search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலை நிராகரித்ததால் கல்லூரி மாணவியை அடித்துக்கொன்ற காதலனுக்கு வலைவீச்சு
    X

    காதலை நிராகரித்ததால் கல்லூரி மாணவியை அடித்துக்கொன்ற காதலனுக்கு வலைவீச்சு

    • கல்லூரி மாணவியை வாலிபர் இரும்பு கம்பியால் அடித்து விட்டு தப்பி சென்றதை கண்ட பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சினேகாவின் காதலன் கண்ணனை தேடி வருகின்றனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த மாத்தூரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மகள் சினேகா (வயது 22). இவர் காரைக்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு கணிதம் படித்து வந்தார். அவருக்கும் இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    கண்ணன் கட்டிட வேலை செய்து வந்தார். இவர்கள் நட்பு காதலாக மலர்ந்தது. இதை தொடர்ந்து கண்ணன், சினேகா வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். அப்போது சினேகாவின் பெற்றோருக்கும், கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    கண்ணன் சினேகாவின் தாத்தாவை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சினேகாவின் பெற்றோர் சாக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் கண்ணனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தின் பின்னர் சினேகாவுக்கும் கண்ணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் கண்ணன் சினேகாவிடம் கொடுத்து வைத்திருந்த தனது பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை தருமாறு செல்போனில் பேசி கேட்டுள்ளார்.

    இதை தொடர்ந்து சினேகா பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு கண்ணனை சந்திக்க சென்றார். அவர்கள் மாத்தூர் ரேசன் கடை அருகில் சந்தித்து கொண்டனர். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து சினேகா தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சினேகா ரத்த வௌ்ளத்தில் மயங்கி விழுந்தார்.

    இதனால் அச்சமடைந்த கண்ணன் அங்கிருந்த தனது இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டார். கல்லூரி மாணவியை வாலிபர் இரும்பு கம்பியால் அடித்து விட்டு தப்பி சென்றதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சினேகா சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இது பற்றி சாக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சினேகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சினேகாவின் காதலன் கண்ணனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×