள் சீசன் முடிந்தும் அங்கிருந்து செல்லாமல் தங்கியிருப்பது சுற்றுலா பயணிகள் மற்றும் கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பத்தூர்:


    திருப்பத்தூர்- மதுரை சாலையில் வேட்டங்குடி உள்ளது. இங்குள்ள கொள்ளுக்குடிப்பட்டி கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வரும். அந்த பறவைகள் இங்கு தங்கியிருந்து குஞ்சுகள் பொரித்து குஞ்சுகளை அழைத்துக் கொண்டு மீண்டும் தங்கள் இருப்பிடத்துக்கு சென்று விடும். இதனால் இந்த பகுதி பறவைகள் சரணாலயமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    மேலும் வனத்துறை சார்பில் இங்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இங்கு தனியாக அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இலங்கை, பர்மா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான பறவைகள் வருவது வழக்கம். பொதுவாக, இந்த பகுதியில் பெய்யும் பருவ மழையை பொறுத்து தான் இந்த பறவைகள் வந்து செல்லும். கடந்த காலங்களில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்படாததால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்க வில்லை.

    தேங்கும் குறைந்த அளவு தண்ணீரும் 2 அல்லது 3 மாதங்களில் வற்றிவிடும். அந்த காலக்கட்டத்தில் மட்டும் இந்த பறவைகள் இங்கு தங்கியிருக்கும் நிலை இருந்து வந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த கண்மாய் தூர்வாரப்பட்டதால் போதுமான அளவு இந்த கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் பெய்த மழையாலும், தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதாலும் கண்மாயில் தண்ணீர் நன்றாக தேங்கியுள்ளது. இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இனப்பெருக்கத்திற்காக இங்கு வந்த சாம்பல் நிற நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், பாம்பு தாரா, கரண்டி நத்தை, முக்குளிப்பான் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் இங்குள்ள மரங்களில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து பாதுகாத்து வருகிறது.

    தற்போது அந்த குஞ்சுகள் பறக்கும் நிலைக்கு வந்துள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் சீசன் நிறைவு பெற்ற பின்னரும் கூட இங்கு தண்ணீர் வற்றாமல் தேங்கியுள்ளதால் இந்த பறவைகள் இங்கிருந்து செல்லாமல் இங்கேயே தங்கியுள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தற்போது 200-க்கும் மேற்பட்ட பறவைகள் தங்களது குஞ்சுகளுடன் இங்கு தங்கியுள்ளன.

    சீசன் முடிந்த நிலையிலும் 2-வது கட்ட இனப்பெருக்கத்திற்காக தங்கியிருக்கும் இந்த வெளிநாட்டு பறவைகளை திருப்பத்தூர் சரக வனத்துறை அலுவலர் மதிவாணன் தலைமையில் வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

    இந்த பறவைகளுக்கு உணவாக பயன்படும் மீன்களை ஏற்கனவே வாங்கி இந்த கண்மாயில் இனப்பெருக்கத்திற்காக விட்டுள்ளதால் தற்போது மீன்களை உணவாக இந்த பறவைகள் உட்கொண்டு வருகிறது.

    மேலும் அவ்வப்போது பறவைகளை தொந்தரவு செய்யும் வகையில் குரங்குகள் கூட்டம் ஏதும் வருகிறதா என்பதையும் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
    வஞ்சினிப்பட்டி அருகே நீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகேயுள்ள வஞ்சினிப்பட்டியைச் சேர்ந்தவர் ராம்கி (வயது 28). இவர் தனது மைத்துனரை மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூரில் விட்டுவிட்டு வஞ்சினிப்பட்டிக்குத் திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிளோடு தடுமாறி விழுந்துள்ளார். அந்த பள்ளத்தில் தண்ணீர் கிடந்ததால் அதில் மூழ்கி இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கண்டவராயன்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்தவருக்கு விமலா என்ற மனைவியும் 3 வயது சிறுமியும், 4 மாத பெண் குழந்தையும் உள்ளது.
    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தொற்று கடந்த 2 நாட்களாக இரண்டு இலக்கமாக குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 961 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர் நேற்று ஒரே நாளில் 143 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதற்கிடையே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 60 வயதான முதியவர் கொரோனாவுக்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 67 வயதான முதியவர், 47 வயதான ஆண் ஒருவரும், 50 வயதான பெண் ஒருவரும் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் 4 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
    நாடு முழுவதும் பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் ராஜா சென்று மதுக்கடைகளை மூட சொல்லி பிரசாரம் செய்ய வேண்டும்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த பின் முன்னாள் மத்திய மந்திரி  ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    துரதிர்ஷ்டவசமாக நாடு முழுவதும் மது அருந்தும் பழக்கம் பரவி விட்டது. தமிழ்நாடு அதற்கு விலக்கல்ல.  நான் மது அருந்துவது கிடையாது. அதனால் மது அருந்துபவர்களை தீயவர்கள் என்றும் சொல்ல முடியாது.

     

    ராமதாஸ்

    மதுக்கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகிவிடும். இதனை யாரும் மறுக்க முடியாது. கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டுமென்றால் மதுக் கடைகளை திறந்துதான் ஆக வேண்டும்.

    இதையும் படியுங்கள்.... மதுக்கடைகள் திறப்பை கண்டித்து நாளை மறுநாள் போராட்டம்- ராமதாஸ் அறிவிப்பு

    நாடு முழுவதும் பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் ராஜா சென்று மதுக்கடைகளை மூட சொல்லி பிரசாரம் செய்ய வேண்டும். அதன் பின்பு தமிழகத்தில் மதுக் கடைகளை மூட சொல்லலாம்.

    கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்திற்கு காரணமே பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்தான். பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் கட்டுமான பொருட்களின் விலையும் குறைந்து விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கீழடியில் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளும்போது பழங்கால மக்கள் பயன்படுத்திய பாசி மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    திருப்புவனம்:

    தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறை சாற்றும் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதேபோல் கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் நடக்கிறது.

    அகழ்வாராய்ச்சியின்போது கீழடியில் ஏற்கனவே தாயக்கட்டை, பாசி மணிகள், சேதமுற்ற நிலையில் சிறிய, பெரிய பானைகள், மற்றும் காதில் அணியும் தங்க ஆபரணம் இதேபோல் கொந்தகையில் முதுமக்கள் தாழி, மனித மண்டை ஓடு, மற்றும் பல்வேறு எலும்புகள் பொருட்கள் கிடைத்துள்ளன.

    இந்த நிலையில் நேற்று கீழடியில் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளும்போது பழங்கால மக்கள் பயன்படுத்திய பாசி மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளும்போது இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்கும் என தெரிய வருகிறது.
    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 135 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 1176 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 345 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
    டிராக்டரில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    சாக்கோட்டை போலீசார் மித்திராவயல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே டிராக்டரில் ஆற்று மணலை 2 பேர் கடத்தி செல்வது தெரியவந்தது. உடனடியாக அவர்களை வழிமறித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவர்கள் பாப்பாகுடியைச் சேர்ந்த வின்சென்ட் (வயது 38), பாஸ்கர் (36) என்றும் அவர்கள் தேனாற்று பகுதியிலிருந்து 2 யூனிட் அளவில் மணலை கடத்தி வருவது தெரிய வந்தது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். ஆற்று மணலுடன் டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதிய விபத்தில் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் ராஜா (வயது 32).

    இன்று காலை இவர் குன்றக்குடியில் உள்ள வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தார். ஆவுடைபொய்கை என்ற இடத்தில் திருச்சி - ராமேசுவரம் பைபாஸ் ரோட்டை ராஜா கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக புதுக்கோட்டையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் இறந்த போலீஸ்காரர் ராஜாவுக்கு திருமணமாகி பிரியதர்சினி என்ற மனைவியும், 1½ வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

    உலகையே கீழடி வியப்பில் ஆழ்த்திவிட்டது என அங்கு நடைபெறும் 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை பார்வையிட்ட பின்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
    சிவகங்கை:

    பண்டைய காலம் தொட்டே தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை கீழடி, ஆதிச்சநல்லூர் பகுதிகளில் நடந்த அகழாய்வு தெளிவுப்படுத்துகின்றன.

    சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொல்லியல்துறை மூலம் நடைபெற்று வருகிறது. கொரோனா 2-வது அலை பரவலால் சில வாரங்கள் நிறுத்தப்பட்ட அகழாய்வு, கடந்த 8-ந் தேதி முதல் மீண்டும் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர். அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டனர்.

    பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

    வைகை நதி நாகரிகம் தமிழ் சமுதாயத்தின் தாய்மடி ஆகும். வைகை சமவெளியான கீழடியில் கண்டறியப்பட்ட பண்டைய கால மக்களின் வரலாற்று சின்னங்கள் உலகையே வியப்பில் ஆழ்த்திவிட்டது.

    அந்த சான்றுகள் தமிழனை தலை நிமிர வைத்துள்ளன. 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் நாகரிகத்தை அறியும் வண்ணம் எழுத்து வடிவிலான சுவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

    கீழடியில் தற்போது நடைபெறும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தங்கத்தினாலான அரிய வகை தண்டட்டி, குறுவாள் மற்றும் 13 வகை எழுத்துகள் அடங்கிய மண்பானையிலான சுவடிகள், புதிய கற்கால கருவிகள் என பல்வேறு வகையான பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 700-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.

    இதுபோல் கீழடியை சுற்றி கொந்தகை, அகரம், மணலூர் போன்ற பகுதிகளில் தொல்லியல் துறையின் மூலம் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பழமைவாய்ந்த சங்ககால பொருட்கள் கிடைத்துள்ளன.

    இந்த அரியவகை பொருட்களை தமிழறிஞர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவியர்கள் என அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
    காங்கிரஸ் ஆட்சியில் 27 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு மேலே உயர்த்தப்பட்டனர். உலக வங்கியும், ஐ.நா.வும் தனது அறிக்கையில் இதனை சொல்லி இருக்கிறது.
    காரைக்குடி :

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வயிற்றில் அடிப்பது போலாகும். இதனை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கொரோனா காலத்தில் மத்திய அரசின் அலட்சியத்தால் பண பரிமாற்றம் செய்யாததால் வருமானம் இழப்பு, வேலை இழப்பு, வேலை குறைப்பு மற்றும், சுய வேலைவாய்ப்புகள் அறவே நின்று போனதாலும், வர்த்தக நிறுவனங்கள் அடைப்பாலும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    பிரதமர் மோடி

    நடுத்தர வர்க்கத்தில் மேலடுக்கு, கீழடுக்கு என இரண்டு உண்டு. நான் கீழ் அடுக்கில் உள்ள 404 பேரை ஆய்வு செய்து ஆய்வின் அறிக்கையினை ஊடகங்களுக்கும் தந்திருக்கிறேன். கீழடுக்கு நடுத்தர வர்க்க மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர்.

    காங்கிரஸ் ஆட்சியில் 27 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு மேலே உயர்த்தப்பட்டனர். உலக வங்கியும், ஐ.நா.வும் தனது அறிக்கையில் இதனை சொல்லி இருக்கிறது. இன்றைய ஆய்வில் கூறுவது 21 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுவிட்டனர். இதற்கு காரணம் பிரதமர் மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×