என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • மானாமதுரை கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.
    • இங்கு சித்திரை, ஆடி மற்றும் நவராத்திரி விழாக்கள் நடைபெறும்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றுகரையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி-சோமநாதர் கோவில் உள்ளது. இங்கு சித்திரை, ஆடி மற்றும் நவராத்திரி விழாக்கள் நடைபெறும்.

    சாரதா நவராத்திரி விழா நேற்று இரவு தொடங்கியது. வருகிற 5-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது. முதல் நாளில் ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.அம்மன் சன்னதியில் அமைக்கப்பட்ட கொலு பொம்மைகளை ஏராள மான பக்தர்கள் பார்வையிட்டனர்.

    மானாமதுரை ஆதனூர் சாலையில் உள்ள நலம்தரும் சீரடிபாபா கோவிலில் நவராத்திரி உற்சவவிழா தொடங்கியது. வருகிற 5-ந்தேதி கலசபூஜை, வித்யாரம்பம், அன்னதானம் நடைபெறுகிறது. மெயின் பஜாரில் உள்ள தியாகவிநோதப் பெருமாள் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாதொடங்கியது.

    இதில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. வருகிற 5-ந்தேதி புதிய குதிரை வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
    • இதில் செயல் அலுவலர், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

    பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராயணன் தலைமை தாங்கினார். அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டு நிறுவனங்கள், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் தேர்வு நிலை பேரூராட்சி தெருக்களின் நிலவரம் குறித்தும் கண்மாய் மற்றும் வர்த்தக பகுதிகளின் நிலவரம் குறித்தும் குறும்பட காட்சி காண்பிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து இப்பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் குளங்கள் தூர்வாருதல், வரத்து கால்வாய்கள் பராமரிப்பு செய்தல், நகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளான சாலை, குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல், நகரின் தூய்மை குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல், நகரின் அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகளை நடுதல், தெருக்களில் சுற்றிதிரியும் நாய், மாடு, குரங்கு, பன்றி மற்றும் ஏனைய பிராணி களை கட்டுப்படுத்துதல், மயானங்கள் மற்றும் மக்கள் பயன்பாடு இடங்களை பராமரிப்பு பணி மேற்கொள்ளுதல், நாள்தோறும் விநியோகிக்கப்படும் தண்ணீரை மின் மோட்டார் கொண்டு உறிஞ்சப்படுவதை கட்டுப்படுத்துதல், மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை கொண்டு வருதல், பாகுபாடின்றி நகரில் அனைத்து பகுதிகளிலும் செய்யப்பட்டுள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றுதல் போன்ற பல்வேறு நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்வது குறித்தும், அதனை உடனடியாக செயல்படுத்துவது குறித்தும் அனைத்து தரப்பினரிடமும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கேட்டு அறியப்ப ட்டது.

    இதில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், எழுத்தர் ரேணுகாதேவி மற்றும் வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள், அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய தலைமை போலீஸ்காரர் சசிகுமார் பாபு ரோந்து சென்றுள்ளார்.
    • இலுப்பக்குடி-காரைக்குடி இடையே உள்ள அரியக்குடி ரெயில்வே கேட் பகுதியில் ஒரு வாலிபர் தனியாக அமர்ந்திருந்தார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த மாத்தூரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மகள் சினேகா (வயது 22). இவர் காரைக்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு கணிதம் படித்து வந்தார்.

    இந்த நிலையில் சினேகாவும், இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி கண்ணன் (28) என்பவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி காதலித்து வந்தனர். இதை தொடர்ந்து கண்ணன், சினேகா வீட்டிற்கு சென்று அவரை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார்.

    அப்போது ஏற்பட்ட தகராறில் கண்ணன் சினேகாவின் தாத்தாவை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சினேகா-கண்ணன் இடையே இருந்த காதல் முறிந்தது.

    அதன் பின்னர் கண்ணன் சினேகாவிடம் கொடுத்து வைத்திருந்த பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை தரும்படி கேட்டுள்ளார். அதை சினேகா கொடுக்க சென்றார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் இரும்பு கம்பியால் சினேகாவை அடித்து கொலை செய்து விட்டார். இது பற்றி சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய தலைமை போலீஸ்காரர் சசிகுமார் பாபு ரோந்து சென்றுள்ளார். அப்போது இலுப்பக்குடி-காரைக்குடி இடையே உள்ள அரியக்குடி ரெயில்வே கேட் பகுதியில் ஒரு வாலிபர் தனியாக அமர்ந்திருந்தார்.

    தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்திருந்த அந்த வாலிபர் மதுபோதையில் இருந்தார். அவரிடம் போலீஸ்காரர் சசிகுமார் பாபு பேசியபோது, கல்லூரி மாணவி சினேகாவை கொலை செய்த கண்ணன் அவர்தான் என்பது தெரியவந்தது.

    அப்போது கண்ணன் தற்கொலை செய்வதற்காக எலி பேஸ்ட் வைத்திருந்தார். அதனை போலீஸ்காரர் கைப்பற்றி அவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

    அங்கு போலீசாரிடம் கண்ணனை ஒப்படைத்தார். இதையடுத்து அவரிடம் கல்லூரி மாணவியை கொன்றதற்கான காரணம் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். தனது காதலை புறக்கணித்ததால் சினேகாவை கொன்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளி கண்ணனை தனிநபராக பிடித்து வந்த போலீஸ்காரர் சசிகுமார் பாபுவை துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் பாராட்டினர்.

    • கல்லூரி மாணவியை வாலிபர் இரும்பு கம்பியால் அடித்து விட்டு தப்பி சென்றதை கண்ட பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சினேகாவின் காதலன் கண்ணனை தேடி வருகின்றனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த மாத்தூரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மகள் சினேகா (வயது 22). இவர் காரைக்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு கணிதம் படித்து வந்தார். அவருக்கும் இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    கண்ணன் கட்டிட வேலை செய்து வந்தார். இவர்கள் நட்பு காதலாக மலர்ந்தது. இதை தொடர்ந்து கண்ணன், சினேகா வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். அப்போது சினேகாவின் பெற்றோருக்கும், கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    கண்ணன் சினேகாவின் தாத்தாவை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சினேகாவின் பெற்றோர் சாக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் கண்ணனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தின் பின்னர் சினேகாவுக்கும் கண்ணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் கண்ணன் சினேகாவிடம் கொடுத்து வைத்திருந்த தனது பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை தருமாறு செல்போனில் பேசி கேட்டுள்ளார்.

    இதை தொடர்ந்து சினேகா பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு கண்ணனை சந்திக்க சென்றார். அவர்கள் மாத்தூர் ரேசன் கடை அருகில் சந்தித்து கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து சினேகா தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சினேகா ரத்த வௌ்ளத்தில் மயங்கி விழுந்தார்.

    இதனால் அச்சமடைந்த கண்ணன் அங்கிருந்த தனது இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டார். கல்லூரி மாணவியை வாலிபர் இரும்பு கம்பியால் அடித்து விட்டு தப்பி சென்றதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சினேகா சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இது பற்றி சாக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சினேகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சினேகாவின் காதலன் கண்ணனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பாண்டியர் 12-வது வார்டில் குப்பை வளமீட்பு மைய கட்டிட திறப்பு விழா நடந்தது.
    • நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட மருது பாண்டியர் 12-வது வார்டில் மத்திய மானிய நிதிகுழு திட்டத்தில் ரூ.33 லட்சம் மதிப்பிட்டில் குப்பை வள மீட்பு மைய புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.

    இதில் நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேலிங் எந்திரத்தின் மூலம் மக்காத நெகிழித்தாள்களை சுருக்கம் செய்து அரியலூர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பும் பணியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், பொறியாளர் பாண்டீஸ்வரி, நகர அமைப்பு அலுவலர் திலகவதி, துப்புரவு ஆய்வாளர் மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் பிரேம்குமார், ஆறு சரவணன், ராம்தாஸ், பொதுப்பணி மேற்பார்வையாளர் உலகநாதன், ஒப்பந்ததாரர் அனுராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், வரத்துக்கால்வாய்களை சீரமைக்க கோரி அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
    • நீர்வளத்துறையின் சார்பில் கலெக்டர், துறை அலுவலர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கண்மாய்கள் மற்றும் வரத்து வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக நீர்வளத்துறையின் சார்பில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி துறை அலுவலர்களுடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட நெல் முடிக்கரை குரூப் திருப்புவனம் கண்மாயில் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த கண்மாயில் 4 மடைகள் உள்ளன. இதில் 4-வது மடையிலிருந்து கலியாந்தூர் பாசனப்பகுதி ஒரு பிரிவாகவும், நயினார் பேட்டை மற்றும் 3 வாய்க்கால்கள் ஒரு பிரிவாகவும், 4-வது மடையின் பின்புற தொட்டியில் இருந்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது.

