என் மலர்
சிவகங்கை
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 13 மற்றும் 12 வயது நிரம்பிய சகோதரிகள் இருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார்கள் வந்தன. அவர்களின் தாத்தாவே சிலருடன் சேர்ந்து இந்த கொடுமையை செய்திருப்பதாக புகார் வந்தது.
இதன் அடிப்படையில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அது பற்றிய விவரம் வருமாறு:-
கணவரை விபத்தில் பறிகொடுத்த பெண் 2 குழந்தைகளுடன் தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து சென்று விட்டார்.
இதனால் சகோதரிகளான 2 சிறுமிகளும் தாத்தா வீட்டிலேயே தங்கி இருந்தனர். அப்போது தான் அவர்கள் தாத்தாவால் பாலியல் கொடுமைக்கு ஆளாகி உள்ளனர்.
அந்த பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ரவிக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் சுதேஷ், நவீன் ஆகியோரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த செயலுக்கு தொழிலதிபர் வீட்டில் சமையல் வேலை செய்து வந்த தெரசாள் புனிதா (வயது 22) என்பவரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. ரவிக்குமாரும், சிறுமிகளின் தாத்தாவும் சேர்ந்து 2 சிறுமிகளுக்கும் மது கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணையில் வெளியான தகவலின் அடிப்படையில் சிறுமிகளின் தாத்தா, தெரசாள் புனிதா, நவீன், மற்றும் சுதேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொழிலதிபர் ரவிக்குமார் தலைமறைவாகிவிட்டார். அவரை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.
கைதான சிறுமிகளின் தாத்தா முதுகுளத்தூர் சிறையிலும், தெரசாள் புனிதா திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டார்.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீள வேண்டும் என்றால் தடுப்பூசி ஒன்றே தீர்வு என அரசு தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது.
ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டினார்கள். கொரோனா 2-வது அலை தீவிரத்தால் தடுப்பூசி போட்டு கொள்வது தான் உயிருக்கு பாதுகாப்பு என அறிந்ததும் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.
காரைக்குடி செஞ்சை பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. தடுப்பூசி போட்டு கொள்ள ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். ஓட்டு போடுவதற்காக காத்து நின்ற போல அணிவகுத்து நின்றனர்.
தடுப்பூசி போட்டு கொள்ள வந்த அனைவரும் முககவசம் அணிந்திருந்த போதிலும் சமூக இடைவெளியை பின்பற்றாதது வேதனைக்குரியது. இருப்பினும் தங்கள் ஆதார் கார்டை காண்பித்து ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு கொண்டனர். நேற்று ஒரே நாளில் 1,200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது,
தற்போது கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதால் கூட்டம் அலைமோதுகிறது. எனினும் சமூக இடைவெளியை பின்பற்றாததால் மேலும் கொரோனா ெதாற்று பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இது போன்ற சிறப்பு முகாம்கள் நடத்தும் போது தன்னார்வலர்கள் மூலம் தடுப்பூசி போட வரும் ஆண்கள், பெண்கள் சமூக இடைவெளியுடன் நிற்க ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருந்தால் தான் பெருந்தொற்றில் இருந்து மீள முடியும் என்றனர்.
திருப்புவனம் வர்த்தகர்கள் சங்கமும், திருப்புவனம் வட்டார உணவு பாதுகாப்பு துறையும் இணைந்து தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடத்திய சிறப்பு முகாமில் 387 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு தலைமையில் செவிலியர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். முகாமில் திருப்புவனம் வர்த்தகர்கள் சங்க தலைவர் சாதிக் பாட்ஷா, செயலாளர் முனியாண்டி, பொருளாளர் சிராஜுதீன், திருப்புவனம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 102 மாற்றுதிறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமில் ஒன்றிய சேர்மன் முனியாண்டி, வட்டார வளர்ச்சி ஆணையாளர் ஸ்ரீதர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணியை மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது .
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 820 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 165 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.






