search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    இளையான்குடி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

    இளையான்குடி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இளையான்குடி:

    இளையான்குடி அருகே உள்ள சங்கையாபுரம் கிராமத்தை சேர்ந்த ராமநாதன் மகன் சங்கர் (வயது26).பி.ஏ. பட்டதாரியான இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். சிறுவயது முதலே வயிற்று வலி இருந்துள்ளது. பெற்றோர்கள் தீவிர மருத்துவ சிகிச்சைக்குபின் சரி செய்து விடலாம் என ஆறுதல் கூறி உள்ளனர். இந்தநிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×