    இதில் நயினார்பேட்டை மற்றும் 3 வாய்க்கால்கள் (கரிசல் வாய்க்கால், மேட்டு வாய்க்கால் மற்றும் மாவடி பச்சேரி வாய்க்கால்) மடையின் 440-வது மீட்டரில் 4 பிரிவாக பிரிந்து செல்கிறது. பாசன நீரை பங்கீடு செய்வதில் நைனார் பேட்டை கிராமத்தினருக்கும், திருப்புவனம் மற்றும் திருப்புவனம் புதூர் கிராமத்தினருக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வந்த நிலையில் நீதிபதியின் அறிவுறுத்தலின்படி சிவகங்கை மாவட்ட கலெக்டர் மற்றும் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தினார்.அதன்பேரில் கலெக்டர் திருப்புவனம் கண்மாய் 4-வது மடையில், நயினார்பேட்டை மற்றும் திருப்புவனம் பாசன விவசாயிகள் முன்னிலையில் கள ஆய்வு செய்தார்.

    மேலும் தட்டான்குளம் படுகை அணைக்கு கீழ் வலது பிரதான கால்வாயில் பழையனூர், பிரமனூர் மற்றும் 19 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த கால்வாயில் வைகை ஆற்றுக்கும் வலது பிரதான கால்வாய்க்கும் இடையில் உள்ள தடுப்புச்சுவர் வைகை ஆற்றில் ஏற்பட்ட ெவள்ளத்தால் சேதம் அடைந்துள்ளதையும், கலெக்டர் ஆய்வு செய்து சேதம் அடைந்த சுவற்றை மழைக்காலம் ஆரம்பிக்கும் முன் விரைந்து சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு, பாசன நீர் வழங்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து, பார்த்திபனூர் மதகணை மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு பாசன வசதி அளிக்கும் இடது பிரதான கால்வாயில் கலெக்டர் ஆய்வு செய்து முட்செடிகள் மற்றும் கருவேலை மரங்களை அகற்றும் பணிகளை, மழைக்காலத்திற்கு முன்பு தொடங்கவும், பருவமழை காலங்களில் பெறப்படும் மழைநீரை முறையாக சேமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வுகளின் போது கீழ்வைகை வடிநில கோட்ட கண்காணிப்புப் பொறியாளர் கிறிஸ்டர் நேசகுமார், நீர்வளத்துறை (சருகனியாறு, வடிநில கோட்டம்) செயற்பொறி யாளர் பாரதிதாசன், உதவிப்பொறியாளர்கள் பூமிநாதன், செந்தில்குமார், முத்துராமலிங்கம், உதவி செயற்பொறியாளார் முத்துப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆ. தெக்கூர்-கீழச்செவல்பட்டியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை மின் செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளர்.

    திருப்பத்தூர்

    திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி அருகே உள்ள ஆ.தெக்கூர் மற்றும் கீழச்வசெவல்பட்டியில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (27-ந் தேதி) நடக்கிறது.

    எனவே காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நெற்குப்பை, எஸ்.எஸ்.கோட்டை, கண்டவராயன்பட்டி, கொன்னத்தான்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூர் முறையூர் இளையாத்தன்குடி, விராமதி, சிறுகூடல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளர்.

    • கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி சித்தர் கோவிலில் அமாவாசை சிறப்பு யாகம் நடந்தது.
    • முன்னோர்கள் தர்ப்பணம் திதி பூஜை இன்று காலை6மணிமுதல் பகல் 12 மணி வரை நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் சூட்டுகோல் மாயாண்டி சுவாமி தவசாலையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு உலகநன்மைக்காக சிறப்பு யாகம் நடந்தது.

    இதில் மருத்துவ குணமிக்க மூலிகைகள், பழங்கள், பட்டுவஸ்திரம் போன்ற பொருட்களை யாகத்தில் இட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. யாகத்தை புதுக்கோட்டை பனைய பட்டி ஞானிபுல்லான் சாதுவழிபாட்டு குழு செழியன் சுவாமி வேதமந்திரங்களை கூறி நடத்தினார்.

    சிவகங்கை, மது ரை, புதுகோட்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு அன்னதானம் நடந்தது. இன்று காலை அமாவாசை சிறப்பு பூஜை மற்றும் சூட்டுகோல் மாயாண்டிசுவாமிக்கு அபிஷேக ஆராதனை- சிறப்பு அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம்சூட்டுகோல் மாயாண்டி சுவாமி வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

    இதேபோல் குறிச்சிகாசி விசுவநாதர் கோவிலில் முன்னோர்கள் தர்ப்பணம் திதி பூஜை இன்று காலை6மணிமுதல் பகல் 12 மணி வரை நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் பூஜை செய்து கங்கை தீர்த்தத்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர்.

    • இளையான்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த் துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெறவுள்ளது.

    வருகிற 28-ந் தேதி (புதன் கிழமை)காலை 10 மணியளவில் சிவகங்கை கோட்டாட்சியர் தலைமையில் இளை யான்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 'மாற்றுத்தி றனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்" நடைபெறும்.

    இதில் மாற்றுத்திற னாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், UDID பதிவு செய்தல், ஆதார் அட்டை பதிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, பிற துறைகளின் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான கோரிக்கை மனுக்கள் பெறுதல், உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல், வங்கி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பராமரிப்பு உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், வருவாய்துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், 18 வயது குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த் துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும்.

    மேற்குறிப்பிட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -4, குடும்ப அட்டை நகல் (அல்லது) ஆதார் அட்டை நகல் (அல்லது) இருப்பிடச்சான்று ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரைக்குடியில் செருப்பு குடோனில் தீ விபத்தில் ரூ. ரூ.பல லட்சம் செருப்புகள் எரிந்து நாசகியது.
    • 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செகண்ட் பீட் அருகே உள்ள டாக்சி ஸ்டாண்ட் பகுதியில் தனியார் செருப்பு குடோன் உள்ளது.

    பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த குடோனில் மின் கசிவு காரணமாக இன்று காலை தீப்பற்றி எரிந்தது. குடோனில் இருந்த ரூ. பல லட்சம் மதிப்பிலான செருப்புகள் எரிந்து சேதமானது.

    காரைக்குடி தீயணைப்பு நிலையம் ஊருக்கு வெளியே 3 கிலோமீட்டர் தூரம் தள்ளி இருந்ததால் தீயை அணைக்க வருவதற்கு தாமதம் ஆனது.அதன் பின்பு காரைக்குடி, தேவகோட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    • அரசியலில் ஆன்மீகத்தையும், ஆன்மீகத்தில் அரசியலையும் கலக்கக்கூடாது என கவிஞர் வைரமுத்து பேட்டியளித்தார்.
    • இதை சம்பந்தப்பட்ட தலைவர்கள் உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நலம்.

    சிவகங்கை

    சிவகங்கையில் கவிஞர் இலக்கியா நடராஜனின் "பெயர் தெரியாத பறவை" என்ற கவிதை நூல் மற்றும் "மயானக்கரை ஜன்னங்கள்" சிறுகதை நூல் ஆகியவை வெளியிட்டு விழா நடை பெற்றது.

    இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், கவிஞர் வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., நக்கீரன் கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் கவிஞர் வைர முத்து சிறப்புரையாற்றினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதா வது:-

    அரசியல் வழியே ஆன்மீகமும், ஆன்மீகத்தின் வழியே அரசியலும் எல்லா நூற்றாண்டுகளிலும் எல்லா தேசிய இனங்களிலும், எல்லா நாடுகளிலும் நிகழ்ந்து வந்திருக்கின்றன.

    பல நேரங்களில் அரசி யலையே ஆன்மீகம் தான் தீர்மானித்தது. இந்த வரலாற்றையும் நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் அரசியலில் குரல்வளையை ஆன்மீகம் பிடிப்பதும், ஆன்மீகத்தின் குரல்வளையை அரசியல் பிடிப்பதும் தகாது என்பது என் எண்ணம். இதை சம்பந்தப்பட்ட தலைவர்கள் உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நலம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பத்தூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
    • சிறுவர் பூங்கா அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் இளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கருகுடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நேசம் ஜோசப், சிறுவர் பூங்கா அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார். சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள சாந்தி மூக்கையா என்பவருக்கு ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளும்படி வருவாய் துறை மூலம் கால அவகாசத்துடன் தகவல் அளிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட நபர் நடவடிக்கையும் எடுக்காததால் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடு மற்றும் ஏனைய பகுதிகளை அகற்றினர். மேலும் சம்பந்தப்பட்ட நபருக்கு தகுதி அடிப்படையில் அதே பகுதியில் வசிப்பதற்கு வேறொரு இடமளிக்க பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமீனாள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம், நாச்சியாபுரம் சார்பு ஆய்வாளர் சுரேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கிளி மற்றும் வருவாய் துறையினர், காவல் துறையினர் உடன் இருந்தனர்.

    ×